Sunday, 14 August 2022

ஐயர் ஐயங்கார் ஜாதியினர் பிராமணர்களா? யார் பிராமணர்? பாகம்-1

தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய புரியாத புதிராகவே இந்த கேள்வி உருவாக்கப்பட்டுள்ளது. 

பூனூல் போட்டு கோயிலில் பூசை செய்பவர்கள் எல்லோரும் பிராமணர்கள் என்று நம்பும் அல்லது நம்பவைக்கப்பட்ட ஒரு பெரும் சமூகம் இங்கு இருந்தாலும், தாங்கள் மட்டுமே உண்மையான பிராமணர்கள் என்று கூறுகின்றனர் தமிழகத்தில் உள்ள ஐயர், ஐயங்கார் ஜாதியினர்.

தமிழ் நாட்டில் உள்ள ஐயர், ஐயங்கார் என அழைக்கப்படும் ஜாதிகள் தங்களை பிராமணர்கள் என்றும் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். உண்மையில் அவர்கள் பிராமணர்கள் கிடையாது. 

பண்டைய தமிழ் இலக்கண இலக்கியங்கள் பார்ப்பனர்கள் அந்தணர்கள் என்பவர்களைப்பற்றி பேசுகின்றது. பலரும் பார்ப்பனர்கள் அந்தணர்கள் என்பவர்களே பிராமணர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள் என்று நம்புகிறார்கள். தங்களை பிராமணர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் ஐயர், ஐயங்கார் ஜாதிகளும் அவ்வாறே சித்தரிக்க முனைகின்றார்கள்.

இன்று பிராமணர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஜாதிகள் தாங்கள் வேதகாலத்தில் இருந்து வரும் தொன்மையான மரபை பின்பற்றுபவர்கள் என்றும் பல்லாயிரம் வருட பழமையான பாரம்பரியததிற்கு சொந்தக்காரர்கள் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் அவை எதுவும் உண்மை கிடையாது.

யார் இந்த ஐயர் ஐயங்கார் என அழைக்கப்படும் ஜாதிகள்?

ஐயர் ஜாதி என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஜாதிகள் சங்கர மடத்தைப் பின்பற்றும், கடவுள் மறுப்பு அல்லது ஏகான்ம வாதம் எனப்படும் கோட்பாட்டைப் பின்பற்றும் ஒரு குழுவினராவார்கள். இவர்கள் கடவுள் என்று ஒன்று இருப்பதை மறுக்கும் குழுவினராவார்கள். அவர்கள் ஆன்மா பரமான்மா இரண்டும் ஒன்றே என்றும் தமது ஆன்மாவே பரான்மாவாகவும் உள்ளது என்றும் தம் ஆன்மாவை தவிர வேறு கடவுள் இல்லை என்றும் நம்பும் ஏகான்மவாதிகளாவார்கள். 

இந்த ஏகான்மவாதம் என்பது இந்தியாவில் இருந்து தோற்று அழிந்துபோன சமண மத வாதங்களின் எச்சங்கள் ஆகும். தோற்றுப் போன சமண மதங்களை சேர்ந்தவர்கள் தங்களை சிவபக்தர்களாக வேடந்தரித்துக்கொண்டு, தங்களது நாத்திக கோட்பாடுகளை பின்பற்றும், பரப்பும் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டனர். அவர்களே தங்களைப் பிராமணர்கள் என்றும் ஐயர்கள் என்றும் அடையாளப்படுத்திக் கொள்கின்ற ஜாதியினர் ஆவார்கள். இவர்களின் ஆரம்பம் சமண மதங்கள் தோற்கடிக்கப்பட்ட எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து ஆரம்பமாகிறது. 

சங்கர மடத்தைப் பின்பற்றும், சங்கரர் உருவாக்கிய கோட்பாடுகளை மரபுகளை பின்பற்றுபவர்கள் தங்களை வேதகால பண்பாட்டின் தொடர்ச்சியாக, வேதகால முனிவர்களின் வம்சங்கள் என்றோ கோததிரங்கள் என்றோ சொல்லிக் கொள்வது மிகவும் மோசடியான செயலாகும். எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவான ஒரு மரபை பின்பற்றுபவர்கள் எப்படி வேதகால பண்பாட்டின் தொடர்ச்சியாக இருக்க முடியும்? சங்கர மடத்தைப் பின்பற்றும், ஆன்மா பரமான்மா இரண்டும் ஒன்றே என்று கூறும் கடவுள் மறுப்பு வாதத்தை பின்பற்றும் ஐயர் ஜாதி என்று கூறிக்கொள்ளும் குழுவினர் உண்மையான பிராமணர்கள் கிடையாது. அவர்கள் தமிழின் பண்டைய இலக்கண இலக்கிய நூல்கள் கூறும் பார்ப்பனர்கள் அந்தணர்கள் கிடையாது.

ஐயங்கார் ஜாதி என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் வைணவ சமயவாதிகள் கடவுளை மறுத்து மாயையை கடவுள் என்று நம்பும் நம்பிக்கையாளர்கள். இந்துக்களின் சித்தாந்த தத்துவங்கள் கடவுள் உயிர்கள் மலங்கள் மூன்றும் நிலையானவை என்றும் அவை யாராலும் படைக்கப்படுவதில்லை என்றும் கூறுகின்றன. உயிர்களிடமிருந்து கடவுளை மறைத்து நிற்பவை மலங்கள் என்றும் கூறுகின்றன. இந்த அண்டம் முதலான அனைத்தும் மலங்களில் நின்று தோன்றுகின்றன என்றும், மாயை என்னும் பொருள் மூலமே அண்டத்தின் தோற்றத்திற்கு மூலகாரணம் என்றும், கடவுள் அண்டம் தோன்றுவதற்கான நிமித்த காரணமாகவும் கடவுளின் ஆற்றல் துணைக்காரணமாகவும் உள்ளது என்றும் கூறும்.

ஒரு சிற்பியால் செய்யப்படும் சிலையில் கல் என்பது மூலப்பொருளுளாகவும் முதற் காரணமாகவும் உள்ளது, சிற்பியின் சிலையைச் செய்யும் அறிவை நிமித்த காரணமாகவும், சிலையைச் செய்வதற்கான சிற்பியின் ஆற்றலை சிற்பியின் துணைக் காரணம் என்றும் கொள்ளலாம். சிற்பியின் சிலைசெய்யும் அறிவும், ஆற்றலும் இல்லாமல் ஒரு சிலையினைச் செய்ய முடியாது. அந்த சிற்பியானவன் வேறு நபர்களுக்கு தன் சிற்பம் செய்யும் அறிவைப் புகட்டியும், அவர்களுக்கு ஆகாரங்களை அளித்து அவர்களுக்கு தேவையான ஆற்றலை வழங்கியும் வேண்டுமானால் சிலைகளைக் செய்யலாம்.

கடவுளின் பேரறிவில் இருந்து அறிவையும், பேராற்றலில் இருந்து ஆற்றலையும் பெறும் உயிர்கள் மாயையுடன் சேர்ந்து செயல்களை செய்கின்றன. செயல்கள் அனைத்திற்கும் மாயை முதற்காரணமாகவும், அறிவும் ஆற்றலும் நிமித்த காரணமாகவும் துணைக் காரணமாகவும் உள்ளன. செய்பவையாக உயிர்கள் உள்ளன.

