Saturday, 10 December 2022

கண்ணகை அம்மன் அவதரித்த கதை

 முன்னொரு காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டு வந்த நெடுஞ்செழியன், இமயம் முதல் குமரி வரை இந்திய தேசத்தின் பலநாடுகளையும் போரிட்டு வென்றான். அனைத்து நாடுகளிலும் வெற்றி கொள்ளப்பட்ட செல்வங்களாலும், கல்வி மற்றும் தொழில்களாலும் பாண்டிய நாடு செழிப்புடன் விளங்கியது.

தானும் தன்நாடும் பெற்ற இத்தனை பேறுகளாலும் பாண்டிய மன்னன் செருக்கடைந்து இருந்தான் தான் பெற்ற பேறுகளால் தன்னை சிவனுக்கு நிகரானவன் என்று எண்ணி ஆணவம் கொண்டிருந்தான்.

எதுவும் அளவுக்கு அதிகமாக கிடைத்துவிட்டால் தன்னை விட பெரியது எதுவும் கிடையாது, தனக்கு தெரியாதது எதுவுமில்லை என்ற ஆணவம் மனிதனுக்கு தோன்றிவிடும். அதுபோல் பாண்டியனும் தனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதையில் அறமின்றி நடந்தான். அவனது ஆணவத்தால் நியாயவான்கள் பலர் தண்டிக்கப்பட, அதர்மிகள் சுதந்திரமாக உலாவினர்.

அவனுக்கு அவன் தவறை எடுத்துச் சொல்வார் எவருமில்லை. எதிர்த்து பேசவும் யாருக்கும் தைரியமில்லை. அவன் பராக்கிரமங்களை புகழ்ந்து பாடும் கூட்டமும், அவன் செய்வது எல்லாம் சரி என்று ஒத்தூதும் கூட்டமுமே அவனைச் சூழ்ந்திருந்தது. பாண்டிய நாடு முழுவதும் செல்வ மிகுதியால் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று குதூகலமாக தோன்றினாலும் யாருக்கும் மனநின்மதி இருக்கவில்லை.

அவனது ஆட்சியில் அறம் தவறி ஒழுக்க கேடுகள் அதிகரித்து இருந்தது. நல்லவர்கள் மிகவும் துன்பப்பட்டு வருந்தினார்கள். அவர்கள் அனைவரும் சிவபெருமானிடமும் பார்வதி தேவியிடமும் தமது துன்பத்தை நீக்கும்படி வேண்டினார்கள்.மக்களின் குறைதீர்க பார்வதியும் எம்பெருமானும் திருவுளம் கொண்டார்கள்.

பாண்டிய மன்னனின் அரண்மனைக்கு சற்று வெளியே ஒரு மாமரம் விசித்திரமாக இருந்தது. மரத்தில் பழுத்த மாம்பழம் ஒன்று தோன்றும். யாரேனும் அதனைப் பறிப்பதற்காக மரத்தில் ஏறி அதனருகில் சென்றால் காணாமல் போய்விடும். இந்த தகவல் அரண்மனைக்கும் எட்டியது. நெடுஞ்செழியனின் மனைவி கோப்பெருந்தேவி அந்த மாம்பழம் தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கலாம், அதனை எப்படியாவது பறித்துத் தாருங்கள் என்று மன்னனிடம் வேண்டினாள். ஏறிச் சென்றால் தானே மறைகிறது என்று எண்ணிய பாண்டிய மன்னன் மரத்தின் கீழ் இருந்து அம்பினை எய்து கனியினை வீழ்த்தினான். வீழ்ந்த பழம் மண்ணில் விழாமல் இருக்க கையில் ஏந்தினான். ஆனால் அந்த மாம்பழம் கையில் பட்டதும் நெருப்பு கோளமாக மாறிச் சுட்டது. மண்ணில் விழாமல் பிடிக்க வேண்டும் என்ற அவனது முயற்சி தோற்றுப் போய் பழம் மண்ணில் விழுந்தது. மண்ணில் விழுந்த பழத்தை எடுத்து அதில் ஒட்டி இருந்த மண்ணைத் தட்டி விட்டு பழத்தைக் கொண்டு சென்று மகாராணியிடம் கொடுத்தான்.

பழம் கையில் ஏந்தும் பொழுது தணலாக சுட்டது என்ற செய்தியை கேட்டு பயந்த கோப்பெருந்தேவி அந்தப் பழத்தை உண்ணாமல் ஒரு பொன் குடத்தில் இட்டு வைத்தாள். பின் மூன்று நாட்களின் பின்னர் அந்த பொன்குடத்தைத் திறந்து பார்த்த மகாராணிக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. குடத்தில் வைத்த மாங்கனி பேரழகு மின்னும் ஒரு பெண்குழந்தையாக மாறியிருந்தது.பயந்துபோன மகாராணி குடத்தை குழந்தையுடன் எடுத்து சென்று மன்னனிடம் காட்டி பதைபதைத்தாள். பாண்டியனுக்கு என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை. அரண்மனையின் ஆஸ்தான சோதிடரை அழைத்து ஆலோசனை கேட்டான். 

