Friday, 4 August 2023

ஈரான் ஒரு இந்து நாடு

இன்று முழுமையான இஸ்லாமிய நாடாக அறியப்படும் ஈரான் 1972 வரையில் 65 சதவீதம் இந்துக்கள் வாழ்ந்த நாடு என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

அதுபோலவே ஐரோப்பிய நாடுகள் ஏதோ இரண்டாயிரம் ஆண்டுகளாக கிறித்தவ மதத்தைப் பின்பற்றுவதாக பலரும் நம்பவைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் ஐரோப்பிய நாடுகளும் 1685 ஆம் ஆண்டு வரை இந்துக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த நாடுகள்தான்.

பிறகு எப்படி திடீரென இந்துக்கள் இல்லாமல் போனார்கள் என்று யாருக்காவது தோன்றுகிறாதா? ஆம், அவர்கள் அன்பாலும் அமைதியாலும் தமது மதங்களைப் பரப்பினார்கள். கிறிஸ்தவர்கள் மதம் பரப்ப செலுத்திய அன்பில் சுமார் 90 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மட்டுமே ஐரோப்பாவில் கொல்லப்பட்டுள்ளார்கள். அண்மைக் காலம் வரை வதிவிட பாடசாலைகள் என்பவை எஞ்சியிருக்கும் பூர்வகுடி இந்துக்களை மதம்மாற்றுவதற்குத்தான் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

ஐரோப்பாவின் ஒவ்வொரு நாட்டு பெயருடனும் 

#inquisition என்று போட்டு தேடிப்பாருங்கள். இந்த அன்பு மார்க்கம் அன்பு செலுத்தி மக்களை கொத்துக் கொத்தாக கொன்ற வழிமுறைகள் கொட்டிக் கிடக்கிறது.

#inquisition



நல்லூர் கோயிலும் யாப்பாணிகளும்

நல்லூர் கந்தசுவாமி கோயில் யாழ்ப்பாணத்தின் அடையாளமாக, இந்துக்களின் பெரும் ஆதரவு பெற்ற ஒரு தலமாக, சிறந்த நிர்வாகம் கொண்ட ஒரு ஆலயமாக என்று பலவாறு மிகைப்படுத்தல்கள் செய்யப்படும் ஒரு இடமாகும்.

ஆனால் உண்மையில் அவ்வாறு எதுவும் கிடையாது. அது யாழ்பாணத்தில் உள்ள ஒரு ஆலயம் அவ்வளவுதான்.

யாழ்பாணத்தில் நிலவும் சாதிய பிரச்சினை, பிரதேச வாத பிரச்சினை என்பவற்றால் நல்லூர் இந்த நிலையை எட்டியது என்றே சொல்ல வேண்டும். அதை வேண்டுமானால் விரிவாகவும் பார்க்கலாம்.

யாழ்பாணத்தில் வடமராட்சியார், தென்மராட்சியார், யாழ்ப்பாணத்தார், தீவார் என்ற பிரதேச ரீதியான பாகுபாடுகள் வலிமையாக இருந்தது. தீவாரை யாழ்பாணத்தவர் என்று ஏற்பதில்லை என்ற நிலையும் இருந்தது. அது தனிக்கதை. 

அதுபோலவே வெள்ளாளர், கரையார் என இரு முனைப்புப் பெற்ற சமுதாயங்களும் யாழ்பாணத்தில் இருந்தது. இது இரண்டும் முரண்நிலை சாதிகளோ, எதிர் நிலை சாதிகளோ கிடையாது. இவை இரண்டும் ஒரே பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் சாதிகளும் கிடையாது. வெள்ளாளர் என்போர் விவசாய நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்தும் சாதியாகவும், கரையார் என்பவர்கள் கரையோர பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் சாதியாகவுமே இருந்தார்கள். இரண்டு சாதிகளிலும் அனைவரும் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருக்கவில்லை. அந்த சாதிகளில் உள்ள ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவ்வாறு ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் ஏனையவர்கள் அவர்களின் ஆதிக்கத்தை ஏற்றவர்கள் என்பதாகவும் இருந்தது. 

அந்த ஆதிக்கத்தை செலுத்தக்கூடிய குடும்பங்கள் ஆச்சாரம், மேட்டிமைத்தனம், சமூக ஆதிக்கம் என்பவற்றை கொண்டவர்களாகவும் அதனைக் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்பினைக் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். இங்கே வேளாள தலைக் குடும்பங்கள் கைக்கொண்ட ஆதிக்கம் ஆச்சாரம் என்பவற்றுக்கு சற்றும் குறைவில்லாத சமூக தீண்டாமையை கரையார தலைக் குடும்பங்களும் கைக்கொண்டார்கள். பின்னர் கல்வி, பொருளாதார மேம்பாடு பெற்ற கராயார குடும்பங்கள், தலைக்குடும்ப வழிமுறைகளை தாமும் பின்பற்றி தம்மை மைலோங்கி கரையார்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.

அன்றைய காலத்தில் நல்லூர் முருகன் கோயிலை விட மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலும், செல்வச்சந்நிதி முருகன் கோயிலும் பிரசித்தி பெற்ற சிறப்புப் பெற்ற தலமாக இருந்தது. இந்த மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் வேளாள ஆதிக்க கோயிலாகவும், செல்வச்சந்நிதி முருகன் கோயில் சாதாரண மீன்பிடி கரையார்களின் கோயிலாகவும் இருந்தது. வழமையாக எல்லா ஊர்களிலும் உள்ளது போலவே என் கோயிலா? உன் கோயிலா? என்ற போட்டி இந்த இரண்டு கோயில்களுக்கு இடையேயும் இருந்து வந்துள்ளது. அந்த காலப்பகுதியில் இரண்டு கோயில்களும் மக்கள் அதிகம் விரும்பிச் செல்லும் இடமாகவும் இருந்துள்ளது.