அறிவோ, ஆற்றலோ இல்லாமல் வெறும் மாயையால் எதையுமே செய்ய முடியாது. மாயை என்பது வெறும் பொருள் சார்ந்தது. அறிவும் ஆற்றலும் இல்லாமல் மூலப்பொருளால் எதையுமே செய்ய முடியாது. ஒரு சிற்பம் உருவாக சிற்பியின் அறிவும் ஆற்றலும் எப்படி அவசியமோ அதுபோல இந்த அண்டத்தில் உள்ள அனைத்தினதும் இயக்கத்திற்கு கடவுளின் பேரறிவும் பேராற்றலும் அவசியம். வெறும் கல்லால் எப்படி சிலையாக முடியாதோ அவ்வாறே மாயையால் எதையுமே செய்ய முடியாது.

ஆனால் இந்த வைணவ கோட்பாட்டாளர்களோ மாயையே மூலமாகவும், முதற்காரணமாகவும் இருப்பதால் அதுவே கடவுள் என்று நம்புகிறார்கள். அவர்களில் சிலர் அறிவுடன் கூடிய மாயையே கடவுள் என்று கற்பிதம் செய்கிறார்கள். இங்கு இந்துக்களாகிய நாம் மாயையை மாயவன் என்றும் அதுவே உயிர்களது அறிவை மயக்கி அறிவிற்கு இருளை தருவதால் மால் (கிருஷ்ணன்/கறுப்பன்) என்றும் குறிக்கின்றோம். 

நாம் மாயையை வெறுப்பதில்லை, இந்த மாயை சார்ந்த அதாவது பொருள் சார்ந்த வாழ்வில் மாயையே முதற் காரணமாகவும், மூல காரணமாகவும் இருப்பதால் அதனைப் போற்றிப் புகழ்ந்து நன்றி செலுத்தியே வந்துள்ளோம். ஆனால் பொருள் மீதான மயக்கத்தில் கடவுளை மறுத்து மாயையே போதும் என்றோ மாயையே கடவுள் என்றோ ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் இந்த வைணவ கோட்பாட்டாளர்கள் மாயையோ, சேர்மாயையோ கடவுள் என்று வாதம் செய்து இறைமறுப்பு செய்கின்றனர்.

பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த ராமானுஜர், பதின் மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மத்வர் போன்றோர் உருவாக்கி வளர்த்த மாயாவாத கோட்பாட்டைப் பின்பற்றும் வைணவ ஐயங்கார்கள் ஒருபோதும் வேத பாரம்பரிய பிராமணர்களாக இருக்க முடியாது. வேத நூல்கள் தேவதை என்று சொல்லி பலநூறு பாடல்களில் வரையறுத்த விஷ்ணு போன்ற தேவதைகளை, கடவுள் என்று கூறி வேத மறுப்பை செய்யும் வைணவ ஐயங்கார்கள் வேதபாரம்பரிய பார்ப்பனர்களாகவோ, அந்தணர்களாகவோ இருக்க முடியாது.

எட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சங்கர மடத்தின் அத்வைத கோட்பாட்டாளர்களில் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்களும் இருந்துள்ளார்கள், சேர்ந்துள்ளார்கள். சங்கரரின் ஞானகுருவாக இருந்தவரே ஒரு சணடாளர் என்று சங்கர விஜயம் கூறுகிறது. அதுபோலவே ராமானுஜரும் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்களையும் தனது சீடர்களாக்கினார், மடங்களுக்கு அதிபதியாக நியமித்தார் என்று வைணவ நூலாசிரியர்களே குறிப்பிடுகின்றனர்.

இவை அனைத்தையும் ஒருசேர தொகுத்துப் பார்த்தால் பண்டைய தமிழ் இலக்கண இலக்கியங்கள் குறிப்பிடும் பார்ப்பனர்கள் அந்தணர்கள் என்பவர்கள், எட்டாம் நூற்றாண்டிலும் பதினோராம் நூற்றாண்டிலும் உருவான ஐயர், ஐயங்கார் ஜாதிகளாக இருக்க முடியாது. பண்டைய தமிழ் இலக்கண இலக்கியங்கள் பொது நூற்றாண்டின் முன் தோன்றியவை. அவ்வாறு பழைமையான நூல்கள் பொது நூற்றாண்டின் ஆயிரம் ஆண்டுகள் பிந்தி உண்டான ஜாதிகளைப்பற்றி குறிப்பிட்டிருக்க முடியாது.

இங்கே ஐயர் ஐயங்கார் என கூறும் ஜாதிகள் பின்பற்றும் தத்துவங்கள் சரியா தவறா என்பது கூட முதன்மையான வாதமாக இருக்க முடியாது. வாதம் எதுவென்றால் எட்டாம், பதினோராம் நூற்றாண்டுகளில் உண்டான ஒரு குழுவினர் வேதகாலத்தில் இருந்து தொடரும் முனிவர்களின் வம்சங்களோ கோத்திரங்களோ அல்லர் என்பதும், தமிழின் பண்டைய நூல்கள் கூறும் அந்தணர்கள் பார்ப்பனர்கள் இவர்களில்லை என்பதுமேயாம்.

இவர்கள் சிவனை வணங்குகின்றனர், பெருமாளை வணங்குகின்றனர் அதனால் இவர்களும் இந்துக்கள்தான் என்பதும் ஏற்புடைய வாதமாக இருக்க முடியாது. அப்படி அவர்களை இந்துக்களாக ஏற்றால் பிதா சுதன் பரிசுத்த ஆவி என்று கூறிக்கொண்டு, சிவனை முதற் சித்தர் என்று சித்தரித்து வேறோர் நபரை கடவுள் என்று சித்தரிக்க முனையும் கூட்டத்தையும் இந்துக்களாக ஏற்கும் துர்ப்பாக்கிய நிலை நாளை ஏற்படும்.

மரபு என்பது எம் முன்னோர்கள் எமக்குத் தந்ததை அதன் அடிப்படை மாறாமல் பின்பற்றுவதாகும். வேத நூல்கள் தேவதை என்று விஷ்ணுவை குறிப்பிடுகிறது, சங்க இலக்கியங்கள் திணை நிலைத்து தெய்வங்களில் ஒன்று என்று திருமாலை குறிக்கிறது. மரபு என்பது யாதெனில் எம் வேதநூல்களும் சங்க இலக்கியங்களும் குறிப்பிட்ட வாறே தேவதையாக, திணைத்தெய்வமாக போற்றி வழிபடுபவர்களே உண்மையில் பண்டைய மரபைச் சேர்ந்தவர்கள். அவ்வாறில்லாமல் தேவதையை திணைத்தெய்வத்தை கடவுள் என்று கூறுபவர்கள் மரபில் இருந்து நழுவிய கூட்டத்தினராவர். இவ்வாறு மரபில் இருந்து நீங்கிய குழுவினர் வேதகால முனிவர்களின் வழித்தோன்றலாகவோ கோத்திரங்களாகவோ இருக்க முடியாது. எனவே இன்றைய ஐயர் ஐயங்கார் ஜாதியினர் வேதகாலத்தில் இருந்து தொடரும் பார்ப்பனர்கள் கிடையாது.

அப்படியானால் தமிழ் இலக்கண இலக்கியங்கள் குறிப்பிடும் பார்ப்பனர்கள் அந்தணர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் ஜாதிய குழுமங்களா? அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்களின் இன்றைய நிலை என்ன? அவர்கள் இப்போதும் வாழ்கிறார்களா? 