சோலியை உருட்டிப் போட்ட சோதிடருக்கு எதிர்காலம் அப்படியே புரிந்தது. இந்த குழந்தையால் தான் மன்னனின் மரணமும், மதுரையின் அழிவும் என்று தெரிந்தது. விதியை மாற்ற சோதிடருக்கும் விருப்பமில்லை. விதி என்பது அப்படித்தானே தன்னை வடிவமைக்கும். குழந்தையாக உருவெடுத்து நின்ற பார்வதியை மனத்தால் வணங்கிய சோதிடர், மன்னா இந்த குழந்தை இராச்சியத்திற்கு நல்லதல்ல, நாட்டில் இருந்து எடுத்துச்சென்று வெளியே விட்டுவிடு என்றார்.

எல்லை தாண்டி இன்னொரு நாட்டில் சென்று எப்படி குழந்தையை விட்டுவிட்டு வருவது என்று சிந்தித்த பாண்டியன், அழகிய மிதக்கும் பேழை ஒன்றைச் செய்து, அதில் குழந்தையை வைத்து ஆற்றில் விட்டு வரச்சொல்லி ஏவலர்களைப் பணித்தான். ஏவலர்களும் அவ்வாறே செய்தார்கள்.

அந்த காலத்தில் சோழநாட்டை கரிகால பெருவளத்தான் ஆட்சிசெய்துவந்தான். அந்த சோழ நாட்டின் தலைநகரான காவிரிப் பூம்பட்டினத்தில் மாசாத்துவன், மாநாகன் என்னும் இரு நண்பர்கள் வணிகத் தொழில் செய்து வந்தார்கள். அவர்கள் இருவரும் காவிரிப் பூம்பட்டினத்தின் ஆற்றுப் படுகையின் ஓரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது பேழை ஒன்று மிதந்து வருவதைக் கண்டார்கள்.இருவரும் ஓடிச்சென்று பேழையைத் தூக்கி வந்து திறந்து பார்த்தார்கள். ஒரு அழகிய பெண் குழந்தை ஒன்று

அதனுள் அழுதவாறு இருந்தது. மாநாகனுக்கு ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. அந்த குழந்தையின் பெயர் கோவலன். ஆனால் மாசாத்துவனுக்கு திருமணம் செய்து பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. அதனால் அந்த பேழையில் வந்த குழந்தை தான் வணங்கும் ஈஸ்வரனே அனுப்பிய குழந்தை என்று மகிழ்ந்து வீட்டிற்கு எடுத்துச் சென்றான். தம் வாழ்வின் இருளை நீக்கி மகிழ்ச்சியை உண்டாக்கியவள் என்ற பொருளில் கண்ணகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். 

காலம் மிக வேகமாக ஓடியது. கோவலன் கண்ணகை இருவரும் வளர்ந்து மணவயதை அடைந்தார்கள். கோவலனை கண்ணகைக்கு சீரும் சிறப்புமாக கோலாகலமாக மணமுடித்து வைத்தார்கள். நண்பர்களான மாசாத்துவனும் மாநாகனும் தமது பிள்ளைகளை மணமுடித்து வைத்து சம்பந்திகள் ஆனார்கள்.

மணம் முடித்து சிலகாலம் மகிழ்ச்சியாக வாழ்ந்த கோவலன் வியாபாரம் செய்வதற்காக காவிரிப்பூம்பட்டினம் செல்கிறான். அப்போது சோழ மன்னனின் அரண்மனை அரங்கத்தில் மாதவி என்னும் கணிகையர் குலப் பெண்ணின் அரங்கேற்றம் நடப்பது கேள்விப்பட்டு பார்ப்பதற்காக செல்கிறான். அவள் ஆடல் திறத்திலும், அழகிலும் மயங்கிப் போய் வெளியே வந்து கோவலனுக்கு அரசனின் அறிவிப்பு சபலத்தை தூண்டியது.

மாதவியின் கணிகையர் குலத்தவர்கள் உலகாயதம் என்னும் சமண பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கடவுள் என்று ஒன்று இருப்பதை ஏற்காமல் இந்த உலகமே உண்மையானது, உலகியல் இன்பங்களில் திளைத்து இருப்பதே வாழ்வின் பயன் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டவர்கள். அவர்கள் யாரும் திருமணம் செய்வதில்லை. திருமணம் கடந்த உறவே அவர்களின் வாழ்க்கை முறையாக இருந்தது. பெண்கள் பருவ வயதை அடைந்தவுடன் அவர்களின் அழகு திறமை என்பவற்றை பொறுத்து விலை தீர்மானிக்கப்பட்டு செல்வந்தர் களுக்கு விற்கப்படுவார்கள்.

மாதவியின் அழகு திறமை என்பவற்றை பொறுத்து அவளுக்கு 1008 பொன் என்பது விலையாக தீர்மானிக்கப்பட்டது. அரங்கேற்றம் செய்தபோது மன்னன் பரிசாக அளித்த மாலையை எவன் 1008 பொன் கொடுத்து வாங்குகிறானோ அவனுக்கே மாதவி சொந்தம். பொதுவாக இவ்வாறான கணிகையர் குலப் பெண்களை வாங்குபவர்கள் தங்களின் இச்சை தீர்ந்தவுடன் அவர்களை வியாபாரப் பொருளாக்கி விடுவார்கள். 