ஆனால் மாவட்டபுரம் கந்தசாமி ஆலய நிர்வாகத்தின் சாதியவாத நடவடிக்கைகள்,  கிறித்தவ நிகழ்ச்சி நிரலில் சிக்குண்டமை, சமூக பாகுபாடு என்பவற்றால் மக்கள் ஆலயத்திற்கு வருவது குறைவடைந்து சென்றது. அந்த காலப்பகுதியிலேயே மக்கள் நல்லூரை நோக்கி அதிகளவில் செல்ல ஆரம்பித்தனர். தென்மராட்சி பகுதியில் நிலவிய சாதிய வெறியும் செல்வச்சந்நிதி நோக்கி செல்லாமல் நல்லூர் நோக்கி மக்களைத் திருப்பியது. வடமராட்சியில் உருவான மேலோங்கி கரையார்களும், வேளாளர்களும் கூட நல்லூருக்கு வருவதை பெருமைக்குரிய ஒன்றாக மாற்றி இருந்தார்கள். பின் யுத்ததத்தால் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் பூட்டப்பட்டு மக்கள் வழிபாடு செய்யமுடியாத சூழல் உருவான போது யாழ்ப்பாண வேளாளர்களும் இந்த நல்லூர் என்பதை தமது முதன்மையான தலமாக அடையாளப்படுத்திக் கொண்டார்கள். 

தமக்குப் போட்டிச் சமூகமாக இல்லாத கைக்கோளர் வசம் நல்லூர் இருப்பது வேளாளர்கள் இந்த கோயிலை ஆதரிப்பதற்கு காரணமாக இருந்தாலும், தமக்கு கீழான கைக்கோளர் ஆதிக்கத்தில் அந்த ஆலயம் இருப்பது அவர்களுக்கு உறுத்தலாகவுமே இருந்து வந்துள்ளது.  

பலரும் நினைப்பது போல யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி கோயில் வேளாள முதலியார்களால் நிர்வாகம் செய்யப்படவில்லை. செங்குந்த முதலிகள் என்று சொல்லப்படும் ஒரு கைக்கோள பிரிவினராலேயே அது நிர்வகிக்க படுகிறது. மாபாண முதலிகள் என்பவர்கள் கைக்கோள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான்.

யாழ் இசைக்கும் ஒரு பாணனுக்கு பரிசாக வழங்கப்பட்ட பகுதியே யாழ்பாணம் என்று ஒரு கர்ண பரம்பரை கதை உள்ளது. அந்த பாணர்களின் பெரிய குடும்பம் தான் மாபாணர் குடும்பம் என்று சிலர் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் இந்த முதலி பட்டமும், நல்லூர் ஆலயமும் காலனித்துவ காலத்திலேயே இந்த கைக்கோளர் கைகளுக்கு சென்றுள்ளது.

அப்படியானால் காலனித்துவ காலத்திற்கு முன்பு இந்த நல்லூர் ஆலயம் எங்கே இருந்து? யாரிடம் இருந்தது என்பது ஆராய்ச்சிக்கு உரியது. 

ஆனால் ஆண்ட சமூகங்கள், சுய அடையாளம் உள்ள சமூகங்கள் அன்னிய ஆதிக்கத்தை ஏற்று அவர்களுக்கு பணிந்து ஒருபோதும் சேவகம் செய்ய மாட்டார்கள். செய்யவும் முடியாது. ஆனால் யார் வந்தாலும் யார் ஆண்டாலும் அவர்களுக்கு சேவகம் செய்ய ஒரு கூட்டம் தயாராகவே இருக்கும். காலனித்துவ காலத்தில் ஆதிக்கத்தில் இருந்த சமூகங்கள் அனைத்தும் அவ்வாறான சேவகம் செய்யும் சமூகங்களே அன்றி அவர்கள் உயர்ந்த சமூகங்கள் கிடையாது. ஆனால் காலனித்துவ கால அடிமை சேவகர்களுக்கு உயர் பட்டங்களையும் அதிகாரங்களையும் அள்ளி வழங்கினார்கள் வெள்ளையர்கள். அவர்களிடமே ஆலயங்கள் பொது நிறுவனங்கள் என்பவற்றை பரிபாலிக்கும் உரிமையையும் வழங்கினார்கள்.

தமக்கு அதிகாரத்தையும் பொறுப்பையும் வழங்கிய எஜமானர்கள் வம்சம் வருகையில் அவர்களை அவ்வாறே வரவேற்று உபசரிப்பது ஒன்றே ஒரு சிறந்த அடிமை சேவகனுக்கான பண்பாக இருக்க முடியும். அதைத்தான் நல்லூர் நிர்வாகம் செய்துள்ளது. அவ்வாறுதான் அவர்கள் செய்வார்கள்.



மலையகமக்களின் 200வருட போராட்ட வாழ்க்கை

இலங்கையின் மத்தியில் அமைந்துள்ள, மலைகளைக் கொண்ட பகுதி மலையகம் என்று அழைக்கப்படுகிறது. இது பண்டைய கண்டி ராஜ்ஜியத்தின் தலைநகர் மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளாகும். 

காலனித்துவ காலத்தில் இந்த பகுதிகளில் பெருந்தோட்ட பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்காக இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட தோட்டத் தொழிலாளர்களே மலையக மக்கள் எனப்படுகின்றனர்.

இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், இராமநாதபுரம், தேனி, மதுரை, கரூர், நாமக்கல் போன்ற பகுதிகளில் இருந்து அதிகளவிலான தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். பெருமளவில் பள்ளர், பறையர், கள்ளர், மறவர், முத்தரையர் போன்ற சாதிகளும் நாயுடு, கவுண்டர், நாயர், அகமுடையார் என்று பல்வேறு சாதிகளும் சிறிய அளவிலும் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

அன்றைய நாளில் அது ஒரு கடினமான பயணம். தனுஷ்கோடியில் இருந்து ஆயிரம் பேர் புறப்பட்டால் மலையக பகுதிகளை சென்றடையும் போது சுமார் 300 பேர் வரையிலேயே எஞ்சியிருப்பார்கள் என்றால் அந்த பயணத்தின் கொடூரத்தை சிந்தித்து பாருங்கள். கடற்பயணத்தில் படகு கவிழ்ந்து மரணம், காட்டு வழிப் பயணத்தில் விலங்குகள் பாம்புகள் என்பவற்றால் மரணம் என்று அது உயிரைப் பணயம் வைத்த ஒரு பயணம். அவ்வாறு கடினமான பயணத்தின் பின்னும் அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்ததா என்றால் கிடையாது. மலைக்காடுகளை அழித்து பாதைகளோ பாலங்களோ இல்லாத இடத்தில் பெரிய பெரிய தோட்டங்களை உருவாக்கும் கடினமான பணிகளை மேற்கொண்டார்கள். காட்டு விலங்குகள், பாம்புகள், காலனித்துவ எஜமானர்கள் என்று அவர்களுக்கு பல்வேறு வகைகளில் மரணம் காத்திருந்தது. 

அவர்கள் வாழும் உரிமை, வழிபாட்டு உரிமை என்று எந்த ஒரு உரிமையும் இல்லாதவர்கள் என்ற நிலையிலேயே இருந்தார்கள். அவர்கள் தமது சொந்த ஊர்களில் இருந்து புறப்படும் போது கொண்டுவந்த பிடிமண்ணையும் குலதெய்வத்தையும் கூட வழிபட முடியாது என்று அவர்களின் கிறித்தவ எஜமானர்கள் தடை செய்தார்கள். கட்டாய மதமாற்றம், கட்டிய பெண்டாட்டியை கங்காணி அழைத்துச் சென்று எஜமானனுக்கு விருந்தாக்குவது என்ற கொடுமைகளை எல்லாம் சந்தித்தவர்கள் அவர்கள். அவ்வாறான கொடுமைகளை ஒற்றையாய் நின்று எதிர்த்த ஆண்கள் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு கிறித்தவ எஜமானர்களால் கொல்லப்பட்டனர். 

1806 ஆம் ஆண்டு அடிமை முறையை கைவிடுவதாக கிறித்தவ ஆட்சியாளர்கள் கொள்கை அளவில் முடிவெடுத்தாலும், தோட்ட தொழிலாளர்கள் என்ற பெயரில் அழைத்து வரப்பட்டாலும் இந்த மக்கள் அடிமைகள் போலவே நடத்தப்பட்டார்கள். அடிமைகளை வைத்து தொழில் செய்த கிறித்தவ எஜமானர்களுக்கும், இவர்களை தொழிலாளர்கள் என்று பெயரளவில் சொன்னாலும் அடிமைகளின் எஜமானர்கள் என்ற அளவிலேயே அவர்களின் மனநிலையும் நடைமுறைகளும் இருந்தது. 

தமக்கு பிடித்தமான பெண்களை வேண்டும் போது அழைத்துச் செல்வதும், தட்டிக் கேட்கும் நபர்களை கொல்வதும், தமது இச்சைக்கு பிறந்த பிள்ளைகளை, தமது இச்சைக்கு இரையான பெண்களை கட்டாய மதமாற்றம் செய்ததும் கிறித்தவ எஜமானர்கள் அவர்களை தொழிலாளர்கள் என்று கருதாமல் அடிமைகள் என்று கருதினார்கள் என்பதற்கு சான்றாகும். 

மக்கள் எத்தனை நாட்களுக்கு தான் பொறுத்துப் போவார்கள். ஒரு கட்டத்தில் தமது உரிமைகள், கௌரவமான வாழ்க்கை என்பவற்றுக்காக இணைந்து போராட ஆரம்பித்தார்கள். கிறிஸ்தவ எஜமானர்களின் தடைகளை மீறி மரங்களின் கீழ் தாம் கொண்டுவந்த பிடி மண்ணை, இறை அடையாளப் பொருட்களை வைத்து வழிபட ஆரம்பித்தார்கள். தமது பெண்களை கூட்டிக் கொடுக்கும் கங்காணிகளை, கிறித்தவ எஜமானர்களை கொல்லும் அளவிற்கு துணிந்தார்கள். சிலரை கொன்றார்கள். மக்கள் ஒன்றுசேர்ந்து எதிர்ப்பதும், பதில் தாக்குதல் நடத்துவதும் கிறித்தவ முதலாளிகளுக்கும் கூட்டிக் கொடுக்கும் கங்காணிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது. இனி மிரட்டல் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்று உணர்ந்தவர்கள் தமது உபாயத்தை மாற்றினார்கள்.