பிராமணர்கள், அந்தணர்கள், பார்ப்பனர்கள் மூன்று பெயர்களுக்கும் ஒரே அர்த்தமா? 

சங்கரரின் கோட்பாட்டை மாயாவாதம் என்றும், பிரசன்ன பௌத்தம் என்றும் வைணவ கோட்பாட்டாளர்களான ராமானுஜர் மத்வர் போன்றோர் கூறுகின்றனர். அனால் சங்கரர் மாயையை துணையாக கொண்டு ஏகான்மவாதத்தை நிலைநாட்ட முயன்றார்.

வைணவ கோட்பாட்டாளர்களான ராமானுஜர் மத்வர் போன்றோர் ஆன்மாக்கள் பல கோடி உண்டென்றும் அதில் விஷேசமான ஆன்மா அல்லது ஆன்மாவை விட ஆற்றலில் கூடிய ஆன்மாவை பரமான்மா என்றும் நிறுவ முயன்றனர். இவர்களும் கடவுள் என்பது ஆன்மாவில் இருந்தோ மாயையில் இருந்தோ தனியானதில்லை என்றே நிறுவ முயன்றனர். அதிலும் இவர்கள் பரமாத்மாவாக மாயையையே முன்னிறுத்தினர். ஆக இவர்களையும் மாயையில் பரமாத்மாவை தேடிய மாயாவாதிகளாகவே கருதவேண்டும்.

வரும் பதிவுகளில் விரிவாக பார்க்கலாம்...



Thursday, 28 July 2022

மனிதர்கள் எல்லாம் மனிதரல்ல.. ஆறு வகையான மனிதர்கள்

உயிர்களில் உயர்வு தாழ்வு

ஆதியில் உயிர்கள் அனைத்தும் ஒரே பிரம்மத்தில் இருந்து தோன்றிய போதும் அவை பிறவிகள் தோறும் செய்த வினைகளின் பயனால் உயர்வு தாழ்வினைப் பெறுகின்றன.

உயிர்கள் தாம் செய்யும் நற்செயல்களால் மறுபிறவியில் மகிழ்வான உயிராகவும், உயிர்கள் செய்யும் தீய செயல்களால் மறுபிறவியில் துன்பத்தில் உழலும் உயிராகவும் பிறக்கின்றன.

சாதிகள்

சமூகத்தில் தொழில் முறையில் ஏற்படும் பகுப்பே சாதிகளாகின்றது. சாதிகளுக்கும் உயிர்களின் உயர்வு தாழ்விற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லாத போதும், உயிர்கள் தம் அறியாமையாலும் முற்பிறவிகளின் பலன்களாலும் உயர்வு என்றும், தாழ்வு என்றும் மனப்பான்மை சார்ந்த நோய்களால் பீடிக்கப்படுகின்றன.

அனைத்துச் சாதிகளிலும் உடல் மனக் குறைபாடுகளுடனும், மகிழ்வின்றியும் உயிர்கள் பிறக்கின்றன. முற்பிறவியில் செய்த தீயவினைகளின் பயன்களால் இப்பிறவியை கடக்க முடியாத உயிர்கள் தம்மை உயர்வென்றும், தாழ்வென்றும் கருதி அறியாமையில் வாழ்கின்றன.

உயிர்களின் தன்மைகள்

உயிர்கள் தாம் கொண்ட இயல்பான உந்துதலின் அடிப்படையில் ஆறு வகையினராவர்.

பிறக்கும் போது அனைத்து உயிர்களும் ஒரே உந்துதலுடன் இருந்தாலும் அவை வளர்ந்து வருகையில் அவ்வுயிரின் இயல்பான உந்துதல் வெளிப்படுகின்றது. இவ் வகை உந்துதல்கள் உடலில் உள்ள சக்கரங்களின் தூண்டுதல்களைப் பொறுத்து மாறுபடுகின்றது.

முதல் வகையினர்/விலங்குகள்/மாக்கள்

உண்பதும், உறங்குவதும், உடல்சார்ந்த இச்சைகளை தீர்ப்பதுமே வாழ்க்கையின் இலக்கெனக் கொண்டு வாழும் உயிர்கள் இவ்வகையினராவர்.

இவர்களுக்கு உண்பது உறங்குவது இச்சைகளை தீர்ப்பது என்பதைக் கடந்து ஏதொன்றும் இவ்வுலகில் தோன்றாது.

இரண்டாம் வகையினர்/வஞ்சகர்/பிறழ்மனர்

உண்பது உறங்குவது உடல் இச்சைகளை தீர்ப்பது என்பதைக் கடந்து உலகியல் பொருட்களை சேர்ப்பதும், உடமைகொள்வதுமே வாழ்வின் இலக்கெனக் கொண்டு வாழும் உயிர்கள் இவ்வகையினராவர்.

இவர்கள் உடலுழைப்பினால் பொருட்களை சேர்ப்பதில் ஈடுபாடு காட்டமாட்டார்கள். ஏனையவர்களை ஏமாற்றியும், தந்திரங்கள் செய்தும் சுகபோக வாழ்க்கையை வாழ விரும்புவார்கள்.

மக்களை ஏமாற்ற உயிரற்ற பொருட்கள் முதல் கடவுள் வரை இவர்கள் பயன்படுத்துவார்கள். மக்களின் இயலாமை, அறியாமை, நம்பிக்கை என்பன இவர்களது மூலதனமாகும்.

மூன்றாவது வகையினர்/அசுரர்

கடின உழைப்பு, உடலுறுதி, நலத்துடனான வாழ்வு இவையே வாழ்வின் இலக்கெனக் கொண்டு வாழும் உயிர்கள் இவ்வகையினராவர்.

இவர்கள் சுறுசுறுப்பு மிக்கவர்களாகவும் கடின உழைப்பாளிகளாகவும் வீரர்களாகவும் காணப்படுவார்கள்.

நான்காவது வகையினர்/ மனிதர்

அன்புடனும் அறிவுடனும் நேர்மையாக உழைத்து வாழ்வதே வாழ்வின் இலக்கெனக் கொண்ட உயிர்கள் இவ்வகையினராவர்.

இவர்கள் கடின உழைப்பை விட அறிவுபூர்வமாக சிந்தித்து இலகுவாக ஒரு செயலைச் செய்யும் ஆற்றல் மிக்கவர்கள்.

நுட்பமான அறிவு, தீரம் என்பன மிக்கவர்களாகவும் இறையாற்றலை உலக வாழ்விற்கு பயன்படுத்தும் வல்லமை மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் தாம் அறிந்த வித்தைகளை, தமக்ககுக் கிட்டிய அறிவை ஏனையவர்களுக்கு போதிக்கும் மனப்பான்மை உடையவர்கள்.

ஐந்தாவது வகையினர்/ துறவியர்

தீய எண்ணங்கள், தீய உணர்வுகள், தீயசக்திகள், என்பவற்றை நீங்கி நின்று வாழ்வதே வாழ்வின் இலக்கெனக் கொண்டு வாழும் உயிர்கள் இவ்வகையினராவர்.

இவர்கள் தீமைகளில் இருந்து நீங்கும் பொருட்டு தீமை மிகுந்த சமூகத்தில் இருந்து விலகியோ சமூகத்துடன் ஒட்டின்றியோ இருப்பார்கள்.

இவர்கள் உலக வாழ்க்கையை அன்னியமாகக் கருதுவார்கள். அதில் இருந்து அன்னிப்பட்டே வாழ்வார்கள்.