கோவலன் தான் வியாபாரம் செய்வதற்காக கொண்டுவந்து பணத்தை எடுத்து மாலையை வாங்கினான்.அடங்காத ஆசையுடன் சென்றவன் மாதவியே கதி என்று அவளுடனேயே தங்கிவிட்டான். கோவலனுக்கு அவளை வியாபாரப் பொருளாக்க விருப்பமில்லை. தன் வீடு மனைவி எல்லாவற்றையும் மறந்து மாதவியின் அணைப்பிலேயே மயங்கிக் கிடந்தான்.

கோவலனைக் காணாத கண்ணகி மனமுருகி ஈஸ்வரனை வழிபட்டாள். அப்போது அவள் மனதில் தோன்றிய ஈஸ்வரன் அவளின் பிறப்பின் நோக்கத்தையும், அவள் அன்னை பார்வதியின் அம்சம் என்பதையும் உணர்த்தி எல்லாம் விதிப்படியே நடக்கிறது, வருந்தாதே, இவை எல்லாம் உன் அவதாரத்தின் நோக்கம் நிறைவேறுவதற்காகவே என்று கூறி மறைந்தார்.

சில காலம் செல்ல செல்வங்கள் அனைத்தையும் இழந்த கோவலன், மாதவியின் நடத்தையிலும் வெறுப்புற்று மீண்டும் கண்ணகியிடம் வருகிறான். மாதவியிடம் சென்று செல்வங்கள் அனைத்தையும் இழந்ததால் இப்போது அவர்களை வறுமை சூழ்ந்திருந்தது. மீண்டும் வியாபாரம் செய்வதற்கு மூலதனம் இல்லாததால், மூலதனத்தை பெறும் பொருட்டு கண்ணகியின் மாணிக்கப்பரல்களாலான கால்சிலம்பம் ஒன்றை வாங்கிக் கொண்டு பாண்டிய நாட்டிற்கு செல்கிறான். 

பாண்டிய நாட்டில் மாணிக்க பரல்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று பயணித்த கோவலனுக்கு ஆபத்து சூழ்ந்தது. இவன் பாண்டிய நாட்டிற்குள் போன அதே காலத்தில் பாண்டியன் மனைவியின் கால்சிலம்பமும் காணாமல் போய் கண்டுபிடித்து தருவோருக்கு சன்மானம் என்று முரசறையப்பட்டது. இதை அறியாத கோவலன் கால் சிலம்பை விற்க கடைத் தெருவிற்கு செல்கிறான். வாங்குவதற்காக சிலம்பை பார்த்த பொற்கொல்லன் கோவலனைத் திருடன் என்று சொல்லி மன்னனிடம் பிடித்துக் கொடுக்கிறான். கோவலன் வாழ்க்கையில் விதி விளையாடியது. ஆணவம் தலைக்கேறி ஆட்சி செய்த பாண்டிய மன்னன், விசாரணை ஏதும் செய்யாமல் கோவலனே குற்றவாளி என்று சொல்லி தலையை துண்டித்து தண்டனை கொடுக்கிறான்.

நடந்ததை உணர்ந்த கண்ணகி சினங்கொண்டு பாண்டிய நாட்டிற்கு வந்தாள். அரண்மனைக்கு சென்று குற்றம் ஏதும் செய்யாத தன் கணவனை கொன்ற கொலைகாரன் நீ என்று பாண்டியனை பார்த்து சீறினாள். ஆணவம் தலைக்கேறிய பாண்டியன் தான் செய்தது சரியென்று வாதித்தான். கோவலன் கொண்டு வந்த சிலம்பையும், ராணியிடம் இருந்த சிலம்பையும் வாங்கி உடைத்து வீசுகிறாள். ராணியின் சிலம்பில் இருந்து முத்துப் பரல்களும், கோவலன் கொண்டு வந்த சிலம்பில் இருந்து மாணிக்க பரல்களும் தெறித்தன. அவள் கொண்டுவந்த மற்றைய சிலம்பையும் எடுத்து உடைத்து வீசினாள். அதிலிருந்தும் மாணிக்க பரல்கள் தெறித்து விழுந்தன. 

பாண்டியன் அரியணையில் இருந்து கீழே இறங்கினான். தன் தவறையும், தான் ஆணவத்தால் செய்த அநீதியையும் எண்ணி கலங்கினான். இதுவரையில் ஆணவத்தால் எத்தனை தவறுகள் செய்தேனோ என்று பதறினான். நான் ஆள்வதற்கு மட்டுமல்ல வாழ்வதற்கும் தகுதியில்லாதவன் என்று தன் உறைவாளை உருவினான். அவன் வாழ்வை அவனே முடித்துக் கொண்டான். 

