Thursday, 26 May 2022

புலிகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்- பகுதி 2 (வரலாற்றுக் கதை)

ரஞ்சனி வந்து சென்றதுமுதல் லட்சுமியின் நச்சரிப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது. நமசிவாயத்திற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஏதோ வைராக்கியத்தில் தீபா செத்தால் கூட பரவாயில்ல என்று சொல்லிவிட்டார். ஆனால் அவளில்லாத வாழ்வை அவரால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. என்ன இருந்தாலும் சர்ச்சுக்கு அனுப்புவதிலோ, ஃபாதருடன் தன் மகளைவிடுவதிலோ சிறிது கூட சம்மதமில்லை அவருக்கு. 

பகுதி 1 ஐ படிக்க...

"ஏங்க.. ரஞ்சனிதான் சொல்றால்ல, அங்க ஏற்கனவே நிறைய பிள்ளைங்க இருக்கிறாங்களாம், அதைவிட இப்ப இருக்குற பிரச்சினைக்குள்ள ஃபாதர்மார் பிள்ளைங்க கூட பிரச்சினை பண்ணமாட்டாங்கங்க, இங்க இருந்து பிடிபட்டு சாகிறதைவிட கொஞ்சநாளைக்கு அங்கயே விட்டுடுவங்க" என்று விடாமல் நச்சரித்துக் கொண்டே இருந்தாள். நமசிவாயம் எதுவும் பேசவில்லை. தீபாவும் படுத்திருந்தவாறே எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே இருந்தாள். அவளுக்கு எதுவுமே புரியவில்லை.

நமசிவாயம் மனதை கசக்கிக் பிழிந்து எப்படியெல்லாமோ சிந்தித்துப் பார்த்துவிட்டார், மகளைக் காப்பாற்ற வேறு வழியேதும் தோன்றவில்லை. ஏதோ அதிர்ஷ்டவசமாக அண்டாவை அவர்கள் திறந்து பார்க்காததால் நேற்று தப்பித்து விட்டாள். எல்லா நேரமும் அந்த அதிர்ஷ்டம் கைகொடுக்க போவதில்லை. அவர் மனம் அங்கலாய்த்துக்கொண்டே இருந்தது. குழம்பிய அவர் சிந்தனையை லட்சுமியின் நச்சரிப்பு வென்றது. "என்ன நடந்தாலும் அம்மாளாச்சி பிள்ளைய பாத்துகப்பாள்" என்று அம்மாளாச்சி மேல் பாரத்தைப் போட்டுவிட்டு தீபாவை அனுப்ப சம்மதித்தார். சம்மதித்தது தான் தாமதம் லட்சுமி முதல் வேலையாக ஓடோடிச் சென்று ரஞ்சினியைப் பார்த்து சம்மதத்தை சொன்னாள். 

ரஞ்சனிதான் அழைத்துச் சென்று விட்டுவிட்டு வருவது என்று முடிவானது. பொழுது சாயும் போது பிரதான வீதியால் செல்லாமல், குடிசைகளுக்கு இடையால் சென்றால் பிள்ளைபிடிகாரரிடம் மாட்டாமல் செல்லலாம் என்றாள் ரஞ்சனி. விருப்பமே இல்லாமல் புறப்படத் தயாரானாள் தீபா. நமசிவாயத்திற்கு மட்டுமல்ல தீபாவிற்கும் செல்வதற்கு விருப்பமில்லை. ஆனாலும் வேறு வழியில்லை, புறப்பட்டாள். 

பொழுது சாயும் நேரம் தீபாவையும், தர்சினியையும் அழைத்துக் கொண்டு ரஞ்சனி புறப்பட்டாள். வீதியால் செல்லாமல் குடிசைகள் அமைத்து புதிதாக உருவான உட்பாதைகள் வழியாக சென்றார்கள். நமசிவாயமும் மனம் கேட்காமல் சிறிது இடைவெளி விட்டு அவர்கள் பின்னாலேயே சென்றார். அவர்கள் பதுங்கு குழி இருந்த இடத்தில் இருந்து பதினைந்து நிமிட நடை தூரத்தில்தான் அந்த சர்ச். ஒருவாறு பிள்ளை பிடிகாரர் கண்களில் மாட்டாமல் வந்துசேர்ந்துவிட்டார்கள். அந்த சர்ச் வலைஞர்மடம் கடற்கரையை அண்மித்தே இருந்தது. பிரதான வாயிலால் உள்ளே செல்லாமல் பின்வாசல் வழியாக அழைத்துச் சென்றாள் ரஞ்சனி. நமசிவாயம் உள்ளே செல்லாமல் வாயிலுடனேயே நின்று விட்டார். மங்கிய வெளிச்சத்தில் திரும்பிப் பார்த்து கண்களாலேயே விடைபெற்றுச் சென்றாள் தீபா.

உள்ளே சென்ற ரஞ்சனி தீபாவையும் தர்சினியையும் ஃபாதரிடம் ஒப்படைத்துவிட்டு சிறிது நேரத்தில் திரும்பிவிட்டாள். ரஞ்சனி நடக்க நமசிவாயமும் பின்னாலேயே நடந்தார். நமசிவாயம் மனதில் கனத்த பாரம். அவர் நடையில் எப்போதும் இல்லாத தளர்வு. ரஞ்சனிக்கும் அவருக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே வந்தது. குடிசைக்கு வந்தவர் நின்மதி இல்லாமல் தவித்தார். உணவு உண்ணக்கூட மனமில்லாமல் அப்படியே படுத்து விட்டார். ஆனால் தூக்கம்தான் வந்தபாடில்லை.

தீபாவிற்கும் தூக்கம் வரவில்லை. ஆனால் தர்சினி எந்த கவலையும் இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்தாள். புதிதாக வந்தவர்களிடம் சுற்றி இருந்து கேள்வி கேட்டவர்களும் தூங்கி விட்டார்கள். ஆனால், தீபா மட்டும் தூங்காமல் விழித்திருந்தாள். அந்த கட்டிடத்திற்குள் இருந்த மங்கலான வெளிச்சத்தில் சிலர் வெளியே எழுந்து செல்வதும் பின் சிறிது நேரம் கழித்து வந்து படுப்பதுமாக இருந்தது அவளுக்கு தெரிந்தது. கட்டிடத்தைச் சுற்றி இரவு முழுவதும் மாறி மாறி ஆள் நடமாட்டம் இருந்துகொண்டே இருந்தது. அவள் தூங்காமலேயே விழித்திருந்தாள். அதற்குள் பொழுதும் விடிந்துவிட்டது.

அந்த சர்ச் வளாகத்திற்குள் ஆண்களும் பெண்களுமாக சுமார் ஐநூறு அறுநூறு பேர் இருப்பார்கள். தீபா இருந்த கட்டிடத்திற்குள் மாத்திரம் நூறு பேருக்கு மேல் இருந்தார்கள். பல்வேறு இடங்களில் இருந்து வந்த சர்ச் ஃபாதர்கள், கன்னியாஸ்திரிகள், ஃபாதராக பயிற்சி பெறும் பிரதர்கள், பயிற்சி கன்னியாஸ்திரிகள் என்று பலவிதமானவர்களுடன், தீபா தர்சினி போன்ற பிள்ளை பிடிக்கு பயந்து ஒழித்து வந்தவர்களும் இருந்தார்கள். தீபா எல்லோர் முகத்தையும் உற்றுப் பார்க்கிறாள். யார் முகத்திலும் விடிவில்லை; விரகமும், விகாரமுமாக இருந்த அவர்கள் முகங்களை பார்க்கும் போதே அவளுக்கு அச்சமாக இருந்தது. 

தீபாவிற்கு அந்த இடம் ஒட்டவே இல்லை. சாப்பாடும் அவளுக்கு உகந்ததாக இல்லை. சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அவளுக்கு அன்னியமாகவே தெரிந்தார்கள். அவர்கள் செயல்கள் எல்லாம் அச்சம் தருவதாகவே அவளுக்கு தோன்றியது.

காலைச் சாப்பாடு சாப்பிட்டு முடித்துவிட்டு இருந்தபோது ஒரு சிஸ்டர் வந்து "ஜேம்ஸ் ஃபாதர் தர்சினியை வரட்டுமாம்" என்று சொல்லி தர்சினியை அழைத்துச் சென்றார். சிறிது நேரம் கழித்து சாக்லேட், பிஸ்கட், டவல், பெட்சீட், சோப் என்று ஒரு பொதியோடு வந்தாள் தர்சினி. தீபாவிற்கும் சாக்லேட் கொடுத்தாள். தீபா சாக்லேட்டை வாங்கி சாப்பிட்டாலும் தனக்கும் பொதி கிடைக்கவில்லை என்பது வருத்தமாகவே இருந்தது. "எங்கிட்டத்தான் நல்ல பெட்சீட், டவல் எல்லாம் இருக்குதே தர்சினிக்குத்தான் கஷ்டமாச்சே" அதான் கூப்பிட்டு கொடுத்திருப்பாங்க என்று நினைத்தாள். "இல்லை இல்லை அவள் தான் கிறிஸ்டியன் ஆச்சே, நான்தான் இந்து ஆச்சே எனக்கெப்படி கொடுப்பாங்க.." தனக்கு கிடைக்காததற்கு அவள் மனம் ஏதேதோ காரணங்களைத் தேடியது. பின் வேறு பராக்கில் அதனை எல்லாம் மறந்துவிட்டாள். 

மதியம் சாப்பிட்டு விட்டு இருந்த தீபா அயர்ந்து தூங்கி விட்டாள். இரவு முழுவதும் தூங்காமல் சொட்ட சொட்ட விழித்திருந்ததால் அவளுக்கு இப்போது தூக்கம் கண்மண் தெரியாமல் வந்தது. சிறிது நேரந்தான், ஆனால் நல்ல தூக்கம். தூங்கி எழுந்திருந்தவளை "ஜேம்ஸ் ஃபாதர் தீபாவை வரட்டுமாம்" என்ற குரல் திரும்பிப் பார்க்க வைத்தது. காலையில் தனக்கு பொதி கிடைக்கவில்லை என்று கவலைப் பட்டவள் தனக்கு பொதி கிடைக்கப் போகிறது என்று சந்தோசப்பட்டாள். அருகில் இருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாள். தூங்கி எழுந்து கழுவாத முகம் அவளை அப்படியே கிறிஸ்தவ பெண் போல காட்டியது. இனி யார் முகம் கழுவி வெளிக்கிட்டு போறது என்று நினைத்தவள் அப்படியே போனாள். அழைத்துச் சென்ற சிஷ்டர் ஜேம்ஸ் ஃபாதரின் அறைக்குள் அவளை விட்டு விட்டு வெளியே சென்று விட்டாள். 