ஆறாவது வகையினர்/ஞானியர்

அறிவு நிலையில் அனைத்தையும் உணர்ந்து வாழ்வதே வாழ்வின் இலக்கெனக் கொண்ட உயிர்கள் இவ்வகையினராவர்.

இவர்கள் நன்மை தீமை என்னும் நிலைகளைக் கடந்து நின்று வாழ்வார்கள். இவர்கள் உலக வாழ்க்கையை அன்னியமாகக் கருதுவதில்லை. உலகத்தில் நடப்பவற்றை அவ்வாறே ஏற்கக்கூடிய உயர்ந்த மனநிலையைப் பெற்றவர்கள்.

ஆனால் உயிர்கள் வாழ்க்கையில் எதிர்நோக்கும் பிரச்சனைகள், துன்பங்கள் என்பவற்றை அறிந்து அவற்றில் இருந்து விடுபடுவதற்கான உபாயங்களையும் வழிகாட்டுதல்களையும் செய்பவர்களாக இருப்பார்கள்.

இவர்களை நாடிச் செல்பவர்களுக்கு உலகியல் துன்பங்களில் இருந்து விடுபடும் அறிவை உணர்த்துவார்கள்.

உயிர்களின் உந்துதல் மாற்றம்

உயிர்கள் தான் கேட்டுக் கற்று அறிந்தவைகளை கிரகித்துத் தெளிவதன் மூலமாகவும், வேறு உயிர்களால் ஏற்படுத்தப்படும் தூண்டல்கள் தொடுகைகள் மூலமாகவும், இறை நம்பிக்கை மூலமாகவும் உந்துதல் மாற்றங்களை எய்துகின்றன.

தன்னில் உந்துதல் மாற்றம் ஏற்பட விரும்பாத உயிர்கள் ஏனைய உயிர்களை தொடாமல், இறைநம்பிக்கை கொள்ளாமல் தனித்தே வாழ்கின்றன.



Wednesday, 27 July 2022

குலதெய்வத்தை கைவிட்டால் குலமே நாசமாகப் போய்விடும்

ஒரு மனிதன் தன்வாழ்வில் கைவிடக் கூடாதது அவனது குலதெய்வத்தையாகும். குலதெய்வம் என்பது கடவுள் அல்ல. அது எம் மூதாதையர்களின் ஆன்மாவாகும். 

நாம் கடவுளை வணங்கலாம் வணங்காமல் விடலாம். நாம் கடவுளை வணங்காமல் விட்டாலும் கடவுள் நமக்கு எந்த தீமையையோ துன்பத்தையோ தரப்போவதில்லை. ஆனால் குலதெய்வம் என்பது அவ்வாறானதல்ல, கைவிட்ட சந்ததிகளை அது வாழ விட்டதில்லை.

குலதெய்வத்தை நாம் வணங்காமல் விட்டாலும், குலதெய்வ ஆலயங்களை பராமரிக்காமல் விட்டாலும், குல தெய்வத்தை நிந்தனை செய்து பேசினாலும் அப்படி செய்பவரின் வாழ்வும் அவரது குல சந்ததிகளும் கெட்டழிந்து நாசமாகப் போய்விடும்.

பொதுவாக குலதெய்வ வழிபாட்டை விட்டு விலகியவர்களின் மூத்த பிள்ளையும், கடைசிப் பிள்ளையும் மிகவும் துன்பத்தையும், பிரச்சினைகளையும் சந்திக்கும். பொதுவாக எம் சமூக வழக்கத்தில் தந்தைவழி குலதெய்வம் மூத்த ஆண் பிள்ளைக்கும், தாயின்வழி குலதெய்வம் கடைசி ஆண்பிள்ளைக்கும் உரித்தானது. இதனாலேயே குலதெய்வ வழிபாட்டை விட்டு விலகிய குடும்பங்களில் மூத்த மற்றும் கடைசிப் பிள்ளைகள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.

யாரெல்லாம் குலதெய்வ வழிபாட்டை கைவிட்டவர்கள்? ஏன் கைவிடுகின்றனர்?

குலதெய்வத்தை வழிபடுவது நாகரிகக் குறைவு என்று நம்பவைக்கப்பட்டவர்கள், அன்னிய நாட்டவர்களின் பண்பாட்டு மோகத்தாலும், கலாச்சார சிதைப்பாலும் இந்த மண்ணின் வாழ்வியலில் இருந்து விலகியவர்கள், கடவுளை மட்டும் வணங்கினால் போதும் வேறு ஒன்றையும் வணங்கத் தேவையில்லை என்று தவறான போதனைகளால் பாதிக்கப்பட்டவர்கள், வேறு நாடுகளில் பிறந்து இறந்த மனிதர்களை ஆண்டவர் என்றும் அவர் மட்டுமே உண்மையான தேவன் என்றும் மூளைச்சலவை செய்து நம்பவைக்கப்பட்டவர்கள் ஆகியோர் குலதெய்வ வழிபாட்டை கைவிட்டவர்கள் ஆவார்கள். தவறான வழிகாட்டல்கள், தவறான போதனைகள், தீய நபர்களின் மூளைச்சலவை என்பவற்றால் மக்கள் குலதெய்வ வழிபாட்டை கைவிடுகின்றார்கள்.

குலதெய்வ வழிபாட்டை கைவிட்டவர்களுக்கு என்ன நடக்கும்?

குலதெய்வ வழிபாட்டை விட்டு விலகிய சிறிது காலத்திற்கு சிலருக்கு எதுவும் தோன்றாதிருக்கலாம். வழமையைவிட வசதிவாய்ப்புக்கள் கூட கிடைக்கலாம். குலதெய்வம் என்பது எமது முன்னோர்களின் ஆன்மா என்பதால் தம்மை விட்டு, தம் வழிபாட்டை விட்டு விலகியவர்கள் ஏதோ துன்பத்தால், பிரச்சினையால் தம்மைவிட்டு நீங்கினார்கள் என்று கருதி அந்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கும், நல்லது நடப்பதற்கும் துணைநிற்கும். தம்மை விட்டு பிரச்சினைகளால் விலகியவர்கள் அந்த பிரச்சினை தீர்ந்தவுடன் தம்மிடம் வந்துவிடுவார்கள் என்று கருதியே அந்த குலதெய்வம் அவ்வாறு செய்யும். ஆனால் சிலர் அந்த குலதெய்வத்தை வழிபடுவதை விட்டு புதிய ஏதோ ஒன்றை நம்பியதால்தான், வழிபட்டதால்தான் தமக்கு நல்லது நடப்பதாக கருதியோ, அல்லது அவ்வாறு வேறுயாரவது ஒருவரால் நம்பவைக்கப்பட்டோ முழுவதுமாக குலதெய்வ வழிபாட்டை கைவிடுகின்றார்கள்.

அதனால் அதுவரை எமது நன்மைக்காக எமது குலங்களின் நன்மைக்காக செயற்பட்ட குலதெய்வங்கள் கோபம்கொள்ள ஆரம்பிக்கின்றன. தன்னை கைவிட்டவர், அவரது சந்ததிகள் என்று தொடர்ந்து பிரச்சினைகளையும் துன்பத்தையும் கொடுக்க ஆரம்பிக்கிறது. தீராத நோய்கள், குடும்பத்தில் பிரச்சினைகள், தவறான நடத்தை உடைய மனைவி பிள்ளைகள், பொருந்தாத திருமண வாழ்வு என்று அவரது சந்ததிகளே கொஞ்சம் கொஞ்சமாக நாசமாகிச் சிதைந்து போகின்றது.