தமது இச்சைக்கும் தேவைக்கும் இவர்களைப் பயன்படுத்துவது என்றால் அவர்களை அவர்களின் வாழ்வியலில் இருந்து மாற்றவேண்டும் என்று முடிவு செய்தார்கள். மானமிழந்த எதற்கும் சம்மதிக்கும் வகையிலான சமுதாயம் ஒன்றை அவர்களிடையே உருவாக்க வேண்டும் என்று முனைந்தார்கள். அதற்கு அவர்களை கிறித்தவ மதத்திற்கு மாற்றுவதே ஒரே வழிமுறை என்று தீவிரமாக செயற்பட்டார்கள். மதம் மாறினால் பதவி கிடைக்கும், பணம் கிடைக்கும், உணவுப்பொருள் கிடைக்கும் என்று எவருக்கு எது தேவையாக இருக்கிறதோ அது கிடைக்கும் என்று கூறி மதம் மாற்றினார்கள். மானத்துடன் வாழ வேண்டும் என்று போராடியவர்கள் எப்படி சலுகைகளுக்காக மாறுவார்கள். ஆனால் மாறுவதற்கும் சிலர் இருந்தார்கள். மதம் மாறியவர்கள் எஜமானர்களின் அருகிலேயே வேலைக்கு வைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு அளவில் பெரியதான இருப்பிடங்கள் வழங்கப்பட்டது. எஜமானர்கள் மட்டுமல்லாமல் கங்காணிகளும் அவ்வப்போது தமது இச்சைகளை அவர்கள் மூலம் தீர்த்துக் கொண்டார்கள். ஆனால் மானம் பெரிதென்று வாழ்ந்த மக்கள் எத்தனை கடுமையான வேலையைச் செய்தாலும் பரவாயில்லை, மதம் மாறிவிட்டு மானத்தை விற்று வாழமுடியாது என்று உறுதியுடன் நின்றார்கள்.

உலகிலேயே தன்மானத்தை காக்க, தமது பாரம்பரிய வாழ்வியலை காக்க அதிகமான துன்பத்தை சந்தித்தவர்கள், தியாகங்களை செய்தவர்கள் இந்த மலையக மக்கள்தான். 

ஆபிரிக்க அடிமைகளை கொண்டு உலகெங்கிலும் ஆதிக்கம் செலுத்திய ஐரோப்பிய கிறிஸ்தவர்கள், அடிமை முறையை கைவிடுவது என்று முடிவு செய்தபோது அந்த வெற்றிடத்தை எப்படி நிரப்புவது என்று ஆய்வு செய்தார்களாம். அதற்கு தென்னிந்தியாவிற்கு வந்து சென்ற ஒரு கிறிஸ்தவன் சொன்னானாம் ஆபிரிக்கர்களை விட அதிகமாக உழைக்க கூடிய, எந்தவொரு எதிர்ப்புமின்றி கீழ்ப்படிந்து வேலைசெய்ய கூடிய மக்கள் கூட்டம் தென்னிந்திய பகுதிகளில் இருக்கிறது என்றும், அந்த வெற்றிடத்தை நிரப்ப அவர்களை பயன்படுத்தலாம் என்றும் ஆலோசனை கூறினானாம்.

அதனால்தான் பல்வேறு ஆசைவார்த்தைகளை கூறியும், முன்பணம் கொடுத்து கடனாளி ஆக்கியும் தென்னிந்திய பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் என்ற பெயரில், மக்களை நவீன அடிமைகளாக அழைத்து வந்தார்களாம் அன்றைய கிறித்தவ எஜமானர்கள். இலவசத்திற்கும், முற்பணத்திற்கும் ஆசைப்பட்டு வந்தாலும், எதிர்ப்பின்றி கீழ்ப்படிந்து வேலை செய்தாலும் அவர்கள் அடிமைகள் கிடையாது. தமது பாரம்பரிய வாழ்வியலை காப்பாற்றுவது என்று வரும்போது உலகில் மிகப் பெரிய போராட்ட இனமாகவே வாழ்ந்தார்கள். இன்றும் வாழ்கிறார்கள்.

உலகில் வாழ்வதற்காக போராடிய மக்கள் இருக்கலாம், ஆனால் வாழ்க்கையையே போராட்டமாக கொண்ட ஒரு சமூகம் என்றால் அது மலையக மக்கள்தான். அவர்கள் போராடுவது தமது கௌரவமான வாழ்க்கைக்காக, தன்மானத்தை அடகு வைக்காத வாழ்க்கைக்காக, தமது பாரம்பரிய வாழ்வியலை காப்பாற்றுவதற்காக...

நிச்சயமாக அவர்கள் வெற்றி பெறுவார்கள். வெற்றி பெற்ற ஒரு சமுதாயமாக உயர்ந்து நிற்பார்கள்..

இந்த மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு 200 வருடங்கள் ஆகின்றன. இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் இன்று பரவலாக வாழ்கிறார்கள். மலையகத்தில் இருப்பவர்களைவிட கொழும்பிலும், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு போன்ற பகுதிகளிலும் வாழ்பவர்களே இன்று அதிகம். 

அவர்கள் இன்று சொந்தமான நிலபுலன்கள், வீடு, வாகனம், உத்தியோகம், தொழில்துறை என்று உயர்ந்த நிலைக்கு மாறியுள்ளார்கள். அவர்களது வளர்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

#மலையகம்200



Friday, 14 July 2023

தேவதாசி முறையை கைவிட்ட பௌத்தம்

இன்று தேவாதாசிகள் என்போர் இந்துக்களின் சமய நம்பிக்கையின் அங்கம் என்று பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். 

இன்று சைவம் வைணவம் என்று சொல்லப்படும் பிரிவுகள் பல சமண பௌத்த கூறுகளை தம்வசம் உள்வாங்கி கொண்டுள்ளது என்பதே உண்மையாகும். சமய தத்துவங்கள் முதல் ஆச்சார அமைப்பு நடைமுறைகள் வரை சமண பௌத்த கூறுகள் உள்ளன.