மதுரை மக்களுக்கு தான் யாரென்பதை கண்ணகி வடிவில் இருந்த பார்வதி தேவி உணர்த்தினார். மன்னனின் அகங்காரமும் அதனால் உண்டான மரணமும் மதுரை மக்களை பயங்கொள்ள செய்தது. மக்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து, ஆணவத்தையும் அறியாமையையும் போக்கி நல்லபடியாக வாழ ஆரம்பித்தார்கள். தூங்கா நகரம் துகிலுரியும் தொழில் விட்டு ஒழுக்கமாக மாறியது.

கண்ணகி வடிவில் தோன்றி மதுரை மக்களின் ஆணவத்தையும் அறியாமையையும் அழித்த பார்வதி, தன்னை நம்பியவர்கள் அனைவரது ஊர்களுக்கும் சென்று காட்சியளித்து, அருளாசி வழங்கி இறுதியில் கையிலாயத்தை சென்றடைந்து தன் அவதாரத்தை முடித்துக் கொண்டார்.








Friday, 2 December 2022

பிறவிக்குணம் மாறாதது-ஆன்மீக கதை

மதுசந்தா முனிவர் விசுவாமித்திரரின் மகனாவார். அவர் மற்றைய முனிவர்களை விட சற்று மாறுதலாக சிந்திப்பவர். அவரது ஆசிரமத்தில் பலநூறு சீடர்கள் தங்கியிருந்து கல்வி கற்று வந்தனர். வழக்கமான ஆச்சிரமங்கள் போலல்லாமல் மதுசந்த முனிவரின் ஆச்சிரமம் அமைதியற்ற சனசந்தடியான இடத்திலேயே இருந்தது. பலநாட்டவர்களும் வந்து தங்கிச் செல்லும் புறநகர் பகுதியில் ஆச்சிரமம் அமைந்திருந்தது.

அவர்களின் ஆச்சிரமத்திற்கு அருகில் விலைமாதர்கள் விடுதி, திருடர்கள் குடியிருப்பு, குடிகாரர்களின் வீடுகள் என்று தவறான நபர்களின் இருப்பிடங்களே அதிகமாக இருந்தது. இந்த நபர்கள், சூழல் என்று எல்லாவற்றையும் கடந்த ஒருவனால் மட்டுமே ஞானமடைய முடியும் என்பது மதுசந்தரின் நம்பிக்கை.

தினமும் தன்னுடைய சீடர்களுக்கு வேத கருத்துக்களை கூறி, எல்லோரும் ஞானமடைவதற்கு தேவையான போதனைகளை செய்து வருவது மதுசந்தரின் வாடிக்கை. ஆனால் ஆச்சிரமத்தில் இருந்த கிரிஸ்தன், யவன் என்ற இரண்டு சீடர்கள் மட்டும் போதனைகளை கேட்டதுபாதி கேட்காதது பாதியாக சுற்றியுள்ள வீடுகளில் நடப்பதையே கவனித்து வந்தார்கள். போதனைகள் முடிந்தவுடன் ஆச்சிரமத்தில் இருந்து வெளியே சென்று விலைமாதர்கள் வீடுகளில் என்ன நடக்கிறது, குடிகாரர்கள் என்ன செய்கிறார்கள், திருடர்கள் எப்படி திருடுவதற்கு திட்டமிடுகிறார்கள் என்று ஒளிந்திருந்து பார்ப்பதிலேயே காலங் கடத்தினார்கள்.

மதுசந்தரும் இவர்கள் சிலநாட்களில் திருந்தி விடுவார்கள் என்றெண்ணி, அவர்கள் உணர்ந்து திருந்த வேண்டும் என்ற வகையிலே போதனைகளை செய்தார். ஆனாலும் அவர்கள் இருவரும் திருந்துவதாக இல்லை. இங்கே போதனைகள் நடந்து கொண்டிருக்கும் போது அவர்களின் சிந்தனைகள் முழுவதும், விலைமாதர் வீடுகளிலும், திருடர்கள் கூட்டத்தின் திட்டமிடல்களிலுமே மூழ்கியிருந்தது.

ஒருநாள் இதனை முடிவுக்கு கொண்டுவர எண்ணிய மதுசந்தர், அவர்கள் இருவரும் விலைமாதர் விடுதியிலோ, குடிகாரர்கள் சூதாட்டகாரர்களிடத்தோ, ஒளிந்திருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போது பிடித்துவரச் சொல்லி வேறு சில சீடர்களை பணித்தார். அவர்களும் குருவின் கட்டளையை ஏற்று மறுநாள் அவர்கள் மறைந்திருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது கையும் களவுமாக பிடித்து வந்தார்கள்.

பிடித்து வரப்பட்ட கிரிஸ்தன், யவன் இருவரும் குருவின் முன் நிறுத்தப்பட்டார்கள். இவர்கள் இருவரும் தம் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு திருந்தி விடுவார்கள் என்றெண்ணிய மதுசந்தர், அவர்களை நோக்கி விலைமாதர் விடுதிகளுக்கும் குடிகாரர்களின் சூதாட்ட விடுதிகளுக்கும் சென்றீர்களா என்று கேட்டார்.