அந்த அறையை சுற்றி சுற்றி பார்த்தாள். சுற்றிலும் விலை உயர்ந்த பொருட்கள். பாலைவனம் போன்ற அந்த இடத்தில் இப்படி ஒரு பகட்டான வாழ்க்கையா என்று நினைத்துக் கொண்டாள். மீசை மழித்த முகத்துடன் வெள்ளை பெட்சீட் விரித்த கட்டிலில் ஃபாதர் ஜேம்ஸ். சொட்டை தலை, விசித்திரமாக வளைந்த கண்கள், ஆளே ஒரு மாதிரியாக இருந்தான். ஆனால் அந்த விசித்திரமான உருவை அவள் கண்டுகொள்ளவே இல்லை. அவள் பார்வை எல்லாம் சுற்றி இருந்த பொருட்கள் மீதுதான். கட்டிலுக்கு பக்கத்தில் இருந்த டீப்போவில் ஒரு பொதி. தர்சினி கொண்டு வந்த அதேபொதி. அது தனக்குத்தான் என்று நினைத்துக்கொண்டாள் தீபா. "என்னம்மா இப்படி பார்க்கிறே, உட்காரும்மா" என்று தீபாவை அழைத்து கட்டிலில் அமர்த்தினார் ஃபாதர். அவள் வெள்ளந்தி மனதில் எதுவும் தப்பாக தோன்றவில்லை. சுற்றி இருக்கும் பொருட்களை பார்த்தவள் ஃபாதரின் கோணிப்போன காமக் கண்களை கவனிக்கவில்லை. ஜேம்ஸ் எழுந்து மேசையில் இருந்த பாத்திரத்தில் உள்ள திரவத்தை கிளாஸ் ஒன்றில் ஊற்றி குடிக்க ஆரம்பித்தான். இன்னொரு கிளாஸில் ஊற்றி தீபாவிடம் கொடுத்து 'குடிம்மா' என்றான்.

 "என்ன ஃபாதர் இது?" புரியாமல் விழித்தாள். 

"இது கார்க்கோஷா உடம்புக்கு ரொம்ப நல்லது குடிம்மா" என்றான். 

தீபா எழுந்து பாத்திரத்தை பார்த்தாள். பாத்திரத்திற்குள் ஏதோ வெள்ளையாக அடுக்கடுக்காக கிடந்தது. தீபாவிற்கு அதைப் பார்க்கும் போதே அருவருப்பாக இருந்தது. அதன் மணம் குமட்டிக் கொண்டு வந்தத. அவள் கிளாஸை மேசையில் வைத்துவிட்டு "எனக்கு இது வேணாம் ஃபாதர்" என்றாள்.

சரி பரவால்ல இரும்மா.. என்று சொல்லி விட்டு குடித்து முடித்த கிளாஸை மேசையில் வைத்துவிட்டு அவள் அருகில் வந்து இருந்தான். வந்து இருந்தவன் அவள் தோளில் கை வைத்து அவளை அணைத்தான். அவள் திமிறிக்கொண்டு எழுந்தாள். "என்ன ஃபாதர் பண்றீங்க.. ? எதுக்கு வரச் சொன்னீங்க?" என்று கோபமாக கேட்டாள். அவளுக்கு கோபத்துடன் பதட்டமும் தொற்றிக் கொண்டது. தவறான இடத்தில் வந்து வசமாக மாட்டிவிடடோம் என்று வருத்தப்பட்டாள். கோபப்படாம வாம்மா என்று சொல்லி ஜேம்ஸ் அவளைப் பிடித்து பலாத்காரமாக கட்டிலில் சாய்த்தான். பொதி கிடைக்கும் என்று ஆசைப்பட்டு வந்தவளுக்கு ஃபாதர் பாதகங்கள் ஆத்திரமாக இருந்தது. "என்ன ஃபாதர் பண்றீங்க? இதுக்குத்தான் கூப்பிட்டிங்களா?" என்று திமிறினாள். 

"எதுக்கும்மா கோபப்படுறா? உன் பிரென்டுதானே தர்சினி, அவ எப்படி அருமையா நடந்துக்கிட்டா, உன்னை மாதிரி இந்து பொண்ணுங்கதான் சும்மா அடம் பிடிச்சுக்கிட்டு.. உனக்கு பொதி வேணுமா? வேணாமா?" என்றான் ஃபாதர் ஜேம்ஸ். 

தீபாவின் ஆத்திரம் தீயாய் மாறியது. "உன் பொதியும் நீயும்" என்றவள் எகிறித் தள்ளிவிட்டு கட்டிலில் இருந்து எழுந்தாள். அவளின் இந்த கோபத்தை ஃபாதர் எதிர்பார்க்கவே இல்லை. இத்தனை வருடங்களில் அவன் ஒருபோதும் இப்படி ஆனதில்லை. எத்தனையோ கிறிஸ்தவ பெண்களிடம் அத்துமீறி இருக்கிறான். ஆனால் யாரும் இப்படி எதிர்த்தது இல்லை. தீபா காட்டிய எதிர்வினையால் ஃபாதருக்கு இந்துக்கள் என்றாலே வெறுப்பாக இருந்தது. எல்லோரையும் கிறிஸ்தவர்களாக மதம்மாற்ற வேண்டும் என்று மனதுக்குள் கறுவிக் கொண்டான். தீபா கதவைத் திறந்து கொண்டு அவள் இருந்த கட்டடத்திற்கு வந்தாள். அவள் எதையும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.

தீபா வந்ததும் வராததுமாக, "எங்கடி தீபா பொதியைக் காணோம், சாக்லேட் கொண்டு வருவன்னு பார்த்திட்டு இருந்தன்டி" என்றாள் தர்சினி. தர்சினியைப் பார்க்கும் போதே அவளுக்கு அருவருப்பாக இருந்தது. "ஃபாதர் கூட படுத்துத்தான் பொதி வாங்கி வந்தியாக்கும், என்னையும் உன்னப்போல படுக்க சொல்றியா" என்று கேட்கவும் தர்சினி அப்படியே மௌனமானாள். பொழுதும் சாய்ந்து விட்டது. இனி எதுவும் செய்ய முடியாது. வெளியே எப்படி போவது எங்கே போவது என்று எதுவுமே அவளுக்கு புரியவில்லை. எதற்கும் விடியட்டும் என்று காத்திருந்தாள்.

இன்றைய இரவும் அவளுக்கு தூக்கம் இல்லாமலேயே கடந்தது. நேற்றைய புதிரின் விடையை இன்று அவிழ்க்கத் துணிந்தாள். தூங்குவது போல பாசாங்கு செய்தவள் எழுந்து வெளியே வந்து இருளில் ஒளிந்து கொண்டாள். அவள் ஒளிந்த சிறிது நேரத்திற்குள்ளாகவே அவள் கண்ட காட்சிகள் அவளைத் தூக்கி வாரிப் போட்டது. உள்ளே இருந்து எழுந்து வரும் பெண்களும் மற்றைய கட்டடத்தில் இருந்து வரும் ஆண்களும் அங்கங்கே சரசத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள். சில ஆண்கள் கட்டடத்தின் உள்ளேயும் பெண்களுடன் உறவில் ஈடுபட்டார்கள். யாரிடமும் எந்த எதிர்ப்பும் இல்லை. கன்னியாஸ்திரிகள், பயிற்சியாளர்கள், தப்பிக்க ஒழிந்து இருப்பவர்கள் என்று அனைவரும் தவறாகவே நடந்துகொண்டாராகள். அந்த இருளிலும் ஃபாதர் ஜேம்ஸ் இருவருடன் வந்தது அவளுக்கு தெரிந்தது. தீபா படுத்திருந்த இடத்தில் வந்து தேடினார்கள். நல்ல வேளையாக அவள் அந்த இடத்தில் இல்லை. அவர்கள் கையில் மாட்டினால் என்னவாகுவேன் என்ற பயம் அவளைப் பற்றிப் பிடித்தது. அவளைக் காப்பாற்ற கூட இங்கு யாரும் இல்லை. எல்லோருக்கும் அது சாதாரண விசயம். ஆனால் தீபா மானம் மரியாதை ஒழுக்கம் என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டவள், கெட்டுப் போய் வாழ்வதைவிட செத்துப் போகலாம் என்று நினைத்தாள். அந்த கடற்கரை காற்றிலும் அவளுக்கு வேர்த்து ஊற்றியது. இந்த நரகத்தில் இருந்து எப்படி தப்பிக்க போகிறேன் என்று பயந்தாள். அப்போதுதான் அவள் தந்தை பயந்ததன் காரணம் புரிந்தது. 

தீபா இரவு முழுவதும் சிந்திக்கலானாள். அம்மா அப்பாவிடம் சென்று என்னவென்று சொல்வது? இங்கே நடப்பதை எப்படி சொல்வது? அப்பா தனது முடிவில் உறுதியாக இருந்திருக்கலாம் தானே? எதற்காக அம்மாவின் பேச்சிற்கு மாறினார்? தர்சினி இவ்வளவு மோசமானவளா? தர்சினி அம்மா எல்லாம் தெரிந்து தான் எங்களை கொண்டுவந்து விட்டாரா? தர்சினி, அவங்க அம்மா, ஃபாதர், இங்கே உள்ள சிஷ்டர் எல்லோரும் தப்பானவங்களாத்தானே இருக்காங்க, கிறிஸ்டியனா மாறினாலே எல்லோரும் எப்படி தப்பானவங்களா ஆயிடுறாங்க?

இப்படி அசிங்கமான வாழ்க்கை வாழ்வதைவிட போராடி மாண்டால் பெருமைதானே? எதற்காக நாம் ஒழிந்து ஓடவேண்டும்? அவள் மனதில் விடைதெரியாத கேள்விகள் எழுந்துகொண்டே இருந்தது.

பொழுது புலர ஆரம்பித்திருந்தது. இரவு முழுவதும் காமக் களியாட்டம் ஆடிய ஃபாதர்கள், கன்னியாஸ்திரிகள் என்று அனைவரும் அவரவர் இடங்களுக்கு சென்றுவிட்டார்கள். இதுதான் தப்பிக்க சரியான நேரம் என்று முடிவு செய்தாள் தீபா. ஒருவாறு வேலியால் புகுந்து சர்ச் வளாகத்திற்கு வெளியே வந்துவிட்டாள். இனி வீட்டிற்கு செல்வதில்லை என்பதில் உறுதியாக இருந்தாள். நன்றாக விடியும் வரை ஒரு இடத்தில் காத்திருந்தாள்.