பொதுவாக குலதெய்வ வழிபாட்டை கைவிட்ட சந்ததிகளின் மூத்த பிள்ளையும் கடைசிப் பிள்ளையும் நேரடியாக பிரச்சினைகள் துன்பங்களை அனுபவித்தாலும் இடையில் உள்ள பிள்ளைகள் குறைந்த பிரச்சினைகளையே நேரடியாக சந்திக்கின்றன. ஆனால் அவர்களின் பிள்ளைகளோ தீராத நோய்கள்,குறைபாடுகள், தீய பழக்கங்கள் என்று சீரழிந்து போகின்றன.

மேற்கூறியவற்றை நீங்களே உங்கள் சமூகத்தில், உங்கள் அயலவர்களில் மதமாற்றம், நாகரிகம் என்ற பெயரால் குலதெய்வ வழிபாட்டை கைவிட்டவர்களின் குடும்பங்களில் கண்கூடாகக் காணலாம். 

குலதெய்வ வழிபாட்டை என் முன்னோர்கள் கைவிட்டு விட்டார்கள்? நான் என்ன செய்வது?

உங்கள் உறவினர்கள் யாரேனும் இன்னும் குலதெய்வ வழிபாட்டை கைவிடாமல் எங்கோ பின்பற்றுவார்கள். அவர்களிடம் சென்றறிந்து உங்கள் குலதெய்வ வழிபாட்டை மீண்டும் தொடங்கலாம். 

அவ்வாறு உறவினர்கள் யாரும் தெரிந்தவரை இல்லை, அவ்வாறு யாரும் வழிபடவுமில்லை என்றால், உண்மையில் உங்களுக்கு குலதெய்வத்தை கண்டறியவேண்டும், வழிபட்டு உங்கள் குலசாபத்தை நீக்கவேண்டும் என்று விருப்பிருந்தால் கனவு அல்லது நனவில் தோன்றி அந்த குலதெய்வமே தன்னை அடையாளம் காட்டும். அந்த வாய்ப்பை பயன்படுத்தி குலதெய்வ வழிபாட்டை மீண்டும் தொடங்கி குலசாபத்தை நீக்கலாம்.

அவ்வாறும் கண்டறிய முடியவில்லை என்றால் எம்மையோ அல்லது பொருத்தமான நபர்களையோ தொடர்பு கொண்டு உங்கள் குலதெய்வத்தை கண்டுபிடிப்பதற்கான உதவியினைப் பெறலாம்.

சிவகாலநாதன்
காலங்கிபீடம்


Sunday, 26 June 2022

அண்ணன் அருந்திய ஃபாதரின் தமிழ் தேசியம்

 சனிக்கிழமை இரவு குடித்த உற்சாக பானத்தின் மயக்கம் முழுதாக மறையவில்லை. காலையில் எழுந்ததும் தலை விண் விண் என்று வலித்தது. இரண்டு தலைவலி மாத்திரைகளை எடுத்து விழுங்கிவிட்டு வேகவேகமாக புறப்பட்டார் அண்ணன். என்னதான் போதை தெளியாவிட்டாலும் ஞாயிற்றுக்கிழமையில் வீட்டில் இருப்பது அண்ணனுக்கு ஆகாது.

அண்ணன் புறப்படும் முன்பே தம்பிகளும் தயாராக இருந்தார்கள். என்னதான் வேக வேகமாக புறப்பட்டாலும் அண்ணனும் தம்பிகளும் போவதற்கு முன்னரே ஃபாதர் ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகளை ஆரம்பித்து விட்டார். அண்ணனும் தம்பிகளும் உள்ளே நுழையவும் ஃபாதர் ஒவ்வொருவரது வாய்க்குள்ளும் வைத்துக் கொண்டு வரவும் சரியாக இருந்தது. ஃபாதர் வாய்க்குள் வைக்க வைக்க எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு உமிந்தார்கள். அண்ணனும் தம்பிகளும் போனவேகத்தில் முட்டிபோட்டுக்கொண்டு கண்களை மூடியவாறு வாயை ஆவென்று திறந்தார்கள். 

அனைவருக்கும் அப்பத்துண்டுகளை வாய்க்குள் வைத்த ஃபாதர் கிண்ணத்தில் ஊற்றிய வைனை ஒவ்வொருவராக கொடுத்தார். அண்ணனின் முறை வந்தது. ஃபாதர் கொடுத்த வைனை ஒரே மடக்கில் குடித்துவிட்டு "பத்தல ஃபாதர் இன்னும் கொடுங்க" என்றார். 

"இவனோட ஒரே அக்கப்போரா போச்சு" என்று மனதுக்குள் சொல்லிவாறு பின்னால் சென்ற ஃபாதர் பாத்ரூமுக்குள் சென்று கிண்ணம் நிறைய பெய்து எடுத்து வந்தார். 

அண்ணன் முன் கொண்டு வந்து ஃபாதர் நீட்டியதும் வாங்கி மடக்கு மடக்கென்று குடித்துவிட்டு "பத்தல ஃபாதர் இன்னும் கொடுங்க" என்றார். இன்னும் வேணும் என்றால் ஒன்றும் செய்ய முடியாது. சில மணிநேரம் கழித்துத்தான் இனி வரும். சிறிது நேரம் கழித்து வா.. என்று சொல்லி விட்டு மற்றவர்களுக்கு வைனை கொடுக்க ஆரம்பித்தார் ஃபாதர்.

ஃபாதர் கொடுத்ததை கிண்ணம் நிறைய குடித்ததால் தமிழ்த்தேசிய உணர்வு பொங்கியவாறு அண்ணன் வெளியே வந்தார். அண்ணன் வெளியே வரவும் சிவப்பு விளக்கு ஊடகங்கள் குச்சியை நீட்டவும் சரியாக இருந்தது. அக்னிபாத் , அதிமுக தலைமை என்று அண்ணன் அதகளம் பண்ண ஆரம்பித்தார். அண்ணனையும், அண்ணன் அருந்திய ஃபாதரின் தமிழ் தேசியத்தையும் ஆச்சரியத்துடன் பார்த்த தம்பிகள் ஆரவாரித்தனர்.



Friday, 24 June 2022

குஷ் இராச்சியத்தின் காவலி கண்டகை அமானிரெனஸ்

குஷ் இராச்சியத்தின் கண்டகை அமானிரெனஸ். பொ.மு 40 முதல் பொ.மு 10 வரை கண்டகையாக இருந்து குஷ் இராச்சியத்தை காத்து வந்தார்.

இன்றைய எகிப்து மற்றும் சூடான் நாடுகளில் தொலைந்து போயுள்ள குஷ் இராச்சியம் அன்றைய எகிப்திய இராச்சியத்தின் தெற்கு  எல்லையில் இருந்து நீண்டு அமைந்திருந்தது. அன்றைய நாளில் எகிப்து நாட்டை கைப்பற்றி தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ரோமானியர் குஷ் இராச்சியத்தையும் கைப்பற்ற முயற்சித்தனர்.

கண்டகை அமானிரெனஸின் ராணுவத் தலைமை, யுத்த வியூகம் என்பவை ரோமானியர்களின் முயற்சிகள் வெற்றிபெற முடியாமல் தடுத்து குஷ் இராச்சியத்தை பாதுகாத்து நின்றது. போரிலே அமானிரெனஸின் ஒரு கண் வெட்டுண்டு பார்வையை இழந்தபோதும் அவள் போர்குணமும் திறனும் குறையவேயில்லை. படைகளுடன் இணைந்து அவளும் போர்களில் கலந்துகொண்டாள்.