தாங்கள் இருவரும் அவ்வாறு சென்று மறைந்திருந்து பார்த்தது உண்மை என்று யவன் சொல்ல, இடைமறித்த கிரிஸ்தனோ நாங்கள் விலைமாதர்களும், திருடர்களும் எவ்வாறு சொர்க்கம் செல்வது என்றும், அவர்களை எப்படி திருத்துவது என்றும் ஆராய்ச்சி செய்யவே சென்றோம். எம்மிடம் தவறான நோக்கம் எதுவுமில்லை என்று கூறினான். கிரிஸ்தன் சொன்னது கேட்ட யவனும் ஆமாம் என்பது போல தலையை அசைத்தான்.

இவர்கள் திருந்துவார்கள் என்று எதிர்பார்த்த முனிவருக்கு இவர்கள் இவ்வாறு பொய்பேசியதும் ஆத்திரம் வந்துவிட்டது. குருவிடம் பொய்பேசும் உங்கள் இருவருக்கும் ஞானம் அடைவதற்கான தகுதி கிடையாது. உங்கள் சிந்தனைகள் முழுவதும் விலைமாதர் வீடுகளிலும், திருடர்கள் கூட்டத்திலுமே உள்ளது. நீங்கள் இருவரும் நீரும், ஒழுக்கமும் இல்லாத பாலைவன நாடுகளில் தவறான உறவில் பிறந்து, நீங்கள் ஆசைப்பட்டது போல விலைமாதர்கள், திருடர்கள், சூதாட்டகாரர்கள் சூழ வாழ்வீர்கள், என்னிடம் சொன்ன தீயவர்களை திருத்துவதற்காக என்ற அதேபொய்யை பேசி ஊரை ஏமாற்றுவீர்கள், அதனால்தான் உங்களுக்கு மரணமும் சம்பவிக்கும் என்று சாபமிட்டார்.

மதுசந்த முனிவரின் சாபத்தால் ஆச்சிரமத்தில் உள்ள மாணவர்கள் அனைவரும் பயந்துபோய் இருந்தார்கள். ஆனால் கிரிஸ்தன் மட்டும் எதுவும் நடக்காதது போல ஆச்சிரமத்தில் இருந்து வெளியேறி சென்றான். சாபத்தால் பயந்துபோன யவன் குருவின் கால்களில் விழுந்து கதறி அழுதான். தன்னை மன்னித்து அருளவேண்டும் என்று கெஞ்சினான். 

அவனுடன் சேர்ந்த சாபம் உன்னை விடாது, நீ தவறான உறவில் பிறப்பதையும், தவறான வாழ்க்கை வாழ்வதையும் மாற்ற முடியாது, ஆனால் மரணம் மட்டும் அவனது மரணத்தை போல அசிங்கமாக அமையாது என்று வாக்களித்தார்.

யவனும் அதன்பிறகு ஆச்சிரமத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. அவ்வப்போது ஆச்சிரமத்திற்கு வெளியே நின்று குருவின் போதனைகளை கேட்டுவிட்டு செல்வான். ஆனாலும் அவனது விலைமாதர் வீட்டு மோகமும், திருடர்கள் மீதான ஈர்ப்பும் குறையவே இல்லை.

சில காலத்தின் பின்னர் இருவரும் மரணமடைந்தார்கள். குருவின் சாபத்தின் படி இருவரும் பாலைவன நாட்டில் தந்தை யார் என்று தெரியாமல், தவறான உறவில் பிறந்தார்கள். ஜென்ம சாபத்தால் பிறந்தவர்களுக்கு முற்பிறவியின் பொய் பேசும் குணம் மாறவில்லை. தாங்கள் தவறான உறவில் பிறந்தவர்கள் என்பதை மறைத்து தேவனால் பிறந்ததாக பொய்பேசி அலைந்தார்கள். அவர்களின் முன் ஜென்ம விருப்பம் போல விலைமாதர்கள், திருடர்கள், குடிகாரர்கள் என்று அவர்களின் கூட்டத்தை உருவாக்கினார்கள். விலைமாதர்களை திருத்துவதாக கூறி அவர்களிடம் சல்லாபித்து இருந்தார்கள். திருடர்களை திருத்துவதாக கூறி திருட்டு பணத்தில் குடி கும்மாளம் என்று வாழ்ந்தார்கள்.

இவர்களது கூட்டத்தின் அராஜகம் அதிகமாக மக்கள் மன்னனிடம் சென்று முறையிட்டார்கள். பின் அந்த நாட்டு படைகளால் கைதுசெய்யப்பட்ட கிரிஸ்தன், அரசரால் மரணதண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டான். யவன் தன் தண்டனையில் இருந்து தப்பித்து தலைமறைவு வாழ்க்கை நடத்தி தன் ஆயுளை முடித்தான்.




Thursday, 1 December 2022

கவுணவத்தை நரசிம்ம வைரவர்- வேள்வி தொடங்கிய வரலாறு

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில், கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கருகம்பனை என்னும் கிராமம்.