அவள் காத்திருக்கும் இடத்திற்கு அருகில்தான் புதிய போராளிகள் இணைப்பு செயலகம் இருந்தது. இன்பன் தலைமையிலான கணனிப் பிரிவினரின் இணைப்பு செயலகம் அது. இன்பன்தான் பொறுப்பாளர் என்றாலும் கதிர்தான் புதிய போராளிகளை பிடிப்பது, அதற்கான திட்டங்களை இடுவது என்று தீவிரமாக ஈடுபட்டு வந்தான். போராட ஆட்களைப் பிடிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருந்தது. ஆனால் ஆட்களைப் பிடிப்பது ஒன்றுதான் கதிரின் நோக்கம். ஏன் பிடிக்கிறான் எதற்கு பிடிக்கிறான் என்பதற்கெல்லாம் அவனிடம் காரணம் இல்லை. ஆட்களைப் பிடிப்பது அவனுக்கு பிடித்திருந்தது, அதனால் பிடித்தான். தீபா இருந்து தப்பித்து வந்த வலைஞர்மடம் சர்ச்மீதும் கதிருக்கு ஒரு கண் இருந்தது. பலநூறுபேர் உள்ளே ஒழிந்திருப்பது அவனுக்கு தெரியும். அவனுக்கு மட்டுமல்ல இன்பனுக்கும் தெரியும். ஆனால் சர்ச்சுக்குள் சென்று பிடித்தால் பிரச்சினை என்று சொல்லி இன்பன் தடுத்ததால் கதிர் உள்ளே செல்லவில்லை. ஆனால் எப்படியாவது ஒரு சந்தர்ப்பம் வரும், உள்ளே இருப்பவர்களை பிடிக்கவேண்டும் என்பதில் கதிர் உறுதியாகவே இருந்தான். அவனுக்கு சர்ச் பள்ளி என்ற பேதமெல்லாம் கிடையாது, புதிதாக போராளிகளை உருவாக்க வேண்டும். அது ஒன்றுதான் அவன் உறுதியான இலக்கு.

நன்றாக விடிந்துவிட்டது. புதிய போராளிகள் இணைப்பு செயலகத்தின் வாசலில் இன்று எங்கு செல்வது என்று யோசித்துக் கொண்டே நின்றான் கதிர். வராது வந்த மாமணியாக அவன் முன்னால் வந்து நின்றாள் தீபா. "அண்ணா நான் இயக்கத்தில சேரணும்" என்று அவள் சொன்ன வார்த்தையை கேட்டு உள்ளே இருந்த இன்பனும் வெளியே வந்துவிட்டான். வீடு வீடாகச் சென்று கஷ்டப்பட்டு பிடித்தாலே யாரும் நிற்கமாட்டேன் என்கிறார்கள். இந்த காலத்தில் இப்படி ஒரு பெண் தானாக போராட வருவதை அவர்களால் நம்பவே முடியவில்லை. இது கனவா நிஜமா என்று அவர்களால் நம்பவே முடியவில்லை.

அவளுக்கு ஜஏதோ பிரச்சினை என்று மட்டும் இருவருக்கும் புரிந்தது. "என்ன பிரச்சினை தங்கச்சி? நீங்க எங்க இருந்து வாறிங்க?" என்று கேட்டான் கதிர். பிள்ளை பிடியில் இருந்து காப்பாற்ற ஃபாதர் கூட விட்டது முதல், ஃபாதர்ட்ட இருந்து தப்பித்து புதிய போராளிகள் இணைப்பு செயலகம் வந்தது வரை தீபா ஒன்று விடாமல் முழுவதுமாக சொன்னாள். எந்த ஃபாதர் எந்த சர்ச் என்று எதுவும் தெரியாதது போல திரும்பவும் கேட்டான் கதிர். "ஜேம்ஸ் ஃபாதர், வலைஞர்மடம் சர்ச் அண்ணா" என்று அழுத்தம் திருத்தமாக சொன்னாள் தீபா. இன்பனை நோக்கி திரும்பினான் கதிர். இன்பனால் எதுவும் பேச முடியவில்லை. "அண்ண இண்டைக்கு பின்னேரம் வலைஞர்மடம் சர்ச்சுக்க இறங்கிறம், அந்த ஜேம்ஸ்ஸ இழுத்துப் போட்டு அந்த இடத்திலயே சுடுறம், எல்லா பெடியளையும் மதியத்துக்குள்ள இங்க வரச்சொல்லுறன்" என்று கொதித்தான் கதிர். இப்போது பிடிக்க உள்ளே செல்வதை மறுக்க முடியவில்லை இன்பனால். "கதிர்!, ஃபாதர் மேல கை வைச்சு போடாத பிறகு பிரச்சினை வேற மாதிரி ஆயிடும்" என்றான் இன்பன். இன்பன் சொன்ன வார்த்தைகள் மிரட்டலா அக்கறையா என்று கதிருக்கு புரியவில்லை. அவன் வார்த்தைகள் பிடிக்கவில்லை என்றாலும் கதிருக்கு உள்ளே சென்று பிடிக்க அனுமதி கிடைத்ததே போதும் என்றாகி இருந்தது. 

மாலை வேளையில் கதிரும் அவனது குழுவினரும் சர்ச் வளாகத்திற்குள் சென்றார்கள். கதிர் குழுவுக்குள்ளேயும் ஒரு கறுப்பாடு இருந்தது. அவர்கள் செல்வதற்கு முன்னரே யோரோ தகவல் கொடுத்துவிட்டார்கள். கட்டட கூரை- சீலிங் தகடுகளுக்குள் ஃபாதருக்கு நெருக்கமான பலர் மறைக்கப்பட்டு விட்டார்கள். மறைக்கப்பட்ட இடங்கள் கதிராலோ அவர்கள் குழுவாலோ இனங்காணப்பட முடியவில்லை. இருநூறு முன்னூறு பேர் ஒன்றாக கிடைத்த சந்தோஷத்தில் கலைத்துக் கலைத்துப் பிடித்தார்கள். பலர் அதற்குள்ளும் தப்பித்து ஓடினார்கள். கதிருக்கு ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. இந்த அவதிக்குள்ளும் ஜேம்ஸ் ஃபாதரைப் பிடித்து கன்னம் சிவக்க ஐந்தாறு அறைவிட்டான். உனக்கு சாவு என்னாலதான் என்று எச்சரித்து விட்டு புறப்பட்டான்.

பிடிப்பவர்கள் அனைவரும் வாகனங்களுக்குள் ஏற்றப்பட்டு பயிற்சி முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள். எல்லோரையும் பயிற்சி முகாமிற்கு அனுப்பிய கதிர் தீபாவை மட்டும் பயிற்சிக்கு அனுப்பவில்லை. நாலு நாள் சூட்டுப்பயிற்சி கொடுத்துவிட்டு, அஞ்சாவது நாள் ஏதோ ஒரு காவலரணில் விட்டு விடப்போகிறார்கள். இதில எத்தனை உயிரோட திரும்பும் என்றே தெரியாது. உதுகள் உயிரோட இருந்துதான் யாருக்கு என்ன லாபம்? செத்துத் தொலையட்டும் என்று நினைத்தவன், தீபா மட்டும் சாகக் கூடாது என்று நினைத்தான்.

காவலரண்களில் கூட கலவிகொண்ட எத்தனையே கழுசறைகளைக் கண்டவன் கதிர். ஒழுக்கமே இல்லாதவர்கள் சாகலாம், ஆனால் ஒழுக்கமான ஒருசிலராவது வாழவேண்டும் என்று நினைத்தான். தீபாவை பயிற்சி முகாமிற்கு அனுப்பாமல் வீட்டிற்கு அனுப்புவது என்று முடிவு செய்தான். இன்பன் தனக்கு வேண்டியவர்கள், உறவினர்கள் என்று எத்தனையோ பேரை திருப்பி அனுப்பியிருக்கிறான்.பிடிக்காமல் விடச் சொல்லி இருக்கிறான். ஆனால் கதிர் அப்படி ஒருபோதும் செய்ததில்லை. இப்போது முதல்முறையாக தானாக சேர்ந்த ஒரு பெண்ணை வீட்டிற்கு அனுப்ப முடிவெடுத்தான். கதிரின் இந்த முடிவை இன்பனால் கூட மீறமுடியாது.

தீபா என்னவானாள்?

தொடரும்...



Sunday, 22 May 2022

புலிகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்- பகுதி 1 (வரலாற்றுக் கதை)

முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணத்தில் இது பத்தொன்பதாவது இடம். எங்கே போகிறோம் என்று தெரியாமல்தான் பயணித்தார்கள், ஆனால் இன்று முள்ளிவாய்க்காலை அண்மித்து விட்டார்கள். வன்னிவிளாங்குளத்தில் இருந்து புறப்பட்ட நமசிவாயம் குடும்பம் பதினெட்டு இடங்களில் குடில் அமைத்துவிட்டார்கள். ஆனால் எதிலும் ஓரிரு வாரங்களுக்குமேல் இருக்க முடியவில்லை. இப்போது இது பத்தொன்பதாவது குடில். ரெட்டைவாய்க்கால் சந்தியில் இருந்து வலைஞர்மடம் செல்லும் பாதையில் ஓரிடத்தைப் பிடித்து குடிலமைத்து விட்டார்கள்.

நமசிவாயத்தின் ஒரே பிள்ளை தீபா. கேட்டது எல்லாம் கிடைக்கும் செல்லப்பிள்ளை. வயல், வளவு, மாடு, ஆடு என்று செல்வச் செழிப்புடன் வாழ்ந்த குடும்பம் என்பதால், வாழ்க்கை பற்றிய பயம் ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால் இன்று ஒருவேளை உணவை நின்மதியாக உண்பதே பிரச்சினையாக இருந்தது. வறுமை, பசி என்றால் என்னவென்றே தெரியாமல், வேளா வேளைக்கு விதம் விதமாக சாப்பிட்டு வளர்ந்த அவளுக்கு இவையெல்லாம் புதிதாக இருந்தது. 

தொடர்ச்சியான இடப்பெயர்வால் படிப்பும் குழம்ப; பதினோராம் வகுப்பு தேர்வுகூட அவளால் எழுத முடியவில்லை. தீபாவின் குடும்பம் குடிலமைத்த இடத்திற்கு அருகில்தான் தர்சினியின் குடும்பமும் குடிலமைத்து இருந்தது. வன்னிவிளாங்குளத்திலும் தீபாவின் வீட்டிற்கு அருகில்தான் தர்சினியின் வீடு. தர்சினியும், தீபாவும் ஒரே வகுப்பில்தான் படித்தார்கள். இன்று இடம் பெயர்ந்து வரும்போதும் ஒன்றாகவே வந்திருந்தார்கள். 