பௌத்தத்தின் அவ்வாறான ஒரு கூறுதான் இந்த தேவதாசி நடைமுறை. சமண மதம் என்று குறிப்பிடப்படும் மகாயான பௌத்த பிரிவுகள், உலகாயத பிரிவு என்பவற்றின் ஒரு அங்கமே இந்த தேவதாசிகள். துறவு என்பது இல்லற பந்தத்தில் இருந்து தவிர்ப்பதே அன்றி பசியுடன் இருப்பது அல்ல என்பது அவர்கள் வாதம். துறவி என்பதனால் ஒருவர் உணவைத் துறப்பதில்லை அல்லவா? அதுபோலவே உடல்சார்ந்த பசியை போக்குவதும் தவறில்லை. ஆனால் இன்ன உணவுதான் வேண்டும், இப்படித்தான் வேண்டும் என்பது துறவுக்கான முறையல்ல, அதுபோலவே உடற்பசிக்கும்.. 


அதனால் குடும்ப வாழ்வைத் தவிர்த்தாலும் உடற்பசியைப் போக்குவதற்கான ஏற்பாடாக சமண மதங்கள் இந்த தேவதாசி முறையை உண்டாக்கியது.. 

பயன்படுத்தியது.. 

அந்த தேவதாசி முறைக்கு அனைத்து சாதிகளில் இருந்தும் பெண்கள் சென்றுள்ளனர். இன்றைய கிறித்தவ மதத்தில் உள்ள கன்னியாஸ்திரி முறையை ஒத்ததாகவே அது ஆரம்பத்தில் இருந்துள்ளது. குறித்த குலத்தைச் சேர்ந்தவர் என்று இல்லாமல் எல்லா குலத்தவர்களும் பெண்களை அனுப்பியுள்ளனர். அந்த துறவுக்கு துணை நின்ற பெண்களின் சந்ததிகள் நாளடைவில் ஒரு சமுதாயமாகவே மாறிவிட்டார்கள். கன்னியாஸ்திரிகள் தனியான சமூகமாக உருவாகாததற்கு அவர்கள் மதத்தின் கட்டமைப்பே காரணம். 

அன்றைய காலத்தில் கருத்தடை, கருக்கலைப்பு என்பவை சிக்கலான ஒன்றாக இருந்ததால் தேவதாசிகள் குழ்நதைகளை பெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. அல்லது அவ்வாறு பெறும் குழந்தைகளை அனாதை குழந்தைகள் என்ற பெயரில் அனாதை இல்லம் ஒன்றை அமைத்து வளர்க்காமல் குறித்த பெண்களே வளர்த்ததால் அது ஒரு சமுதாயமாகவே மாறிவிட்டது என்றும் சொல்லலாம்.

பிற்காலத்தில் சைவத்தின் எழுச்சி சமணத்தின் தோல்வி போன்ற காரணங்களால் தேவதாசிகள் கைவிடப்பட்ட சமூகமாக மாறினார்கள். கைவிடப்பட்ட தேவதாசிகளை அக்காலத்தில் எஞ்சிய பௌத்தர்களும் ஏற்கவில்லை. அப்போது சமூகத்தின் மையமாக மாறியிருந்த சைவ கோயில்கள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களின் மீட்சிக்கான பிராயச்சித்தமாக இறைபணி செய்வதற்கு வாய்ப்பளித்து. 

ஆனால் சைவத்தின் செல்வாக்கு சரிந்து அன்னியர்கள் தயவில் ஜமீன்தார் பண்ணையார் நாயக்கர் என்று சிறுசிறு கூட்டங்களாக ஆட்சியமைப்பு மாறியபோது சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்கள் எல்லாம் பயன்படுத்தும் நிலைக்கு அந்த தேவதாசி சமுதாயம் தள்ளப்பட்டது. 

இன்று பௌத்த துறவிகள் சிலர் பாலியல் நுகர்வுக்காக பெண்களிடம் சென்று பிடிபட்டு அது பேசுபொருளாகவும் மாற்றப்படுகிறது. அது சரியா தவறா என்று நான் விளக்க வரவில்லை. ஆனால் காமம் என்பது தவறில்லை. அதைத் தீர்த்துக் கொள்வதும் தவறில்லை. நாம் அனைவரும் காமத்தின் எச்சங்கள் தானே? ஆனால் துறவிகள் காமத்தை துய்க்கலாமா என்பதே கேள்வியாக மாறுகிறது..

துறவிகள் காமத்தை துய்க்கலாமா என்ற கேள்வியுடன்..
துறவிகள் உணவு உண்ணலாமா?
துறவிகள் தூங்கலாமா?
துறவிகள் ஆடை உடுத்தலாமா?
துறவிகளுக்கு மத அடையாளம் உள்ளதா? 
இப்படி நிறைய கேள்விகளை கேட்கலாம்..
.

அவை எல்லாவற்றிற்கும் ஒரே பதில்தான்.. காமம் கூடாது என்றால் உணவு நீர் உடை தூக்கம் மதம் எதுவுமே கூடாது அல்லவா..

உண்மையில் துறவு என்றால் ஒன்றை விடுவது கிடையாது.. அதில் கட்டுண்டு போகாமல் இருப்பது. உணவு நீர் உடை காமம் என்று எதிலும் கட்டுண்டு கிடக்கக் கூடாது அதுதான் துறவு. அவற்றை தவிர்ப்பது துறவல்ல.. காமத்தை அடக்கி வைப்பதைவிட துய்ப்பதே சிறந்தது..

இந்துக்கள் வாழ்ந்து வாழ்வை கடந்த பின்னரே துறவு என்று கொள்கிறார்கள். வாழ்வை வாழ்ந்து கடக்காதவனது துறவு பொய்யானது என்கிறார்கள். 