அவள் ரோமானியர்களுடனான பல போர்களில் வெற்றி பெற்றாள். பின் ரோமானியர்களுடனான ஒரு போரில் ரோமானிய மன்னன் அகஸ்டஸ் சீசரின் வெண்கலச் சிலையை கைப்பற்றி பின் சீசரின் வெண்கலச் சிலையின் தலையை உடைத்து குஷ் இராச்சியத்தின் பெரிய கோவிலான நாகாவின் வாசலில் வைத்தாள். ரோமானியர்களை வெறுத்த குஷ் மக்கள் கோயிலுக்கு வரும் போதும் போகும் போதும் அந்த சிலையை மிதித்துக் கொண்டு சென்றார்கள். இது ரோமானியர்களுக்கு தீராத அவமானத்தை உண்டுபண்ணியது. 

குஷ் இராச்சியத்தின் மீதான ரோமானியர்களின் போர் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது. ஆனால் அமானிரெனஸை அவர்களால் வீழ்த்த முடியவில்லை. குஷ் இராச்சியத்தை கைப்பற்ற முடியாததாலும் ரோமானிய படைகள் எதிர்நோக்கிய இழப்புகள் காரணமாகவும் அகஸ்டஸ் சீசரே சமாதான பேச்சுவார்த்தை நடத்த இறங்கிவந்தான். பேச்சுவார்த்தை முடிவில் குஷ் இராச்சியத்தின் பகுதிகளில் இருந்து ரோமானிய படைகள் வெளியேறும் நிலை ஏற்பட்டது. குஷ் இராச்சியத்தின் சுதந்திரம் உறுதி செய்யப்பட்டது. 

கண்டகை அமானிரெனஸின் வீரமும் வியூகமும் பின்னர் பேச்சுவார்த்தையை பயன்படுத்தி செய்துகொண்ட ஒப்பந்தமும் குஷ் இராச்சியத்தின் பாதுகாப்பை உறுதி செய்தது. குஷ் இராச்சியத்தினதும் அதன் மக்களதும் வாழ்வை அந்த ஒப்பந்தம் 400 ஆண்டுகள் வரையில் பாதுகாத்தது. நானூறு ஆண்டுகள் நிலைத்திருந்த அந்த குஷ் இராச்சியம் கண்டகை அமானிரெனஸின் விவேகத்தால் உண்டானது.

(பி.கு: கண்டகை என்றால் சூடானிய பழைய மொழியில் ராணி என்று பொருள்)












Wednesday, 8 June 2022

ஐசிஷ்- எகிப்திய மக்களின் மனங்கவர்ந்த தெய்வம்

 ஐசிஷ், இது எகிப்திய மக்களின் மந்திரச் சொல். நோய்களில் இருந்து மக்களை காத்தவள் அவள். அந்த மக்களுக்கு அறிவை கொடுத்து, தொழில் வளத்தை பெருக்கி வாழ்வை வசந்தமாக்கியவள் அவள். அழகிற்கு இலக்கணமாக, அன்பிற்கு ஆதாரமாக திகழ்ந்தவள் அவள்.

அன்பாலும் அறிவாலும் அனைவரையும் அடிமைப்படுத்திய பேரழகி ஐசிஷ். தலையில் சூடிய சூரிய வட்டு, அதைத் தாங்கிக் கொள்வதுபோன்ற சந்திரக் கொம்புகள், உடலைத் தழுவிய அழகிய ஆடைகள் என்று அவள் தேவதையாக காட்சி அளித்தாள். மக்கள் மனங்களை மட்டுமல்லாமல் மன்னர் குடும்பத்தின் மனத்திலும் நீங்காத இடத்தைப் பிடித்திருந்தாள். எகிப்திய பெண்களுக்கு நெசவு செய்வது, செம்மண் கற்களை சூளையில் இட்டு சுடுவது, பழங்கள் தானியங்களில் இருந்து பானங்களைக் காச்சுவது என்று அனைத்தையும் கற்றுக்கொடுத்தவள் ஐசிஷ்தான். மக்களின் நோய்களைத் தீர்த்து வைப்பதில் அவள் கைதேர்ந்தவள். அவளுக்கு அன்றைய காலத்தின் அத்தனை கலைகளும் அத்துப்படி. அதனால்தான் மக்கள் அவளை இறைவனிடம் பயின்று வந்தவள், இறைவனின் குழந்தை என்ற பொருளில் ஐசிஷ் என்று சொல்லி அழைத்தனர். அவள் மாயாஜால வித்தைகள் தெரிந்தவள், அமானுஷ்ய சக்திகள் நிறைந்தவள் என்று மக்கள் கருதினார்கள்.

அவள் அன்பை அவள் அழகை அவள் அறிவை என்று புகழ்நத மக்கள் அவளை பூலோக நாதனின் புதல்வி என்றும், வானவன் மாதேவியின் புதல்வி என்றும் புகழ்ந்து கொண்டாடினார்கள். மன்னர் குடும்பத்தினரும் அவளைப் புகழ்ந்து கொண்டாடினார்கள். தங்கள் நாட்டின் பெருமையே இவள்தான் என்று மெச்சினார்கள். மன்னரும் அரசியும் அவளை மகளான கருதி நடத்தினார்கள், அரசரின் வாரிசுகள் ஓசிரிஷ், சேத் மற்றும் நெப்திஸ் மூவரும் அவளுடன் அன்யோன்யம் ஆகிவிட்டார்கள், அவள் அன்பும் அரவணைப்பும் அவர்களை தோழியாய் சகோதரியாய் என்று எல்லாமாக உணரச்செய்தது. பொதுவாக ஆட்சியாளர்களை, ஆண்டவர்களைத்தான் மக்கள் இறைவனின் புதல்வர்கள் என்று புகழ்ந்து போற்றுவது வழக்கம். ஆனால் ஐசிஷ் விஷயத்தில் அது விதிவிலக்காக இருந்தது. அவள் பேருக்கும் புகழுக்கும் ஏற்றாற்போல் பட்டத்து இளவரசன் ஓசிரிஷ் வாழ்க்கை துணையாக வந்தான். ஐசிஷை மணந்த சிறிது நாட்களிலேயே ஓசிரிஷ் வசமானது அரியணை. மக்கள் மனங்களை வென்ற ஐசிஷ் பட்டத்து ராணியாக இருந்து அரசனை வழிநடத்திச் சென்றாள். அவர்கள் இருவரதும் ஆட்சியில் நாடு நகர் என்று அனைத்தும் செழித்தது, தொழில் வளம் பெருகியது. மக்கள் மகிழ்ச்சியாகவும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்றும் வாழ்ந்தார்கள். 

எல்லாம் நன்றாக இருந்தாலும் எதிர்ப்பதற்கும் யாராவது ஓரிருவர் இருக்கத்தானே செய்வார்கள். அங்கேயும் ஒருவன் இருந்தான், அவன் வேறு யாருமல்ல ஓசிரிஷின் உடன்பிறப்புதான். ஐசிஷ் மீதும் அரியணை மீதும் சேத்தின் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்தது. ஓசிரிஷ் மீது பொறாமை கொண்டான். வஞ்சனையை மனதினில் வளர்த்தான். தனக்குக் கிடைக்காதது எல்லாம் அரியணையில் அமர்ந்தால் கிடைத்துவிடும் என்று கற்பனை செய்தான். 