தர்சினியின் குடும்பம் சொல்லிக்கொள்ளும்படி வசதியான குடும்பம் இல்லை. ஏதோ அன்றாடம் உழைத்து வயிற்றைக் கழுவுபவர்கள். தகப்பன் கூலி வேலைக்கு சென்று கொண்டுவரும் பணத்தில் குடும்பத்தின் சீவியம் ஓடியது. தர்சினி குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை. அவளுக்கு மூத்தவன் இயக்கத்தில் இணைந்து இறந்து போய்விட்டான். அவளுக்கு கீழே நான்கு சகோதரர்கள். ஊரில் இருக்கும் போது தீபாவின் தாய் லட்சுமிதான் பார்த்து பாராமல் உதவிசெய்வார். அரிசி, மா, தேங்காய் என்று கேட்காமலேயே கொடுத்து விடுவார். ஆனால் இன்று அவர்களுக்கே கஷ்டம். அடுத்தவருக்கு எப்படி உதவி செய்வது. ஆனாலும் ஏதோ முடிந்ததை செய்தார்.

முன்பு ஜெயசிக்குறு சண்டை நடந்தபோதும் வன்னிவிளாங்குளத்தில் இருந்தும் ஒருமுறை இடம்பெயர்ந்தார்கள். அப்போது தீபாவின் குடும்பம் யோகபுரத்தில் தங்கிவிட, தர்சினியின் குடும்பம் மன்னார், மடுவிற்கு இடம்பெயர்ந்து சென்றது. அங்கே மடு கிறிஸ்தவ தேவாலயத்தை அண்டித்தான் அகதிகள் முகாம் அமைக்கப்பட்டிருந்தது. கிறிஸ்தவ பாதிரிகள்தான் முகாம் நிர்வாகம், நிவாரணம் என்று எல்லாவற்றையும் முடிவு செய்தனர். போனவுடன் நான்கு நாட்களுக்கு எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்தது. பிறகு நிலமை மாறிவிட்டது. கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால்தான் உணவுப் பொதிகள் கிடைக்கும், கொட்டகை கிடைக்கும் என்று நிர்ப்பந்தித்தார்கள். வறுமை வயிற்றை வதைக்க வேறுவழியில்லாமல் தர்சினியின் தந்தையும் மதம்மாற முடிவெடுத்தார். கோயில் குளம் விரதம் என்று வறுமையிலும் தடம்மாறாமல் வாழ்ந்த தர்சினியின் தாய் ரஞ்சனிக்கு அதில் இஷ்டமே இல்லை. ஆனாலும் வேறு வழியில்லாமல் போனது, உதவி செய்வதற்கும் யாரும் இல்லை, அகதி முகாம்களில் வேலையும் கிடைக்காது, எத்தனை நாட்களுக்கு தான் வயிற்றில் ஈரத்துணியைப் போட்டுக் கொண்டு தூங்குவது. மனமே இல்லாமல் மதம் மாற சம்மதித்தாள் ரஞ்சனி. வயிற்றுப் பாட்டிற்காய் வாழ்க்கையை விற்பது அசிங்கமாக இருந்தாலும் அவர்களுக்கு வேறு வழியில்லை.

அன்றைய அசிங்கம் வேறு, இன்றைய அவலம் வேறு. ஒருவாறு தங்கள் வசதிக்கேற்ப குடில் அமைத்து தங்கிவிட்டார்கள். தீபாவின் தந்தை வரும்போதே மரக் குற்றிகள், தகரம், பைகள் என்று உழவியந்திரத்தில் ஏற்றி வந்ததால், குடிலுகுள்ளாகவே பதுங்கு குழி வெட்டி அதற்கு மேல் மரம், மண் மூட்டை, தகரம் என்று போட்டு ஓரளவு பாதுகாப்பான இருப்பிடத்தை அமைத்துவிட்டார். உழவியந்திர பெட்டிக்கு கீழே அமைக்கப்பட்ட இன்னும் ஒரு பதுங்குகுழி சமையற்கூடம் ஆனது. அன்றைய அகதி வாழ்வில் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் அவர்கள் அமைக்கும் பதுங்கு குழிகளிலும், பதுக்கி வைத்திருந்த உணவுப் பொருட்களிலும்தான் வெளிப்பட்டது.

பதுங்கு குழியின் மேல் உள்ள தகரத்தில் விழும் எறிகணை சன்னங்களும், ஆறிப்போய் வந்து விழும் தோட்டாக்களும்கூட அவர்களுக்கு பழக்கப்பட்டு விட்டது. அந்த சப்தங்கள் கூட சகஜமாக மாறிவிட்டது. பதுங்கு குழிகளுக்குள்ளேயே முக்கால்வாசி வாழ்க்கை போனது. எறிகணை வீச்சும், துப்பாக்கி சூடும் தணிந்திருக்கும் நேரத்தில் மட்டுமே வெளிக்காற்றை சுவாசிக்க முடிந்தது. அந்த காற்றில் கூட கந்தகம் மணந்தது. தொடர்ந்து பதுங்கு குழிகளுக்குள்ளேயே இருப்பது என்பது மிகவும் கஷ்டமான காரியம். தீபாவிற்கு பொழுதே போகவில்லை. எறிகணை வீச்சு இல்லாத நேரத்தில் பக்கத்து பதுங்கு குழி ஒன்றில் இருப்பவர்களுடன் அறிமுகம் ஆகிவிட்டாள். அவர்கள் பதுங்கு குழியில் டீவி வைத்து படம் பார்ப்பதை அறிந்தாள். அவளுக்கும் பொழுது போக்க வேறு வழியில்லை. தீபாவும் அங்கே படம் பார்க்க சென்று விடுவாள். 

பக்கத்தில் உள்ள பதுங்கு குழிக்குச் சென்று படம் பார்ப்பதை நமசிவாயம் விரும்பவில்லை. ஓரிரு நாட்களில் டீவி, டெக், ஜெனரேட்டர் என்று வாங்கிவந்துவிட்டார். இப்போது தீபாவிற்கு வெளியே செல்வதும் தேவையில்லாமல் போனது. எறிகணை வீச்சு, துப்பாக்கி சூடு எல்லாவற்றையும் மறந்து, வேளாவேளைக்கு உண்பது, படம் பார்ப்பது, தூங்குவது என்று நாட்கள் போனது. ஆனால் அந்த நின்மதிகூட ஓரிரு நாட்களுக்கு மேல் நிலைக்கவில்லை. புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு வேறு நிலையை அடைந்திருந்தது.

வீட்டிற்கு ஒருவர் கட்டாயம் புலிகள் இயக்கத்தில் இணையவேண்டும் என்று சொல்லித்தான் இதுவரை ஆட்சேர்த்தவர்கள், இப்போது வலுவுள்ள அனைவரும் இணையவேண்டும் என்று தம் நிலைப்பாட்டை மாறியிருந்தார்கள். முன்பு வீட்டில் ஒரு பிள்ளை என்றால் விட்டு வைத்தவர்கள், இப்போது அதுவெல்லாம் கிடையாது. கண்ணில் காண்பவர்களை எல்லாம் விரட்டி விரட்டிப் பிடித்தார்கள். அவ்வப்போது மக்கள் வசிக்கும் கூடாரங்களை சுற்றி வளைத்து உள்ளே இருக்கும் இளைஞர் யுவதிகளை பிடித்து வாகனங்களில் ஏற்றிச் சென்றார்கள். தீபா இருக்கும் பகுதியிலும் சுற்றி வளைத்து தேடினார்கள். அண்டா ஒன்றிற்குள் மறைந்து வைத்து ஒருவாறு காப்பாற்றி விட்டார் நமசிவாயம். அதுபோல தர்சினுயும் மண்மூட்டைக்கு நடுவில் ஒளிந்திருந்து தப்பித்து விட்டாள். பிள்ளைகளை பறிகொடுத்தவர்கள் மண்ணை அள்ளிக் கொட்டி திட்டினார்கள். பிள்ளைகளை பறிகொடுத்தவர்களின் ஓலமும், அவலக்குரலும் அந்தப்பகுதியையே பதைபதைக்க வைத்தது. பிள்ளைகளை காப்பாற்றியவர்களால் கூட மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை இனி எப்போது வருவார்கள், பிள்ளைகளை எப்படி காப்பாற்றுவது என்று பதைபதைப்புடன் இருந்தார்கள்.

அன்றைய இரவு முழுவதும் யாரும் தூங்கவில்லை. நமசிவாயமும் மனதில் நின்மதியில்லாமல் தவித்தார். ஒரே மகள், அவர்களின் வாழ்க்கையே அவள் மட்டுந்தான். அவளையும் பறிகொடுத்துவிட்டு என்ன செய்வது என்று தவித்தார். லட்சுமியும் நமசிவாயமும் ஒருவரை ஒருவர் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்; பொழுது விடிந்துவிட்டது.

அன்று காலை அமைதியாகவே இருந்தது, அதுவரை துப்பாக்கிச்சூடும் ஆரம்பிக்கவில்லை, எறிகணைகளும் வீசப்படவில்லை. அந்த நேரத்தில் பதுங்கு குழி வாசலில் நின்றாள் ரஞ்சினி. "லட்சுமி அக்கா! உந்த கோதாரி விழுவார் இனி எப்ப பிள்ளை பிடிக்க வாறாங்களோ தெரியாது, எங்கட வீடுகள்ள பிள்ளையள் இருக்கிறத எவன் காட்டிக் கொடுப்பான் எண்டும் தெரியாது, அதான் தர்சினிய ஃபாதர் கூட விடலாம்னு இருக்கிறோம், வேணும்னா தீபாவையும் அங்கயே கொண்டு போய் விட்டுடலாம்" என்றாள்.

விடிய விடிய தீபாவின் எதிர்காலம் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவர்களுக்கு ரஞ்சினி சொல்லியது ஏதோ போல தோன்றினாலும், ஃபாதர் கூட விடுவது என்பதை நமசிவாயத்தால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. "அவங்களோட விடுறதைவிட பிள்ளை செத்தால் கூட பரவாயில்ல என்றார்". ஆனாலும் லட்சுமிக்கு பிள்ளையைக் காப்பாற்ற அது சரியான வழியாகவே பட்டது. "சர்ச்சுக போய பிள்ளைங்களை பிடிக்க மாட்டாங்கய்யா, சாப்பாட்டுக்கும் பிரச்சினை வராது, நிறைய பிள்ளைங்க ஏற்கனவே உள்ள இருக்குதாங்கய்யா, அதாங்கய்யா கேட்டன், சாயந்திரம்தான் தர்சினியை கூட்டிற்று போறம், நீங்க யோசிச்சிட்டு சொல்லுங்கய்யா" என்று சொல்லிவிட்டு ரஞ்சினி தன் பதுங்கு குழியை நோக்கி நடந்தாள்.