பௌத்தத்தில் தமது விருப்பத்தில் துறவை ஏற்பவர்கள் குறைவு. சிறுவயதிலேயே குடும்பத்தினரால் துறவிகளாக மாற்றப்படுகிறார்கள். அதனால் அவர்கள் ஆசைகளைத் துறந்து துறவிகள் ஆனவர்கள் என்று சொல்ல முடியாது. யாரோ ஒருவரின் விருப்பத்திற்காக ஒருவர் துறவியாக முடியாது அல்லவா..

கிறிஸ்தவ நடைமுறைகளுடன் பௌத்தத்தை பொருத்திப் பார்க்க முடியாது. கிறிஸ்தவ சபைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாதிரியார்களுக்கும் தனித்தனி அறைகள், அந்த சபைகளுக்கு என்று தனியான கன்னியாஸ்திரி மடங்கள், அந்த மடத்திற்கு என்று அனாதை இல்லங்கள், ஆஸ்பத்திரிகள் என்று அனைத்தும் உள்ளன. ஆனால் இத்தகைய வசதிகள் எதுவும் பௌத்த பிக்குகளுக்கு கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்ய வெளியே செல்கிறார்கள். அதனாலேயே அண்மையில் நாம் பார்த்த சம்பவங்களுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. கிறிஸ்தவ சபைகளுக்கு இவ்வளவு ஏற்பாடுகள் இருந்தும் அவர்களது சபைகளுக்கு வெளியேயும் பல சம்பவங்கள் நடக்கிறது. ஆனால் பௌத்த பிக்குகள் எந்த ஏற்பாடுகளும் இல்லாததால் இவ்வாறு செல்வதை, கிறித்தவ பாதிரியார்களின் பாலியல் நடவடிக்கைகளுடன் ஒப்பிட முடியாது.

பௌத்தம் மீண்டும் ஒருமுறை தன்னை சீர்செய்ய வேண்டும். அவர்கள் கைவிட்ட தேவதாசி முறையை மீண்டும் உருவாக்க வேண்டும். அது ஒரு குலமாக உருவாகாமல் கன்னியாஸ்திரி முறையை போல பேணவேண்டும். மடங்களுக்கு என்று தனியான அனாதை இல்லங்கள், ஆஸ்பத்திரிகள் என்பவற்றை அமைத்து அந்த தேவதாசிகளின் கர்ப்பம், கர்ப்ப தடை, குழந்தைகள் என்பவற்றை முறைப்படுத்த வேண்டும். 

கிறிஸ்தவ சபைகளின் இத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றுவது ஒன்றே பௌத்த பிக்குகள் தமது இச்சைகளை தீர்த்துக் கொள்ள, வெளியே சென்று மதத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதை தவிர்ப்பதற்கு வழியாகும். அல்லது இந்துக்களைப் போல இல்லற வாழ்க்கையை வாழ்ந்து முடித்த பின்னரே துறவு என்ற வழிமுறையை பின்பற்ற வேண்டும்.

அடுத்தவர்கள் எள்ளி நகையாடுவார்கள் என்பதற்காக தேவதாசி முறையை கைவிட்டாலும், அதுவும் இன்று அடுத்தவர்கள் எள்ளி நகையாடும் நிலைக்கு காரணமாகி உள்ளது. அதனால் அடுத்தவர்களுக்காக எமது பாரம்பரியம் எதனையும் கைவிடக் கூடாது. அதில் நடைமுறை சார்ந்த தவறுகள் இருந்தால் திருத்திக் கொள்ளலாம். ஆனால் அவற்றை கைவிடக் கூடாது.

இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு ஆணும் பெண்ணும் தம் விருப்பத்துடன் தனியறையில் இருந்து உறவுகொள்வதை தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. அதனை படமெடுத்து பகிரங்கமாக இடுவது தவறு. அவர்களை தாக்குவது பிழை. இவை அனைத்தும் சட்டப்படி குற்றமாகும். அதனால் யாரும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது.



Wednesday, 28 June 2023

சாதி இல்லாமல் இனம் கிடையாது.

உயர்ந்த குலம், தாழ்ந்த குலம் என்பதை காலமே வகுக்கிறது.

சமூக கட்டமைப்பில் அடிப்படையாக இருப்பவர்கள் தனிநபர்கள் தான். 

ஆனால் சமூகம் என்பது தனிநபர்களால் மாத்திரம் உருவாவதில்லை.

சமூகம் என்பது ஒரு படிநிலை கட்டமைப்பைக் கொண்டுள்ளது. தனிநபர்கள் சேர்ந்து குடும்பம். குடும்பங்கள் சேர்ந்து குலம். குலங்கள் சேர்ந்து சாதி. சாதிகள் சேர்த்து இனம். இவ்வாறான பல இனங்கள் சேர்ந்ததுதான் ஒரு சமூகம். 

இங்கே தனிநபர், குடும்பம், குலம், சாதி, இனம் என்று எது ஒன்றைச் சிதைத்தாலும் சமூகக் கட்டமைப்பு குலைந்துவிடும். 

ஒழுக்கமின்மை, சிந்தனையின்மை என்பவற்றால் தனிநபர்கள் என்ற கட்டமைப்பு சிதைக்கப்படும்.
தனிநபர்கள் வழிதவறும்போது குடும்பக் கட்டமைப்பு சிதைக்கப்படும். 
குடும்பங்கள் சிதையும் போது குலங்கள் சிதைந்து அழிந்து போகும்.
குலங்கள் அழியும் போது சாதிய ஒற்றுமையும் பலமும் இல்லாமல் போகும்.