ஒருவனுக்கு ஆசை அளவுகடந்துவிட்டால் அறிவை இழந்துவிடுவான். சேத் அவ்வாறே அறிவிழந்தான். அரியணையை அடைவதற்கு முதலில் அண்ணனை அப்புறப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தான். அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பெட்டகம் ஒன்றைச் செய்வித்தான். ஓசிரிசை நயவஞ்சகமாக அழைத்து உயிருடன் பெட்டகத்தில் அடைத்துப் பூட்டி காற்றுப் புகாதவாறு ஈயத்தால் பூசி நைல் நதியில் தூக்கி வீசினான். அந்த அலங்காரப் பெட்டகம் ஓசிரிசின் சவப்பெட்டியாக ஆனது. ஓசிரிஷ் மூச்சு விட முடியாமல் இறந்துவிட்டான்.

மகாராணியும் மக்களும் மகிழ்ச்சியைத் தொலைத்து துக்கத்தில் மூழ்கினார்கள். அந்த சந்தர்ப்பத்தில் சேத் அரியணையில் ஏறினான். அரியணையில் ஏறியதும் தன் அண்ணன் மனைவி என்றும் பாராமல் ஐசிஷை அடையத் துடித்தான் அந்த கேடுகெட்ட உடன்பிறப்பு. அவள் நெருப்பு, அவனால் நெருங்கக்கூட முடியவில்லை. 

ஐசிஷால் ஓசிரிசை மறக்க முடியவில்லை. அவனுக்கு என்ன நடந்தது அவன் எங்கே இருக்கிறான் என்று அவள் மனம் தவித்தது. இந்த நயவஞ்சக சேத்தான் ஏதோ செய்திருக்க வேண்டும் என்று அவள் உள்மனது சொன்னது. ஓசிரிசுக்கு என்னவானது என்பதை அறிய தன் உதவியாளர்களுடன் ஊர் ஊராகச் சென்றாள். அன்றை எகிப்தின் நைல் நதிக்கரையில் அமைந்துள்ள அனைத்து ஊர்களிலும் தேடிவிட்டாள், ஓசிரிசை எங்கேயும் காணவில்லை. நைல் நதியில் பெட்டகம் ஒன்று மிதந்து சென்றதைப் பார்த்ததாக மக்களில் சிலர் சொன்னார்கள். நைல் நதியின் கரையோரம் வந்து கழிமுகத்தை அடைந்தவள், காற்றின் திசை பார்த்து கடற்கரையோரம் பயணித்தாள். அவள் முயற்சி வீண்போகவில்லை. லெபனானின் பைபிலோஸ் கடற்கரையில் அந்த அலங்காரப் பெட்டகத்தை கண்டுபிடித்தாள். ஓசிரிஷ் பெட்டகத்திற்குள்தான் இருந்தான், ஆனால் உயிர் மட்டும் அவனிடமில்லை. ஓசிரிசின் உடலை மீண்டும் பெட்டகத்தில் வைத்து அதை எடுத்துக் கொண்டு எகிப்திற்குத் திரும்பினான். 

பெட்டகத்தை கண்டதும் சேத் சினங்கொண்டான். ஓசிரிசின் உடலை துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசும்படி பணித்தான். ஓசிரிசின் உடல் துண்டங்களாக வெட்டப்பட்டு வேறு வேறு இடங்களில் வீசப்பட்டது. மக்கள் வருந்தினார்கள், மன்னனை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை. ஐசிஷ் ஓசிரிசின் உடல் துண்டங்களை தேடிச் சேர்க்க புறப்பட்டாள். ஓசிரிசின் சகோதரி நெப்திஸும் ஐசிஷிற்கு உதவினாள். பறந்து திரிந்து ஓசிரிசின் உடல் பாகங்களை கண்டுபிடிக்க உதவினாள். உடலின் எல்லா பாகங்களையும் கண்டு பிடித்தவர்களால் அவனது ஆண்குறியை மாத்திரம் கண்டுபிடிக்க முடியவில்லை. 

கிடைத்த உடற்பாகங்களை ஒன்றாக்கி ஒசிரிசின் உடலை முழுமையாக்கினாள் ஐசிஷ். அவளை நேசித்த மக்களின் துணையுடன் ஓசிரிசை மம்மியாக்கி பிரமிட்டு ஒன்றை அமைத்தாள். இவ்வாறு பிரமிட்டு அமைக்கும் பணி நடக்கும் காலத்தில், ஓசிரிஷ் இறந்து ஒன்பதாவது மாதத்தில் ஐசிஷின் வயிற்றில் இருந்து வந்துதித்தான் ஓரஸ். ஓசிரிஷிற்கு பிரமிட்டை அமைத்து அவன் உடலை மம்மியாக பாதுகாத்தவள், தன் மகன் ஓரஸை பாதுகாப்பாக வளர்ப்பதற்காக நைல் நதியின் சதுப்பு நிலத்தை தேர்வு செய்தாள். பாம்பு பூச்சி தீண்டாமல் ஈயெறும்பு அண்டாமல் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து அவனை முழு மனிதனாக வளர்த்தெடுத்தாள்.

ஐசிஷின் பாதுகாப்பில் அவள் அறிந்த அனைத்து கலைகளையும் கற்று முழுமையான மனிதனாக மாறினான், தன் தந்தையின் மரணத்திற்கு பழிவாங்குவதற்காக, எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றி மக்களை மீட்பதற்கான சேத் மீது போர்தொடுத்தான். ஓரஸ் எகிப்தின் அரியணையைக் கைப்பற்றினான். எது எப்படி இருந்தாலும் சேத்தை கொல்லாமல் மன்னித்து விட ஐசிஷின் மனம் விரும்பியது. ஆனால் ஓரஸ் அவனை மன்னிக்கத் தயாராக இல்லை. தன் உறைவாளை எடுத்து அவன் தலையை வெட்டி வீசினான். 

ராஜ மாதாவாக இருந்து அரசாட்சியை வழிநடத்தினாள் ஐசிஷ். ஓசிரிஷால் தொடர்ந்து வழங்க முடியாத நல்லாட்சியை தன் மகன் ஓரஸ் மூலம் வழங்கினாள். எகிப்திய மக்களின் மனங்களில் நீங்காமல் சிம்மாசனம் இட்டமர்ந்தாள் ஐசிஷ். அவள் பின்னால் ஆட்சியில் அமர்ந்தவர்களும் அவள் பேரைச் சொல்லியே ஆண்டார்கள். அன்னிய தேசத்து காட்டுமிராண்டிகள் அந்த தேசத்தின் மாண்பை அழிக்கும் வரையில் அதுவே மரபாக இருந்தது.




















Saturday, 28 May 2022

இறுதி யுத்த காலத்தில் இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை- உண்மை என்ன?

இலங்கையின் இறுதிப்போரில் எத்தனை பொதுமக்கள் இறந்தார்கள் என்று பலரும் தங்கள் கற்பனைக்கும், விருப்பத்திற்கும், தேவைக்கும் ஏற்றதுபோல் தரவுகளை வெளியிட்டபடி இருக்கிறார்கள். இதுவரையில் உண்மையான தகவலை யாரும் அறியக்கூட விரும்பவில்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது. 