நமசிவாயம் மனதில் கனத்த அமைதி. ஓடாத டீவியை வெறித்துப் பார்த்தபடி இருந்தார். டீவி பார்க்கவே தன் மகளை பக்கத்து குடிலுக்கு அனுப்ப விரும்பாதவர் அவர், பாதிரியுடன் அனுப்ப தயாராக இல்லை. லட்சுமியோ விடுவதாக இல்லை. அவள் வெள்ளை மனதில் நஞ்சை தூவிவிட்டாள் ரஞ்சினி. அவர் அமைதியைக் குலைத்து அடம்பிடிக்கத் தொடங்கினாள்.

(தீபாவின் வாழ்க்கை என்னவானது.?)

தொடரும்...


(கோப்புப் படம்)

Monday, 2 May 2022

இஸ்லாத்தின் உண்மையான கடவுள் யார்?

 லா அல்லாஹ்

லாத் அல்லாஹ்

அல் அல்லாஹ்

இலா அல்லாஹ்


சுபன் அல்லாஹ்

யா அல்லாஹ்


இஸ்லாமியர்கள் தாம் வழிபடுவது ஒரே இறைவன் என்று சொன்னாலும், பண்டைய மத்திய கிழக்கு நாடுகளில் வழிபாட்டில் இருந்த தெய்வங்களின் பெயர்களை குர்ஆன் ஹதீஸ் மற்றும் வழிபாடு என்பவற்றில் குறிப்பிட்டே வருகிறார்கள். 

இவ்வாறு இஸ்லாமியர்கள் குறிப்பிடும் தெய்வங்களில் யா அல்லாஹ், இல் அல்லாஹ், சுபான் அல்லாஹ், அல் அல்லாஹ், லா அல்லாஹ், லாத் அல்லாஹ் என்பவை குறிப்பிடத்தக்கவை. இவ்வாறான தெய்வங்களின் பெயர்களை அவர்கள் பயன்படுத்துவதை நீங்களே பலமுறை கேட்டிருக்கலாம். 

இங்கு குறிப்பிடப்படும் தெய்வங்கள் அனைத்தும் சந்திர வழிபாட்டு தெய்வங்களாகும். இஸ்லாமியர்கள் தமது மதத்தின் குறியீடாக பயன்படுத்தும் பிறை மற்றும் உடுக்குறி என்பவை இந்த சந்திர வழிபாட்டின் தொடர்ச்சியே. 

இங்கு குறிப்பிடப்படும் இலா அல்லாஹ் என்பது இந்து புராணக் கதைகள் குறிக்கும் இலா தெய்வமாகும். இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் பிறையுடன் சேர்ந்த நட்சத்திரம் இந்த இலா நட்சத்திரம் எனும் இலா அல்லாஹ்வே. ஆணாகவும் பெண்ணாகவும் மாறி மாறி வருவது இலா என்பது நம்பிக்கையாகும்.

உருவமற்ற இறைவன், ஒரே இறைவன், உருவ வழிபாட்டு மறுப்பு என்பவை எல்லாம் இஸ்லாமியர்கள் கூறும் பொய்களேயாகும். 

இஸ்லாமியர்கள் இத்தனை தெய்வங்களை வணங்குகிறார்கள்.இவற்றில் எது உண்மையான தெய்வம் என்று சொல்வார்களா?

Saturday, 30 April 2022

ஆங்கில மொழி யாருடைய மொழி?

ஆங்கிலம் என்பது சர்வதேச மொழியா? பிரித்தானியர்களின் ஆட்சி மொழியா? பிரித்தானிய காலனித்துவ அடிமைகளின் மொழியா?

இன்று நம்மில் பலரும் நம்பிக்கொண்டிருக்கும் பொய்களில் முதன்மையான பொய் ஆங்கிலம் சர்வதேச மொழி என்பது. இன்னொரு பொய் ஆங்கிலம் பிரித்தானிய மக்களின், பிரித்தானிய அரசர்களின் ஆட்சி மொழி என்பது.

உண்மையில் ஆங்கிலம் என்பது ஆங்கிலோ சாக்சன் என்ற இரு நாடோடி வேண்டுவ இனங்களின் கலப்பினால் உண்டான மொழியாகும். ஸ்கன்டினேவிய நாடுகளை பூர்வீகமாக கொண்ட ஆங்கிலோ சாக்சன் இனங்கள் ஜேர்மனி பகுதியில் சிலகாலம் வசித்து பின்னர் பிரித்தானியப் பகுதிகளை அடைந்துள்ளனர் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவர்கள் பிரித்தானியாவில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் கரையோர வேடுவர்களாக வாழ்ந்துள்ளனர். இவர்கள் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வசிக்கும் கடையர்கள் என்ற கரையோர வேடுவர் சமூகத்தை ஒத்த ஒரு சமூகமாகும்.

பதினெட்டாம் நூற்றாண்டில் தொழில் புரட்சி ஏற்பட்டு சமூக மாற்றம் ஏற்படும் வரையில்; பிரித்தானிய அரசின் ஆட்சி மொழியாகவும், அரச குடும்பத்தின் தொடர்பாடல் மொழியாகவும் பிரெஞ்சு மொழியே இருந்துள்ளது. மன்னர் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் பிரித்தானிய பிரபுக்களும் பிரெஞ்சு மொழியில் மட்டுமே பேசியுள்ளனர். 

பிரித்தானிய அரசின் காலனித்துவ காலத்தில் உலகம் முழுவதும் அடிமை வியாபாரமும், அடிமைத் தொழிலாளர் பயன்பாடும் சர்வ சாதாரணமாக நடந்தது. இதனால் பல்வேறுபட்ட நாடுகளை, பல்வேறுபட்ட நாடுகளின் அடிமைகளை கட்டுப்படுத்த வேண்டிய, கட்டளை இடவேண்டிய தேவை பிரித்தானிய அரசுக்கு உருவானது. ஆனால் தம் மன்னர் குடும்பமும், பிரபுக்கள் குடும்பமும் பேசும் உயர்ந்த பிரெஞ்சு மொழியில் அடிமைகளுக்கு கட்டளை இடவோ, அடிமைகள் தங்களுக்குள் உரையாடவோ பிரித்தானிய அரச குடும்பம் விரும்பவில்லை. அதனால் பிரித்தானிய பகுதியில் வசித்த கரையோர வேடுவர்களான ஆங்கிலோ மக்களின் மொழியை அடிமைகளுக்கு கட்டளை இடுவதற்காக பயன்படுத்துவது என்றும், அடிமைகள் தங்களுக்குள் உரையாட ஆங்கிலோ மக்களின் மொழியை அனுமதிப்பது என்றும் முடிவு செய்தார்கள். 

இதன் காரணமாக பிரித்தானிய அரசின் காலனித்துவ நாடுகள் அனைத்திலும் ஆங்கில மொழியை கட்டளை இடும் மொழியாக பயன்படுத்தினார்கள், காலனித்துவ அடிமைகள் அந்த மொழியை கற்பதன் மூலம் தங்களின் கட்டளைகளை புரிந்து கொண்டு செயற்படுவார்கள் என்பதால் அடிமைகள் அனைவருக்கும் ஆங்கில மொழியை கற்பித்தார்கள். அதுதவிர அவர்கள் அடிமைப் படுத்திய நாடுகளின் நிர்வாக மொழியாகவும் ஆங்கில மொழியைப் பயன்படுத்தினார்கள்.

அடிமைகள் அனைவரும் ஆங்கிலம் கற்பதை ஊக்குவிக்கும் முகமாக ஆங்கிலம் கற்ற அடிமைகளுக்கு, ஏனைய அடிமைகளை கட்டுப்படுத்தும் பதவிகளையும், பட்டங்களையும் வழங்கினார்கள். ஆங்கிலம் பேசும் வெள்ளையின விலைமாதர்களை அழைத்து வந்து ஆங்கிலம் தெரிந்தால் அவர்களை அடைய முடியும் என்று ஆசை காட்டினார்கள். விலைமாதர்கள் அடைவதற்காக ஆங்கிலம் கற்றவர்கள் அக்காலத்திலும் அதிகம்.

பிரித்தானிய அரசு தன் காலனித்துவ நாடுகள் அனைத்திலும் ஆங்கில மொழியை நிர்வாக மொழியாகப் பயன்படுத்திய போதும், தன் அடிமைகள் அடிமை விசுவாசிகள் அனைவரும் ஆங்கில மொழியை கற்று பயன்படுத்த அனுமதித்த போதும், பிரித்தானிய அரசின் அலுவலத்திலோ, மன்னரின் அரண்மனைக்குள்ளோ ஆங்கிலம் பேச அனுமதிக்கப் படவில்லை. 

ஆங்கிலம் அடிமை மொழி என்பதிலும், அடிமைகளுக்கான மொழி என்பதிலும் பிரித்தானிய அரசு மிகவும் உறுதியாகவே இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் பிரித்தானியாவில் புரட்சி ஏற்பட்டு மன்னர் வம்சத்தின் அதிகாரம் குறைக்கப்படும் வரையில் ஆங்கிலம் அரண்மனைக்கு வெளியேதான் காத்திருந்தது. அதுவரை அடிமைகளாக இருந்தவர்கள் பிரித்தானிய அரசில் செல்வாக்குச் செலுத்தும் நிலைக்கு மாறினார்கள். அரண்மனைக்குள்ளும், ஆட்சி மொழியாகவும் ஆங்கிலம் இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்தார்கள்.

இதன்போது உலகம் முழுவதும் ஆங்கிலம் கற்ற பிரித்தானிய அடிமைகளே அதிகமாக இருந்தார்கள். ஆங்கிலம் தெரிந்தவர்கள் பிரித்தானிய அரசின் அடிமைகள் என்பது ஓர் அடையாளமாக விளங்கியது. இதனை மறைப்பதற்காக அந்த பிரித்தானிய அடிமைகள் சேர்ந்து உண்டாக்கிய புரட்டுக்களே ஆங்கிலம் சர்வதேச மொழி என்பதும், ஆங்கிலம் கற்றவர்கள் அறிவாளிகள் என்பதும்.

ஆங்கிலம் என்பது அறிவல்ல அது ஒரு மொழி. அது சாதாரண மொழியல்ல, அடிமைகள் தங்களுக்குள் பேசவும், அடிமைகளுக்கு அவர்களின் எஜமானர்கள் கட்டளை இடவும் உருவாக்கிய மொழி.

உண்மைகளை உணர்ந்து கொள்வோம். நவநாகரீக அடிமைகளாக வாழ்வதில் இருந்து மீண்டெழுவோம்.



Friday, 29 April 2022

கிறிஸ்து பிறந்தது கி.மு 45 ஆம் ஆண்டிலா?