சாதிகள் பலமிழந்து இல்லாமல் போகும்போது இனம் என்பது எதுவென்றே தெரியாமல் போய்விடும். சம்பந்தமே இல்லாதவர்கள் அந்த இனத்தின் அடையாளத்தை பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். அந்த இனத்தின் மரபுக்கும் பண்பாட்டிற்கும் சம்பந்தமே இல்லாதவர்கள் அந்த இனத்திற்கு உரிமைகோரி அதனை ஆள்வதற்கு முற்படுவார்கள்.

இன்று எம் இனத்திற்கு நடப்பது இதுதான்.

எமது இனத்தை அழித்து, அடையாளம் தொலைத்த மக்களை ஆள்பவர்களே சாதிகள் வேண்டாம் என்கிறார்கள்.

சாதிகள் இல்லையென்றால் இனம் என்பது கிடையாது. மொழி என்பது இனமல்ல. மொழி என்பது இனத்தின் ஒரு கூறு மாத்திரமே. மொழிதான் இனமென்றால் யார் வேண்டுமானாலும் ஒரு இனத்திற்கு மாறிவிடலாம். 

மொழி தான் இனமென்றால்; எம்மினத்தை ஆக்கிரமிப்பு செய்ய வந்தவன், அவன் கொண்டுவந்த அடிமைகளின் வம்சங்கள், அவர்கள் இருவராலும் உண்டாக்கப்பட்ட கலப்பின வம்சங்கள் எல்லாம் இன்று எம்மொழியைப் பேசுவதால் எம்மினம் என்று ஆகிவிடும்.

அதனால்தான் சொல்கிறோம் மொழி இனமல்ல, இனத்தின் ஒரு கூறே மொழியென்று. 

இங்கே.. தனிநபர்கள், குடும்பம் என்பவற்றில் யாருக்கும் எந்த குழப்பமும் இருப்பதில்லை. ஆனால் குலம், சாதி, இனம் என்பதில்தான் கேள்விகள் உண்டு.

இனம், சாதி இரண்டும் ஒரே பொருளைக் கொண்டது.குலம், சாதி இரண்டும் ஒன்று எனும் மயக்கத்தை தருவது.

குலம் என்பது இன்று நாம் பரம்பரை என்று குறிப்பிடும் பொருளைக் கொண்டது. ஏதோ ஒரு குடும்பத்தில் இருந்து கிளைத்தெழுந்த குடும்பங்களைக் குறிக்கும் பெயரே குலமாகும். 

சாதி என்பது நெருக்கமான குண இயல்புகளைக் கொண்ட குலங்களைச் சேர்ந்த பிரிவாகும். 

இனம் என்பது பொதுவாக பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் பொது இயல்புகளைக் கொண்ட சாதிகளின் கூட்டமாகும்.

இங்கே பொதுவான பழக்கவழக்கங்கள் இயல்புகள் என்பவை, அவர்களின் சமய பாரம்பரியம் நம்பிக்கைகள் என்பவற்றை சார்ந்ததாகவே இருக்கிறது.

எனவே ஒரு இனத்தை தீர்மானிக்கும் முதன்மையான காரணி சமயம் என்றுகூட சொல்லலாம். சமயம் என்பது இல்லாமல் இனம் என்பது கிடையாது. 

மக்கள் மதம் மாறும் போது அவர்களது இனத்தின் பொதுவான பாரம்பரியம் நம்பிக்கை இயல்பு என்பவற்றில் இருந்து வேறுபட்டு செல்கின்றனர். இனம் என்பதே பொதுவாக பழக்கவழக்கமுடைய கூட்டம் என்பதாக இருக்கும்போது, புதிய பழக்கவழக்கம் புதிய நம்பிக்கை என்று இனத்தின் பொதுத் தன்மையில் இருந்து மாறுபட்டு நிற்பவர்கள் ஒருபோதும் அந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியாது.

சமூகத்தில் மதமாற்றம் என்பது இனவழிப்பு பொறிமுறை என்பதாகவே உள்ளது. நீண்ட கால வரலாறு அதைத்தான் சொல்கிறது. 

இனத்தின் அடிப்படையான சமயத்தை பேணிப் பாதுகாப்வர்களை உயர்வான குலங்கள் என்றும், அந்த இனக் கட்டமைப்பை சீரழிக்கும் குலங்களை தாழ்வான குலங்கள் என்றும் காலம் வரையறுத்து விடுகிறது.

இங்கே தாழ்த்தப்பட்ட என்ற பேச்சுக்கே இடமில்லை. இன்று உயர்ந்த நிலையில் இருப்பவை நாளை தாழ்ந்து போகலாம். இன்று தாழ்ந்த நிலையில் இருப்பவை நாளை உயர்ந்த நிலையில் இருக்கலாம். 

உங்கள் குணங்களே உங்கள் சந்ததிகளின் உயர்வு தாழ்வினை தீர்மானிக்க போகிறது. எம் இனத்தின் பாரம்பரியத்தை, அதைத் தாங்கி நிற்கும் சமயத்தை காக்கவேண்டும் என்று உங்கள் குணமிருந்தால் உங்கள் சந்ததிகள் உயர்ந்த நிலையில் இருக்கும். இல்லை உங்கள் அல்ப்பமான தேவைகளுக்காக, இச்சைகளுக்காக உங்கள் பாரம்பரியத்தை தூக்கி வீசவோ, அழிக்கவோ உங்கள் குணம் இசைந்து நிற்கிறது என்றால் உங்கள் சந்ததிகள் இழிவு நிலையில் இருக்கும்.