இலங்கையில் வேள்வி நடக்கும் கோயில்களில் பிரசித்தம் பெற்ற நரசிம்ம வைரவர் கோயில் இந்த கருகம்பனை கிராமத்தின் கவுணவத்தை பகுதியில்தான் உள்ளது. 

இலங்கையில் கரையோரப் பகுதிகளில் போர்த்துக்கேய கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு நிகழ்ந்த காலத்தில் யாழ்ப்பாண இராச்சியமும் கிறிஸ்தவர்கள் வசம் சென்றிருந்தது. முதலில் யாழ்ப்பாண இராச்சியத்தினை கைப்பற்றி அடிமைப்படுத்திய போர்த்துக்கேய கத்தோலிக்கர்கள், அந்த இராச்சியத்தில் உள்ள தமிழர்களின் ஆலயங்கள் அனைத்தையும் இடித்து தரைமட்டம் ஆக்கியிருந்தனர். தமிழர்களின் வழிபாட்டு உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டிருந்தது. ஆலயங்கள் இருந்த இடங்களுக்கு செல்வதோ வீடுகளில் தமிழர்கள் மத வழிபாடுகளில் ஈடுடுவதோ தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. அவ்வாறு வழிபடுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மிகக் கொடூரமாக கிறிஸ்தவர்களால் சித்திரவதை செய்யப்பட்டார்கள். அதனால் பல ஆயிரம் தமிழர்கள் இறந்தும் போனார்கள். இந்த அவலம் நூறு ஆண்டுகள் வரையில் தொடர்ந்தது.

பின் போர்த்துக்கேயரிடம் இருந்த இடங்களை ஒல்லாந்தர்கள் கைப்பற்றினார்கள். ஒல்லாந்தர்கள் கத்தோலிக்க கிறித்தவ சபையை அடியோடு வெறுக்கும் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ சபையினைப் சேர்ந்தவர்கள். அதனால் ஒல்லாந்தர் கைப்பற்றிய பின்னர் கத்தோலிக்க சபைகளைச் சேர்ந்தவர்களைத் தேடித் தேடி கொன்றொழித்தார்கள். அவ்வாறு கிறிஸ்தவ சபைகள் இரண்டும் தங்களுக்குள் மோதுண்ட காலத்தில், தமிழர்களின் வழிபாட்டு உரிமையை நசுக்கும் செயல்பாடுகள் குறைந்திருந்தது. அதனால் தமிழர்கள் மீண்டும் தங்களின் வழிபாடுகளை மேற்கொள்வது சாத்தியமானது. ஆனால் ஆலயங்களை அமைப்பதற்கு ஒல்லாந்து கிறிஸ்தவர்களும் அனுமதிக்கவில்லை.

தமிழ் மக்கள் தமது வழிபாட்டை மீட்க ஆர்வமாக இருந்தார்கள். ஆனால் நூறு ஆண்டுகளும், மூன்று நான்கு தலைமுறைகளும் கடந்துவிட்டதால், தமிழர்களின் பல ஆலயங்கள் இருந்த இடங்கள் அடையாளம் காணமுடியாமல் போனது. தமிழர்களின் ஆலயங்கள் இருந்த இடங்கள் பல கிறிஸ்தவ சர்ச்சுகளாக மாற்றப்பட்டிருந்தது. அவ்வாறு கிறிஸ்தவ சர்ச்சாக மாற்றப்படாத இடங்களில் உயிரை பணயம் வைத்து தமிழர்கள் வழிபாடு செய்து வந்தனர். அப்படி திருட்டுத்தனமாக வழிபாடு செய்யப்பட்ட இடங்கள் மட்டுமே அடையாளம் காணக்கூடியதாகவும் இருந்தது. கிறிஸ்தவர்கள் கண்களில் படாமல் உயிரைப் பணயம் வைத்து பற்றைக் காடு ஒன்றினுள் வழிபாடு செய்யப்பட்டு வந்த ஒரு ஆலயமே இந்த கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயம். 

அன்றைய நாளில் வழிபாடு என்பது வெறும் விளக்கேற்றுவது, பூக்கள் வைப்பது என்ற அளவிலேயே இருந்தது. கோயில் விழாக்கள் பாரம்பரிய பூசைகள் என்று எல்லாம் கைவிடப்பட்டு மறந்துபோய் இருந்தது. மக்கள் பலர் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த, கிறிஸ்தவர்களால் விரட்டப்பட்ட இடங்களில் மீண்டும் குடியேறினார்கள். காடுகளாக மாறிப்போன தமது நிலங்களை துப்பரவு செய்து விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள். கருகம்பனை கிராமத்திலும் அவ்வாறே மக்கள் பலர் மீண்டும் குடியேறினார்கள். தங்கள் முன்னோர்கள் வழிபட்ட, ஆலயம் இருந்த இடத்தினையும் துப்பரவு  செய்து வழிபடக்கூடிய இடமாக மாற்றினாரகள்.