 சேர் ஐசாக் நியூட்டன் அன்றைய யூலியன் நாட்காட்டியின் 1642 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி கிறிஸ்மஸ் தினத்தில் பிறந்தார்.

அன்றைய தினத்தின் கிரிகேரியன் நாட்காட்டி(இன்றைய ஆங்கிலேய நாட்காட்டி) திகதி ஜனவரி 4ஆம் திகதி 1643 ஆம் ஆண்டு.

அப்படியானால் இன்றைய ஆங்கிலேய நாட்காட்டியின் படி கிறிஸ்மஸ் கொண்டாடப்பட வேண்டிய நாள் ஜனவரி 4 தானே? அப்படியானால் ஏன் டிசம்பர் 25 இல் கொண்டாடுகிறார்கள். கிரிகேரியன் நாட்காட்டியின் டிசம்பர் 25 என்பது யூலியன் நாட்காட்டியின் டிசம்பர் 15 ஆம் திகதி அல்லவா?

சரி, யூலியன் நாட்காட்டி என்பது யூலியஸ் சீசரால் அவரது காலத்தில் அதாவது இன்றைய ஆங்கிலேய நாட்காட்டிப்படி கி.மு 46 இல் அறிமுகப்படுத்தப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் நியூட்டனின் பிறந்த நாள் என்பது யூலியன் நாட்காட்டி படி 1642

(ஆங்கில நாட்காட்டிப்படி) கிரிகேரியன் நாட்காப்படி 1643 ஆக இன்றைய ஆங்கிலேய நாட்காட்டி மற்றும் யூனியன் நாட்காட்டி இடையேயான கால வேறுபாடு ஒரு வருடம் மட்டுமே.

அப்படியானால் கிறிஸ்து பிறந்தது கி.மு 45 ஆம் ஆண்டிலா? அப்படி என்றால் 2022 என்ற இந்த வருடம் கி.பி 2067 ஆ? இல்லை இது 2022 ஆம் ஆண்டு தான் என்றால் கி.மு கி.பி என்பது எல்லாம் பொய்யா?

Sunday, 24 April 2022

ஈழத்தில் உருவான சோழவம்சம்- வரலாற்றுக் கதை

எட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் திசையுக்கிர சோழன் எனும் சிற்றரசன் உறையூரை ஆண்டுவந்தான். ஒருகாலத்தில் பேரரசாக விளங்கிய சோழர்கள் அன்று சிற்றரசர்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்கள். பல்லவ மன்னர்களின் தயவில் ஆட்சி செய்தார்கள். ஆனால் அது கூட இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் அவர்களை வாட்டியது. தம் சோழ வம்சமே அழிந்துவிடுமோ என்று சோகத்தில் மூழ்கினார்கள்.

உக்கிர சோழனுக்கு ஒரேயொரு மகள். பெயர் மாருதப்புரவீகவல்லி. அழகும், அறிவும் பொருந்திய வீரமிகு பெண்ணாக வளர்ந்து வந்தாள். மன்னன் மட்டுமல்லாமல் மக்களும் அவளைப் பார்த்து மகிழ்ந்தார்கள். அந்த மகிழ்ச்சி நீண்டநாள் நிலைக்கவில்லை. குன்மநோய் அவளைப் பற்றிப் பிடித்தது. குன்மத்தால் உண்டான கூனல், அதனால் உண்டான முகச்சிதைவு என்று அவளின் உடல் கூனி முகம் குதிரை போல் ஆகிவிட்டது. அவளின் அவலட்சணமான தோற்றத்தை கண்டு அரசகுமாரர்கள் எவரும் மணமுடிக்க மறுத்தனர். வம்சத்தின் ஒரேயொரு வாரிசும் உருக்குலைந்து போனது, மணவயதைத் தொட்டும் மணமுடிப்பார் யாருமில்லை; நாடே வருந்தியது.

பேரரசை இழந்து சிற்றரசாய் ஆனோம். இன்று வம்சத்தையும் இழக்கும் நிலைக்கு ஆளாகினோம். சோழ வம்சத்திற்கு ஏனிந்த துயரம் என்று வருந்தினான் திசையுக்கிர சோழன். சோழ நாட்டின் புகழ்பெற்ற வைத்தியர்கள் அனைவரும் முயற்சித்து பார்த்துவிட்டார்கள், ஆனால் யாராலும் அவளது நோயை நீக்க முடியவில்லை. துயரம் தோய்த்த மன்னனின் முகத்தை மந்திரியால் பார்க்க முடியவில்லை. மன்னனின் துயர்தீர்க்க சங்கல்பம் பூண்டார் மந்திரியார். கருவூரார் பரம்பரையில் வந்த சித்தர் சாந்தலிங்கனை அரண்மனைக்கு அழைத்து வந்தார். 

இளவரசியின் நாடி பிடித்துப் பார்த்த சித்தர் கண்களை மூடி கருத்தேற்றி விட்டு "இது வெறும் குன்மமில்லை, பூர்வ ஜென்ம பாபத்தால் உணடான சாபமும் சேர்ந்தே உள்ளது. பத்தியமும், வைத்தியமும் பாதிக்குத்தான் பலனளிக்கும், பரிகாரம் ஒன்றே பூரணமாய் போக்கும்" என்றார். எதைத் தின்றால் பித்தம் தீரும் என்ற நிலையில் இருந்த மன்னன் "எதுவானாலும் சொல்லுங்கள் சுவாமி! செய்கின்றோம்" என்றான். 

"உண்டான நோய்க்கு ஒரு மண்டலம் மருந்து, தினம் கீரிமலை சென்று நன்னீர் ஊற்றில் நீராடி, ஈஸ்வரரை வணங்கி பின் பத்தியம் தவறாமல் மருந்துண்டுவர குன்மமும் நீங்கும், கூன் நிமிர்ந்து குதிரையும் மறையும்" என்றார். சோழ வம்சத்தில் வந்தவனுக்கு கடல் கடந்து செல்வது கடினமா என்ன? இளவரசியும், தோழிகளும் புறப்பட தயாரானார்கள். அழைத்துச் செல்ல விசுவாசப் படைகளும் கடல் கடக்க நாவாய்களும் தயாராயின. இதுவரை வாரிசு இல்லாமல் போய்விடும் என்று கவலைப்பட்டவனுக்கு, அந்த கவலைபோய் நம்பிக்கை பிறந்துவிட்டது. எத்தனையோ வைத்தியம், எத்தனையோ பரிகாரம் என்று செய்தபோது இல்லாத நம்பிக்கை இப்போது தோன்றியது. சித்தரின் தீர்க்கமான வார்த்தைகளை மன்னனும் முழுமையாக நம்பினான்.

நம்பிக்கை கடந்து அவனுக்கு ஆசையும் பிறந்துவிட்டது. இப்போது மறுபடியும் சோழப் பேரரசை அமைக்க ஆசைப்பட்டான். மனிதனின் ஆசைக்குத்தான் அளவு இல்லையே. "சுவாமி கீரிமலை சென்று நகுலேஸ்வரரை வணங்கி நன்னீர் ஊற்றில் நீராடினால் எம் சோழ வம்சத்தின் ஜென்ம சாபம் தீர்ந்துவிடுமா? நாம் மீண்டும் பேரரசு அமைப்போமா?" என்று ஆர்வமாக கேட்டான் திசையுக்கிர சோழன். புன்னகைத்தார் சித்தர். "ஈசனின் பாதத்தை இறுகப் பற்று, குமரியைத்தேடி குமாரன் வருவான், குமரியைப் பற்றுமிடம் குமரனுக்கு கோயில் அமை, குன்றிருக்கும் குமரன் குலங்காப்பான் " என்று சொல்லிவிட்டு புறப்பட்டு போய்விட்டார். மன்னனுக்கு முழுவதும் புரியவில்லை, ஆனாலும் உரிய நேரத்தில் எல்லாம் புரியும் என்ற நம்பிக்கையில் தலையசைத்தான்.

யாழ்ப்பாணம் செல்லும் பணிகள் பரபரப்பாக நடந்தது. அது ஒரு காலத்தில் சோழநாட்டின் அங்கம் என்றாலும்; கடல்கடந்த பகுதி. சித்தரின் குடிலில் இருந்து மருந்துப் பொருட்கள் வந்தன. தோழிகள், பணியாட்கள் விசுவாச படைகள் சூழ இளவரசி புறப்பட்டாள். கோடியாக்ரையில் புறப்பட்ட நாவாய்கள் கீரிமலைக்கரையில் கரையொதுங்கின. 

கீரிமலையை அண்மித்த ஒரு பாதுகாப்பான பகுதியில் குடிலமைத்தார்கள். இளவரசி, தோழிகள், பணியாட்கள் என்று அனைவரும் படைகளின் காவலில் தங்கினார்கள். இங்கிருந்துதான் இளவரசி தினமும் ஆலயம் சென்று வந்தாள். அதிகாலையில் எழுந்து கீரிமலை நன்னீர் தீர்த்தத்தில் நீராடி நகுலேஸ்வரரை, நகுலாம்பிகையை வணங்கி பத்தியம் தவறாமல் மருந்துண்டு வந்தாள். ஓரிரு நாட்களிலேயே மாற்றம் தெரிந்தது. சிறிது நாட்களிலேயே அவள் பிணி முழுவதுமாக நீங்கியது. கூன் மறைந்தது. குதிரை முகம் நீங்கி பேரெழில் பெற்றாள்.

சோழ இளவரசி குதிரை முகம் மறைந்து பேரெழில் பெற்ற செய்தி உறையூருக்கு அனுப்பப்பட்டது. மன்னனும் மக்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தார்கள். செய்தி கேட்ட மன்னன், நகுலேஸ்வரனின் பாதம் பணிய ஈழம் நோக்கிப் புறப்பட்டான். 

சோழ மன்னன் புறப்பட்ட அதே நேரத்தில் கதிரமலை இளவரசன் காங்கேயனும் நகுலேஸ்வரரை வணங்குவதற்காக கீரிமலை நோக்கி வந்தான். கீரிமலை செல்லும் வழியில் பேரழகியாக தோன்றிய மாருதப்புரவீகவல்லியை கண்டான். கண்டதும் இருவரும் காதல் கொண்டார்கள். இருவரும் ஒருவர் மனதை ஒருவர் இறுகப் பற்றினார்கள். காதல் மயக்கத்தில் இருவரும் களித்திருந்த அந்நேரம், திசையுக்கிர சோழனும் வந்து சேர்ந்தான். இருவர் காதலுக்கும் சம்மதம் தெரிவித்தான். ஈஸ்வரன் பாதத்தை பணிந்து பற்றினான்; ஈசனின் முன்னிலையில் இருவருக்கும் கோலாகலமாக மணமுடித்து வைத்தான். 