அதுபோலவே சமூகத்தின் அடிப்படை கட்டமைப்பான தனிநபர்களின் ஒழுக்கத்தை கெடுத்து அதன் அடுத்த படிநிலையான குடும்பங்களை சிதைக்கும் போதைப்பொருள், விபச்சாரம், திருட்டு, நம்பிக்கை சிதைப்பு என்பவற்றை மேற்கொள்பவர்களின் சந்ததிகளும் மிகவும் தாழ்ந்த நிலையிலேயே காலத்தால் வைக்கப்படும்.

குலத்தின் அளவு குணத்தை அடிப்படையாகக் கொண்டது. குணம் மாறினால் காலத்தால் குலத்தின் நிலையும் மாறிவிடும். யாரையும் யாராலும் உயர்த்தவோ தாழ்த்தவோ முடியாது. 

உங்கள் எதிர்கால சந்ததிகள் உயர்ந்த நிலையில் இருப்பதும், தாழ்ந்த நிலையில் இருப்பதும் உங்கள் கைகளிலேயே உள்ளது.





Friday, 31 March 2023

புதுவருட மருத்துநீர் தயாரிப்பது எப்படி

அறுபது ஆண்டு சுழற்சியைக் கொண்ட தமிழ் புதுவருட கொண்டாட்டத்தில் நீராடுதல் என்பது முதலாவது சடங்காக மேற்கொள்ளப்படும்.

புதுவருட தினத்தில் காலை எழுந்ததும் சிறுவர் முதல் பெரியவர் வரையில் அனைவரும் நீராடுவது வழக்கம். ஆனால் வழக்கமான நீராடுதல் போலல்லாமல் மருத்துநீர் தேய்த்து நீராடுவது என்பது புதுவருட தினத்தின் சிறப்பாகும். 

பொதுவாக இலங்கையில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் மருத்துநீர் காய்ச்சி மக்கள் அனைவருக்கும் வழங்குவார்கள். சிலர் தமது வீடுகளில் காய்ச்சி அயலவர்கள் அனைவருக்கும் வழங்குவார்கள். மக்கள் புதுவருடத்திற்கு முந்தைய மாலை வேளையில் அல்லது புதுவருட நாளின் அதிகாலை வேளையில் ஆலயங்களுக்கு சென்று மருத்துநீரை வாங்கிவந்து உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடல் முழுவதும் பூசி சிறிது நேரத்தின் பின்னர் நீராடுவார்கள். இந்த வழக்கம் தமிழகத்தில் இன்று மறந்துபோன ஒரு வழக்கமாக மாறிவிட்டது.

இந்த மரபை மீட்டு மீண்டும் பின்பற்ற விரும்புபவர்கள் மருத்துநீர் காய்ச்சி மக்களுக்கு வழங்கும் முறையை மீண்டும் உருவாக்கலாம். மருத்து நீர் காய்ச்சும் முறை மிகவும் இலகுவானது.

ஒரு சுத்தமான பாத்திரத்தில் சுத்தமான நீரை ஊற்றி அதில் 

தாழம்பூ, 
தாமரைப்பூ, 
மாதுளம் பூ, 
துளசி, 
விஷ்ணுகிராந்தி, 
சீதேவியால் செங்கழு நீர், 
வில்வம், 
அறுகு, 
பீர்க்கு, 
பால், 
கோசலம், 
கோமயம், 
கோரோசனை, 
மஞ்சள், 
மிளகு, 
திப்பிலி, 
சுக்கு 

ஆகியவற்றில் சிறிதளவை போட்டு நன்கு காய்ச்சி நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதுவே மருத்துநீராகும்.இம்மருத்துநீரை கிரக தோஷம் உள்ளவர்கள், மனச்சஞ்சலம், உடல் உபாதை உள்ளவர்கள்  தேய்த்து நீராட அவை மறையும் என்பது மரபாகும். 

இந்த புது வருடத்தில் இருந்து மருத்துநீர் வைத்து நீராடும் எம் மரபை மீட்டெடுப்போம். அனைவரும் வீடுகள் ஆலயங்களில் வைத்து மருத்துநீர் காய்ச்சி மக்களுக்கு வழங்கும் இப்புண்ணிய காரியத்தில் பங்கெடுப்போம்.




Sunday, 26 March 2023

திருவள்ளுவர் திருவுருவம்

 தமிழர் பாரம்பரிய அடையாளங்களை சிதைத்து திராவிடம் வெளியிட்ட வள்ளுவர் உருவின் பயன்பாட்டை முடிவிற்கு கொண்டுவரும் முகமாக இலங்கை உருத்திரசேனை அமைப்பால் வெளியிடப்பட்ட வண்ண திருவுருவ படம்.

உயர் தரத்தில் அனைவரும் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

திராவிடம் அடையாளச் சிதைப்பு செய்வதற்கு முன்பு பயன்பாட்டில் இருந்த திருவள்ளுவர் உருவம் மீளவும் டிஜிட்டல் முறையில் வரையப்பட்டு டிஜிட்டல் வர்ண படமாக வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வள்ளுவர்


திருவள்ளுவர் திருவுருவம் உயர் தரம்

வள்ளுவர் / திருவள்ளுவர்/ தெய்வப்புலவர்
திருவள்ளுவர் சரியான வரலாறு


திருவள்ளுவர் திருவுருவம் சாதாரண தரம்

புலிகள் இயக்கத்தின் அழிவுக்கு காரணம் என்ன?

இயக்கத்தில் கத்தோலிக்க ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது பிரபாகரனின் தாழ்வு மனப்பான்மையா? புலிகள் இயக்கத்தின் வெள்ளிக்கிழமைகளில் மாட்டிறைச்சி உணவு,...