அந்த கிராமத்தில் வாழ்ந்த மக்கள் அனைவருக்கும் பொதுவாக, வற்றாத நீருற்றுக் கிணறு ஒன்று இருந்தது. பொதுவாக உள்ள அந்த வற்றாத கிணறும் அதன் மூலம் செய்யப்படும் தோட்டமுமே அந்த கிராமத்திற்கு அடையாளமாகிப் போனது. கவுணவத்தை என்று அந்த பகுதிக்கு பெயர் வர அதுவே காரணமாக இருந்தது.(கவுணவத்தை என்றால் நீரூற்று தோட்டம்[பொதுவான] என்று பொருள்)

மக்கள் பலர் கருகம்பனை கிராமத்தில் குடியேறி விட்டார்கள், விவாசாயம் கால்நடை வளர்ப்பு என்று தமது பொருளாதாரத்தையும் மீண்டும் உருவாக்கிக் கொண்டார்கள். பழைய ஆலயம் இருந்த இடத்தினை துப்பரவு செய்து, பெரிய ஆலமரத்தின் கீழ் சூலம் வைத்து வழிபாடும் செய்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் வாழ்வில் தொடர்ந்து பிரச்சினைகளும், வேண்டாத சாவுகளும் வரிசையாக வந்துகொண்டே இருந்தது. சாவு என்றால் வயதானவர்கள் சாவது கிடையாது. இது இளமையில் சாவது. பெற்றவர்கள் இருக்க பிள்ளைகள் சாவது மிகக் கொடுமையானது. அங்கே நடந்தது அதுதான். பலர் அந்த வற்றாத கிணற்றாலும், சிலர் என்ன நடந்தது என்றே தெரியாமலும் திடீர் திடீரென்று ரத்தம் சிந்தி இறந்தார்கள். 

கிராமத்தில் யார் வீட்டிலும் மகிழ்ச்சி இல்லை. இத்தனை காலமும் கிறிஸ்தவர்கள் கொன்றார்கள். இப்போது ஏனென்றே தெரியாமல் சாகிறார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் வருத்தத்தில் ஆழ்ந்தார்கள்.

அவ்வாறு இருந்தபோது ஒருநாள் இந்தியாவில் இருந்து வந்த சித்தர் ஒருவர் எல்லோருடைய பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்வதாகவும், அவரிடம் சென்று பிரச்சினைகளை கூறினால் இதற்கு தீர்வு கிடைக்கலாம் என்றும் என்றும் ஊரவர்கள் கூடிக்கதைத்தார்கள்.

அவர்கள் அவ்வாறு கூடிக்கதைத்த மறுநாளே கருகம்பனை கிராமத்திற்கு  அந்த சித்தர் வந்தார். தாம் தேடிச் செல்ல நினைத்த போது சித்தரே தம்மை தேடிவந்தது இறைவன் செயல் என்று உணர்ந்தார்கள். ஊரவர்கள் ஒன்றுகூடி சித்தரிடம் சென்று கண்ணீர் சொட்டச்சொட்ட தமது மனக்கவலைகளை கொட்டினார்கள். சித்தர் எல்லோரும் சொல்வதைக் கேட்டுவிட்டு எதுவுமே பேசாமல் எழுந்து ஆலமரத்தடியில் இருக்கும் வைரவர் கோயிலை நோக்கி நடந்தார். ஊர் மக்களும் அவரைப் பின்தொடர்ந்து நடந்தார்கள். 

சூலத்தின் முன்னர் சம்மணம் போட்டமர்ந்த சித்தர் கண்களை மூடி தியானத்தில் மூழ்கினார். சிறிது நேரத்தின் பின்னர் கண்களைத் திறந்த சித்தர் பெரிய வளவு கனகராசாவை அழைத்து, "சொன்னதை நீயேன் செய்யவில்லை" என்று கேட்டார். கனகராசா புரியாமல் விழிக்க, "வைரவர் கனவில் வந்து சொன்னதை நீயேன் செய்யவில்லை?" என்று மறுபடி கேட்டார். 

ஊரவர்கள் எல்லோர் பார்வையும் கனகராசா மீது திரும்பியது. "வைரவர் என்ன சொன்னார் என்று சொல் கனகு" என்று பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது.  "என்ன நடந்தது கனகராசா, வைரவர் கனவில் வந்து என்ன சொன்னார் என்று சொல்" என்று கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

கனகராசா கண்ணீர் மல்க "வன்னியில் இருந்து கோழிச்சாவலுடன் வந்து வேள்வி விழா செய்யச் சொன்னார். எனக்கு எப்படி செய்வது, என்ன செய்வதென்று தெரியவில்லை. அதனால் யாரிடமும் சொல்லவில்லை, எதுவும் செய்யவில்லை. இதுதான் காரணம் என்று தெரிந்திருந்தால் என் இரண்டு பிள்ளைகளை பலிகொடுத்திருக்க மாட்டேன்" என்று வைரவர் கனவில் வந்து சொன்னதை சொல்லி கதறி அழுதார்.

வைரவர் இரண்டு முறை கனவில் வந்து சொன்னதும், கனவில் வந்து சொல்லிய சில வாரங்களுக்கு பின்னரே இரண்டு மகன்களும் இரத்தம் சிந்தி இறந்ததும் கனகராசாவின் நினைவுக்கு வந்தது. நாங்கள் இப்போது என்ன செய்வது சுவாமி, நீங்கள் தான் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று சித்தரை வணங்கினார். 