சித்தர் சொன்னது திசையுக்கிர சோழனின் நினைவில் வந்தது. "ஈசனின் பாதத்தை இறுகப் பற்று. குமரியைத் தேடி குமாரன் வருவான். குமரிமைப் பற்றுமிடம் குமரனுக்கு கோயில் அமை. குன்றிருக்கும் குமரன் குலங்காப்பான்" வசனங்கள் மறுபடி ஒலித்தது.அந்த வார்த்தைகளின் அர்த்தம் அப்போதுதான் முழுமையாக புரிந்தது. சோழ இளவரசியை கதிரமலை இளவரசன் காங்கேயன் மனம்பற்றிய இடத்தில் சிறிய முருகன் ஆலயம் ஒன்று இருந்தது. பல்லாயிரம் வருடங்கள் பழைமையான கோயில் அது. அந்த ஆலயத்தையே பெரிதாக கட்டுவதற்கு முடிவெடுத்தான் சோழன். கதிரமலை இளவரசன் இப்போது சோழ இளவரசன் ஆனான். காங்கேயனும்,சோழ இளவரசியும் அங்கேயே தங்கி ஆலயம் அமைக்கும் பணிகளை கவனிக்க சோழ மன்னன் உறையூருக்கு திரும்பினான். கோயிலுக்கு தேவையான சிற்பங்கள், விக்கிரகங்கள், ஆபரணங்கள் அனைத்தையும் அங்கிருந்தே ஈழத்திற்கு அனுப்பினான். அழகிய ஆலயம் ஆகம விதிப்படி அமைக்கப்பட்டது. 

அவ்வாறு சோழன் அனுப்பிய பெரிய கலங்கள் கீரிமலை கடலில் கரையொதுங்க ஒதுங்கமுடியாமல் நின்றது. அதனால் கீரிமலை அருகில் உள்ள சற்று ஆழமான கடற்பகுதியில் பனை மரங்கள், சுண்ணாம்புக் கற்கள் என்பவற்றை கொண்டு இறங்கு துறை ஒன்றை அமைத்தான் காங்கேயன். காங்கேயன் அமைத்த துறை என்பதால் பின்னாளில் அது காங்கேசன்துறை என்றே பெயர் பெற்றது. 

கதிரமலை மன்னனும், சோழ இளவரசியும் மனம்பற்றிய இடம் அவர்களின் காதலின் அடையாளமாகவும், சோழ வம்சத்தின் ஜென்ம சாபத்தை நீக்கி பேரரசை நிறுவும் பரிகார தலமாகவும் அமைந்தது. ஆலயம் அமைக்க ஆரம்பித்த சிலகாலத்திற்குள் அவர்கள் காதலின் அடையாளமாக ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. மனோகரன் என்று அந்த குழந்தைக்கு பெயரிட்டார்கள். ஆலய பணிகள் பூர்த்தி அடைந்து கும்ப அபிஷேகமும் நடந்தது(பொ.ஆ 789, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்). பின்னர் இருவரும் திசையுக்கிர சோழனுடன் உறையூருக்கு திரும்பினார்கள். உறையூர் திரும்பிய சிறிது காலத்தில் திசையுக்கிரன் இறந்துவிட்டான். சோழ வம்சத்தில் வராத காங்கேயன் அரியணையில் அமரமுடியாது. அதனால் ஆட்சிப் பொறுப்பு மனோகரன் வசமானது(பொ.ஆ 790). பால்ய வயதிலேயே பட்டது அரசனானான். ஸ்ரீ காந்த ஸ்ரீ மனோகர சோழன் என்னும் பட்டத்து பெயரில் பலகாலம் ஆண்டான்(பொ.ஆ790-848) பாலகன் வளர்ந்து பதின்ம வயதை எட்டினான். காங்கேயனும் மாருதப்புரவீகவல்லியும் அவனுக்கு மணம்முடித்து வைத்தார்கள். சோழப் பேரரசை நிறுவப்போகும் வாரிசை அவன் மனைவிதான் சுமந்தாள். விஜயாலய சோழன் பிறந்தான். சோழப் பேரரசை நிறுவும் முயற்சி அவனிடம் இருந்து ஆரம்பமானது.

விஜயாலயன் காலத்தில் தஞ்சை நெஞ்சை நிமிர்த்தியது. மீண்டும் புலிக்கொடி வானில் பறந்தது. வானத்தில் தோன்றும் இருள் நிரந்தரமாக நிற்பதில்லை, அது என்றேனும் விலகி ஒளி கொடுக்கும் என்பதை உலகுக்கு உணர்த்தினான். 

சோழ வம்சத்தின் இன்னோர் அத்தியாயம் ஆரம்பமானது...

வரலாற்று குறிப்புகள்:

கதிரமலை என்பது இலங்கையின் யாழ்ப்பாணத்தில் சுண்ணாகம் பகுதியை சுற்றியுள்ள பகுதியாகும். கந்தரோடை என்று இன்று அழைக்கப்படுகிறது.

கீரிமலை என்பது இலங்கையின் யாழ்ப்பாண வடகோடியில் உள்ளது. பஞ்ச ஈச்சரங்களில் ஒன்று. 

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் என்று அழைக்கப்படும் ஆலயமே மாருதப்புரவீகவல்லி குன்மமும் குதிரை முகமும் நீங்கிய ஆலயம். கீரிமலை ஆலயத்திற்கு 3.5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.


கீரிமலை நகுலேஸ்வர தலபுராணம்

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் தலபுராணம்

யாழ்ப்பாண வைபவமாலை

தட்சிண கைலாச புராணம்

நகுலமலைச்சதகம்

சோழர் வரலாறு

சித்தர்களின் வாழ்க்கை குறிப்புகள் என்பவற்றை தழுவி எழுதப்பட்டது


Tuesday, 19 April 2022

ஆவிகள் மட்டும் அலைவதில்லை- (ஆவியான ஞாயிறு) பைபிள் உருவான கதை

ஓநாய்களின் ஊளையும், பேய்க்குருவிகளின் கூச்சலும் இரவின் அமைதியை இல்லாமல் செய்தது. சூனியக்காரர்களின் இராக்கூச்சல்கள் அச்சத்தை கூட்டியது. அந்த பைப்லஸ் மலைப்பகுதி முழுவதும் என்றுமில்லாதவாறு சப்தங்களால் அதிர்ந்தது. இரவு முழுவதும் எழுந்த கூச்சல்கள் மலைகளைத் தாண்டி மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கும் திகிலைக் கூட்டியது. 

பைப்லஸ் மலைப்பகுதியில் மக்கள் யாரும் வசிக்காததால் சூனியக்காரர்கள், தீய ஆவிகளை வணங்குபவர்களின் உறைவிடமாகவே அது மாறியிருந்தது. துர் மரணம் அடைந்தவர்களின் ஆவிகளை கொண்டு மக்களை ஆட்சிசெய்வதும், இவ்வுலகை ஆவிகளை வழிபடும் உலகமாக மாற்றுவதுமே அந்த சூனியக்காரர்களின் நோக்கம். ஆனால் இவ்வாறான சூனியக்காரர்கள் மக்கள் வசிக்கும் ஊர்களுக்குள் செல்லமுடியாது. அந்த பகுதிகளை ஆட்சிசெய்த ரோமானிய பாகன்களும், அருகில் இருந்த யூத, கானானிய சிற்றரசுகளும் இந்த சூனியக்காரர்களை அடியோடு வெறுத்தார்கள். ஊர்களுக்குள் சூனியக்காரர்கள் நுழைவதையே தடை செய்தார்கள். அப்படி விரட்டப்பட்ட சூனியக்காரர்கள்தான் பைப்லஸ் மலைகளிலும், ஏனைய மக்கள் வசிக்காத காடுகளிலும் அடைக்கலம் புகுந்தார்கள். ஆனாலும் மாறு வேடங்களைத் தரித்து அவ்வப்போது ஊர்களுக்குள் சென்றார்கள். 

இறைவழிபாட்டாளர்களை, தெய்வ நம்பிக்கைகளை அழித்து; மக்களை இறந்தவர்களின் தீய ஆவிகளை வழிபட வைப்பதும், இவ்வுலகை ஆவிகளுக்குரிய உலகமாக மாற்றுவதுமே இந்த சூனியக்காரர்களின் இலட்சியம். அவ்வாறு ஆவிக்குரிய உலகமாக மாற்றும் முயற்சியில் பலவருடங்கள் பயிற்சி பெற்று மாறுவேடத்தில் சென்ற ஒருவனை; ரோமானியர்கள் பிடித்து; சிலுவையில் அறைந்து கொன்றுவிட்டார்கள். அவ்வாறு சிலுவைத் தண்டனை பெற்று இறந்தவனின் உடலை இரவோடு இரவாக பைப்லஸ் மலைப்பகுதிக்கு கொண்டு வந்துவிட்டார்கள். அப்படி கொண்டுவந்த உடலைச் சுற்றி முட்டிபோட்டு நின்று கூச்சலிட்டு அதன் ஆவியை அழைத்தார்கள். சூனியக்காரர்கள் ஆவியை அழைத்த அவலக் கூச்சல் தான் மலைகளை கடந்து; மக்கள் வாழும் பகுதிகளையும் திகில் கொள்ள செய்திருந்தது.