இறுதி யுத்த காலத்தில் புலிகளும், புலிகளுக்கு சார்பான இணைய ஊடகங்களும் மக்களின் இழப்புக்கள் பற்றிய செய்திகளை மிகப்படுத்தியே வெளியிட்டு வந்தது. அந்த மிகைப்படுத்தல் எண்ணிக்கை உண்மை அளவின் மடங்குகளாகக்கூட இருந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மக்கள் இழப்பு அதிகமாகும் போது சர்வதேசம் தலையீடு செய்யும், யுத்தத்தை நிறுத்தும் என்ற நம்பிக்கையில் தமிழ் மக்கள் பலரும் அதைப் பகிர்ந்தும் பரப்பியும் வந்தனர். 

அவ்வாறு புலிகளுக்கு ஆதரவான இணைய ஊடகங்கள் நாளாந்தம் வெளியிட்ட பொதுமக்கள் தொடர்பான இறப்பு பற்றிய தகவல்களே கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

அந்த மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை உண்மை என்று ஏற்றுக்கொண்டு இறுதி யுத்த கால மக்கள் இறப்பு பற்றிய மொத்த எண்ணிக்கையைக் கணக்கிடும் போதும் 8430 என்ற அளவிலேயே மக்களின் இறப்பு எண்ணிக்கை வருகிறது. இந்த எண்ணிக்கை என்பது ஒட்டுமொத்த பொதுமக்களின் இறப்பு என்பதாகவே கணக்கிடப்படுகிறது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து அரசின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்றபோது புலிகளால் சுடப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தே இந்த எண்ணிக்கை வருகிறது. அந்த காலப்பகுதியில் காயமடைந்தவர்களை படுகாயம் அடைந்தனர் என்ற வகைப்படுத்தலில் எடுத்துக் கொண்டாலும் 9464 என்ற எண்ணிக்கையிலேயே படுகாயமடைந்தவர்கள் வருகின்றனர்.

ஒரு யுத்த களத்தில் படுகாயம் அடைந்தவர்களில் ஐம்பது சதவீதம் பேர் இறந்தார்கள் என்று எடுத்துக் கொண்டாலும் 13500 பேர் என்ற அளவிலேயே இறப்பு எண்ணிக்கை வருகிறது. அதுபோல் மே 17 அன்று புலிகள் ஆயுதப் பயன்பாட்டை நிறுத்தியதாக அறிவித்ததன் பின்னர் அரசபடைகளும் ஆயுதங்களை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை. அதனால் மே 17, 18 தேதிகளில் மக்கள் இறக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. ஆனால் புலிகள் ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்தியதாக அறிவித்த அன்று 3000 அளவிலான பொதுமக்கள் இறந்தார்கள் என்று புலிகளுக்கு ஆதரவான இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அவற்றையும் உண்மை என்று ஏற்றுக்கொண்டாலும் இறுதி யுத்த காலத்தில் இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை 16500 என்பதாகவே அமையும்.

யுத்தம் நடந்தது கொண்டிருந்த போது பொதுமக்கள் இழப்புகளை அதிகரித்துக் காட்டி யுத்தத்தை நிறுத்த முயன்றதுகூட ஒருவகையில் ஏற்றுக் கொள்ள கூடியதே. ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்து பல ஆண்டுகள் கழிந்த பின்பும் அந்தப் பொய்களை திரும்பத் திரும்ப கூறவேண்டுமா? வரலாற்றின் சுவற்றில் சரியான பதிவுகளை மாத்திரம் விட்டுச் செல்ல வேண்டியது எம் தார்மீகக் கடமை அல்லவா?

தமிழர்கள் பொய்யர்கள், பித்தலாட்டம் செய்பவர்கள் என்ற அவப்பெயர் எம் தலைமுறையுடன் முடிந்து போகட்டும். நாளைய தலைமுறையை நாணயம் உள்ளவர்களாக மாற்றுவோம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் 2009.01.01 தொடக்கம் 2009.05.15 வரையில் புலிகளுக்கு ஆதரவான இணைய ஊடகங்கள் நாளாந்தம் வெளியிட்ட செய்திகளில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும்.

2008 ஆம் ஆண்டில் வெளிவந்த செய்திகளின் படி பொதுமக்களின் இழப்பு அண்ணளவாக 120 வரையிலேயே பதிவாகியுள்ளது.

2009/01/01 இறப்பு - 6 படுகாயம்-28
2009/01/08 இறப்பு- 03
2009/01/20 இறப்பு- 17 படுகாயம்-51
2009/01/22 இறப்பு- 22 படுகாயம்-106
2009/01/23 இறப்பு- 05 படுகாயம்-83
2009/01/26 இறப்பு-300 படுகாயம் -700
2009/01/31 இறப்பு- 50 படுகாயம்-169
2009/02/01 இறப்பு-06
2009/02/02 இறப்பு-09
2009/02/03 இறப்பு-52
2009/02/06 இறப்பு-61
2009/02/07 இறப்பு-65 படுகாயம்-226
2009/02/08 இறப்பு-80 படுகாயம்-200
2009/02/09 இறப்பு-36 படுகாயம்-76
2009/02/10 இறப்பு-22 படுகாயம்-87
2009/02/19 இறப்பு-47 படுகாயம்-126
2009/02/20 இறப்பு-17 படுகாயம்-43
2009/03/01 இறப்பு-37 படுகாயம்-65
2009/03/07 இறப்பு-208
2009/03/10 இறப்பு-203 படுகாயம்-100
2009/03/19 இறப்பு-38 படுகாயம்-90
2009/03/20 இறப்பு-49 படுகாயம்-47
2009/03/21 இறப்பு-48 படுகாயம்-46
2009/03/24 இறப்பு-101 படுகாயம்-125
2009/03/25 இறப்பு-112 படுகாயம்-210
2009/03/26 இறப்பு-26 படுகாயம்-96
2009/04/01 இறப்பு-39 படுகாயம்-57
2009/04/02 இறப்பு-25 படுகாயம்-56
2009/04/03 இறப்பு-41 படுகாயம்-41
2009/04/04 இறப்பு-29 படுகாயம்-31
2009/04/05 இறப்பு-92 படுகாயம்-153
2009/04/07 இறப்பு-31 படுகாயம்-75
2009/04/08 இறப்பு-129 படுகாயம்-282
2009/04/15 இறப்பு-219 படுகாயம்-408
2009/04/16 இறப்பு-36 படுகாயம்-43
2009/04/17 இறப்பு-102 படுகாயம்-156
2009/04/18 இறப்பு-169 படுகாயம்-234
2009/04/19 இறப்பு-178 படுகாயம்-344
2009/04/20 இறப்பு-1496 படுகாயம்-3333
2009/04/21 இறப்பு-473 படுகாயம்-722
2009/04/22 இறப்பு-324 படுகாயம்-423
2009/05/01 இறப்பு-172 படுகாயம்-289
2009/05/02 இறப்பு-64 படுகாயம்-87
2009/05/07 இறப்பு-162
2009/05/09 இறப்பு-1112
2009/05/12 இறப்பு-47 படுகாயம்-56
2009/05/14 இறப்பு-1700
2009/05/15 இறப்பு-150



புலிகள் இயக்கத்தின் அழிவுக்கு காரணம் என்ன?

இயக்கத்தில் கத்தோலிக்க ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது பிரபாகரனின் தாழ்வு மனப்பான்மையா? புலிகள் இயக்கத்தின் வெள்ளிக்கிழமைகளில் மாட்டிறைச்சி உணவு,...