அந்த சூனியக்காரர்கள் பெண்கள் உடுத்தும் கவுண் போன்ற ஆடைகளை அணிந்திருந்தார்கள். தங்கள் தலைமுடியை தெரியாதவாறு மறைத்திருந்தார்கள். முட்டி போட்டு இருந்து இரண்டு கைகளையும் அகலத்தூக்கி புரியாத வார்த்தைகளால் ஆவியை அழைத்தார்கள். இடுப்பில் பட்டி ஒன்றை கட்டியிருந்தார்கள். முட்டி போட்டிருந்து வணங்குவது ஆவி வழிபாட்டின் முக்கிய அம்சம். தலைமுடி தெரிந்தால் துர் ஆவிகள் உள்ளிறங்காது ஓடிவிடும் என்பதால்; ஆவிகளை வழிபடுபவர்கள் தலைமுடிகள் தெரியாதவாறு மறைத்தே இருப்பார்கள். தீய ஆவிகள் தம் மரணத்திற்கு காரணமான பொருட்களை தேடி வரும் என்பதால் சிலுவை ஒன்றை செய்துவைத்து ஆவியினை அழைத்தார்கள். விடிய விடிய கூச்சல் போட்டு; ஆவிகளை அழைத்த சூனியக்காரர்கள்; கொண்டு வந்த பிணத்தை சுற்றியிருந்து பிய்த்துத் தின்றார்கள். அதில் அழுகி ஒழுகும் ஊனத்தை இரத்தம் என்று சொல்லி குடித்தார்கள். அவர்களின் செயல்கள் அருவப்பானதாகவும், திகில் கொள்ளும் படியானதாகவும் இருந்தது. அவர்கள் எத்தனையோ அவலச்சாவு அடைந்தவர்களின் ஆவிகளை தமது நோக்கத்தை அடைவதற்காக பயன்படுத்த முனைந்திருக்கிறார்கள். ஆனால், அந்த ஆவிகள் உயிரோடிருந்தபோது வணங்கிய குல தெய்வங்கள் இவர்களின் முயற்சிகளைத் தடுத்துவிடும். அதனால் சூனியக்காரர்களுக்கு இந்த உடலும் இதனுடைய ஆவியும் மிகவும் முக்கியமானது. இவன் பன்னிரண்டு வயது முதல் இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஆவிக்குரிய உலகத்தை நிறுவுவதற்காக இவர்களுடன் ஒன்றாக பயணித்தவன். போதைப் பொருள் பழக்கம், விபச்சாரிகள் தொடர்பு, திருடர்கள் சகவாசம் என்று இவனைவிட தீய ஆவியை காண்பது அரிது. இவன் ஆவிகளைத் தவிர்த்து குலதெய்வம், இறைவன் என்று ஏதொன்றையும் வணங்கியவன் இல்லை. இவனது ஆவியைப் பயன்படுத்தி ஆவிக்குரிய உலகை உருவாக்குவதை எவராலும் தடுக்க முடியாது என்று அந்த சூனியக்காரர்கள் நம்பினார்கள்.

அந்த அடர்ந்த மலைக்காட்டில்; பகல் எது இரவு எது என்று தெரியாமல் பொழுதுகள் நீண்டது. அவலச்சாவு அடைந்தவர்களின் பிணத்தை உண்டு அதன் இரத்தத்தை குடிப்பவர்களில் ஒருவனுக்கு அதன் ஆவி வசப்படும் என்பது ஆவிகளை வழிபடுபவர்கள் நம்பிக்கை. பிணத்தை உண்டு இரத்தத்தின் ஊனத்தை குடித்து 'அல்லேலூயா' என்று கூச்சலிட்டு ஆவியை அழைத்தார்கள். அந்த சூனியக்காரர்களின் நோக்கம் வீண்போகவில்லை. அவர்களில் ஒருவனுக்கு அந்த சிலுவையில் செத்தவனின் ஆவி வசப்பட்டது. இந்த அவலத்தில் செத்தவனின் தீய ஆவியை வைத்தே மக்களை நம்பவைத்து விடுவது என்று முடிவு செய்தார்கள். இறைவழிபாட்டைவிட ஆவி வழிபாடே சிறந்தது என்றும் ஆவிகள் வழிபாடு வல்லமை மிக்கது என்றும் மக்களை நம்ப வைக்க முடிவு செய்தார்கள்.

முதலில் இறந்தவனின் நண்பர்களை நம்பவைக்க முடிவு செய்தார்கள். பொதுவாக மரணம் அடைந்தவர்களது ஆவி தான் வசித்த இடங்களையும், பழகிய நபர்களையும் சுற்றிச் சுற்றியே வரும். அவற்றால் வெளிப்பட முடியாது. ஆனால் துர்மரணம் அடைந்தவர்களது ஆவிகளை மற்றவர் கண்களுக்கு தோன்றச்செய்ய முடியும். அதுகூட ஒரு மண்டலம் வரையிலேயே செய்விக்க முடியும். அதன் பின்னர் பொதுவாக அந்த ஆவிகள் தன்நிலையை இழந்து சிதைத்துவிடும். இந்த சூனியக்காரர்கள் சிலுவையில் இறந்தவனின் ஆவியை அவனது நண்பர்கள் இருக்குமிடங்களில் தோன்றசசெய்தார்கள். அவர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். சிலுவையில் இறந்தவனின் நண்பர்கள் பலர் ஆவிகளை வழிபடும் வழக்கம் உள்ளவர்களாதலால் அவர்களிடம் இறந்தவனின் ஆவியை தோன்றச் செய்வது இலகுவாக இருந்தது. இறந்த ஆவி சிதைந்து போகும் ஒரு மண்டலம் வரையில் சிலருக்கு தோன்றவும், சிலருக்கு இறந்தவனின் குரலை ஒலிக்கவும் செய்ய முடிந்தது. ஆனால் முழுமையாக அவனது உருவை காணவோ, குரலை கேட்கவோ எவராலும் முடியவில்லை.

மாறுவேடம் தரித்த சூனியக்காரர்கள் ஊருக்குள் புகுந்து மக்களிடையே பேசினார்கள். இறந்தவனின் ஆவியை அரைகுறையாக கண்டவர்களை, குரலை அசுமாத்தமாக கேட்டவர்களை துணையாக வைத்து இறந்தவன் உயிர்த்து வந்ததாக நம்ப வைத்தார்கள். புத்தி குறைந்தவர்கள் பலர் அதையும் நம்பினார்கள். ஆனால் மக்கள் யாரும் இறந்தவனை ஒருபோதும் காணவில்லை. ஆவிகளை வழிபட்டால் இறந்தபின்பும் உயிர்க்க முடியும் என்று ஆசை காட்டி மக்களை ஆவிகளை வழிபட ஊக்குவித்தார்கள். 

அப்போதுதான் சிலுவையில் இறந்தவனின் ஆவியை வைத்தே; ஆவிக்குரிய உலகமாக மாற்றும் அவர்களின் திட்டத்தில்; எதிர்பாராத தடைகளாக குலதெய்வங்கள் குறுக்கே வந்தன. ஆசை காட்டியதால் ஆவி வழிபாட்டிற்கு மாறியவர்களுக்கு, அதுவரை அவர்கள் வழிபட்ட குலதெய்வங்கள் வந்து உண்மையை உணர்த்தி நின்றன. தாம் புதிதாக வணங்குவது துர் ஆவிகள் என்ற உண்மையை உணர்ந்ததும் பலர் ஆவி வழிபாட்டில் இருந்து விலகிச் சென்றுவிட்டார்கள். மக்களை ஆவி வழிபாட்டிற்கு கஷ்டப்பட்டு அழைத்து வருவதும், அவர்கள் உண்மை உணர்ந்து தப்பித்து செல்வதும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

சூனியக்காரர்களால் உலகம் முழுவதையும் ஆவிக்குரியதாக மாற்ற முடியவில்லை. ஆனாலும் பல நாடுகளில் பலரை மாற்றிவிட்டார்கள். அதுபோல் அவர்கள் தங்களின் வேடங்களையும் மாற்றிவிட்டார்கள். ஒட்டுமொத்த உலகத்தையும் ஆவி வழிபாட்டு உலகமாக மாற்ற முடியவில்லை என்பதுதான் சூனியக்காரர்களின் ஒரே கவலை. அதையும் மாற்றிவிடத் துடித்தார்கள். ஒருநாள் சூனியக்காரர்கள் எல்லோரும் ஒன்றாக கூடினார்கள், ஆவி வழிபாட்டை பரப்புவதற்கு தடையாக இருப்பது மக்களின் அறிவும், அவர்கள் வழிபடும் குலதெய்வங்களும் என்று ஒருமனதாக ஒத்துக் கொண்டார்கள். மக்களின் அறிவை மழுங்கச் செய்வதும், குலதெய்வ வழிபாட்டை இல்லாமல் செய்வதும் ஆவிக்குரிய உலகை நிறுவுவதற்கு அவசியம் என்றார்கள். மக்களை அறிவற்றவர்கள் ஆக்குவதற்கும், குலதெய்வ வழிபாட்டை இல்லாமல் செய்வதற்குமான கோட்பாடுகளை பைப்லஸ் மலையில் இருந்து நூலாக உருவாக்கினார்கள். தீய ஆன்மாக்கள் தான் ஆவியாக அலையும் என்பதை மறைத்து தூய ஆவி என்று இல்லாத ஒன்றை நம்ப வைக்கும் கற்பிதங்களை உருவாக்கினார்கள். பைப்லஸ் மலையில் இருந்து உருவானதால் அந்த நூல் பைபிள் என்றே பின்னாளில் பெயர் பெற்றது.

சூனியக்காரர்கள் அனைவரும் தாம் தரித்த புதிய வேடங்களில் எல்லா நாடுகளுக்கும் செல்வது என்றும்; யுத்தம், பசி, பட்டினி என்று உண்டாக்கி; சிந்திக்க முடியாத அறிவற்ற மக்களாக மாற்றுவது என்று சபதம் செய்தார்கள். ஆவிகளை மக்கள் ஏற்க வேண்டும் என்றால் குலதெய்வங்களும், காவல் தெய்வங்களும் குறுக்கே வரக்கூடாது என்றும் அதனால் அவற்றை சாத்தான்கள் என்றும், தீயவை என்றும் கூறி மக்களை நம்பச் செய்வது என்றும் முடிவு செய்தார்கள். 

அந்த சூனியக்காரர்களின் சூழ்ச்சிப் பயணம் நாடு நாடுகளான தொடர்ந்தது. குலதெய்வங்கள் கூடாது என்றார்கள். அவை சாத்தானின் வடிவங்கள் என்றார்கள். அவர்களின் பேச்சை நம்பி குலதெய்வங்களை கைவிட்டவர்கள் தீய ஆவிகளை வழிபடும் அற்பர்களாக மாற்றப்பட்டார்கள். அறிவற்ற மந்தைகளாக, தன் இனத்தின் பெருமை மறந்த தற்குறிகளாக ஆனார்கள். ஆனாலும் அவர்களால் உலகம் முழுவதையும் ஆவிக்குரியதாக மாற்ற முடியவில்லை. 

இறைவழிபாட்டை இறுகப் பிடித்தவர்களும், குலதெய்வங்களை குடும்பங்களில் போற்றியவர்களும் இன்னமும் அறிவு பொருந்திய பெருமைமிகு மக்களாகத்தான் வாழ்கிறார்கள். 

ஆனாலும் சூனியக்காரர்கள் தம் முயற்சியை கைவிடுவதாக இல்லை. ஒரு கையில் சிலுவை, மறு கையில் ஆவிக்குரிய பைபிள் நூல் என்று அலைந்து கொண்டேதான் இருக்கிறார்கள். ஆவிகள் மட்டுமல்ல, ஆவிகளை வழிபடுபவர்களும் அலைந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.



புலிகள் இயக்கத்தின் அழிவுக்கு காரணம் என்ன?

இயக்கத்தில் கத்தோலிக்க ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது பிரபாகரனின் தாழ்வு மனப்பான்மையா? புலிகள் இயக்கத்தின் வெள்ளிக்கிழமைகளில் மாட்டிறைச்சி உணவு,...