ஊர் மக்களுக்கு எதுவுமே புரியவில்லை. "நாங்கள் தினமும் வணங்கும் வைரவர் எதற்காக எங்கள் பிள்ளைகளை பலியெடுக்க வேண்டும். கனகராசாவிற்கு மட்டும் எதற்காக கனவில் வந்து சொல்ல வேண்டும். அவர் செய்யவில்லை என்றால் வேறு யாருக்காவது கனவில் வந்து சொல்லி இருக்கலாம் அல்லவா. அப்படி வைரவர் சொல்லி இருந்தால் நாங்களாவது செய்திருப்போம் அல்லவா?" என்று சித்தரிடம் அங்கலாய்தவாறு கேட்டார்கள்.

சித்தர் அவர்கள் எல்லோரையும் ஒருமுறை நிமிர்ந்து பார்த்தார். அனைவரும் பேச்சின்றி மௌனமாக நின்றார்கள். "உங்கள் பிள்ளைகளின் உயிர்களை எடுத்தது வைரவர் கிடையாது. அது ஒரு ஏவல் வாலாயம்" என்றார்.

"என்ன சொல்கிறீர்கள் சுவாமி? வாலாயம் உயிரை எடுக்கின்றதா? யார் ஏவினாரகள்? ஏன் ஏவினார்கள்?" என்று கிலேசத்துடன் கேட்டார்கள்.

"உங்களை மதமாற்றம் செய்ய வந்த அன்னிய ஆவி வழிபாட்டினர் மக்களை மாற்றுவதற்காக வாலாயங்களை ஏவினார்கள். இறந்து போன தீய மனிதர்களின் ஆவிகளையே அவர்கள் வாலாயங்களாக பயன்படுத்துகிறார்கள். அவைதான் மக்களை அச்சப்பட வைப்பதற்காகவும், தமது ரத்த வெறியை தீர்ப்பதற்காகவும் ரத்தப் பலியை உண்டுபண்ணுகின்றன"

"இதில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் சுவாமி?" என்று மக்கள் ஏக்கத்துடன் கேட்டார்கள்.

"கனவில் வந்து வைரவர் சொன்னதுபோல வருடம் தவறாமல் ரத்தப்பலி கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் அவர்கள் ஏவும் தீய ஆவிகளின் ரத்த வெறி அடங்கும். ஊர் கூடி பலிகொடுத்து வந்தால் தீய ஆவிகள் அச்சப்பட்டு விலகிவிடும். உங்கள் பிள்ளைகளின் உயிர்கள் பலியாகாமல் தப்பிக்கும், அவர்களின் மதமாற்ற முயற்சியும் தடைப்படும்" என்றார் சித்தர்.

"அப்படியானால் இந்த வைரவரை விட அவர்கள் ஏவிய வாலாயங்கள் சக்தி மிக்கவையா சுவாமி. இப்படி செய்யாதுவிட்டால் இந்த வைரவரால் எங்களைக் காப்பாற்ற முடியாதா? நாங்கள் செய்யும் செயல்கள் தான் தீய ஆவிகளை விரட்டுமா?"

"தெய்வங்களால் நேரடியாக வந்து உங்களைக் காப்பாற்ற முடியாது. உங்கள் வாழ்க்கைக்கு நல்வழிகாட்டவும், உயிர்களுக்கு தேவையான ஆற்றல்களை வழங்கவும், அபாயங்களை எதிர்கொள்ளும் அறிவை வழங்கவுமே தெய்வங்களால் முடியும். உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் வாழவேண்டும். தெய்வத்தின் வழிகாட்டுதலில் வாழ்ந்தால் அபாயங்களை எதிர்கொண்டு வாழ்வை மகிழ்வுடன் வாழலாம்"

"நல்லவர்கள் வாழும் சமூகத்தில் தானே கெட்டவர்களும் வாழுகிறார்கள்? அதுபோல் வழிகாட்டும் தெய்வங்கள் இருக்கும் அதே சூழலில்தான் வழிகெடுக்கும் ஆவிகளும் இருக்கின்றன. எம்மை சுற்றிலும் நாம் வழிபடும் தெய்வங்களும், நம்மை வழிகெடுக்க காத்திருக்கும் ஆவிகளும் உள்ளன."

"குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பார்கள். எவனொருவன் தெய்வத்தை வழிபட்டு அதைக் கொண்டாடுகிறானோ அவனைச் சுற்றி தெய்வம் காவல் நிற்கிறது. அவ்வாறு தெய்வத்தின் காவலை இழந்தவனை ஆவிகள் பற்றி வழிகெடுக்கின்றது. மக்கள் தெய்வங்களை வழிபட்டு கொண்டாடும் போது ஆவிகள் மக்கள் கூட்டத்தை விட்டு விலகி விடுகிறது."

இங்கு நடந்ததும் அதுதான். தெய்வங்களை வழிபட்டு அதன் காவலைப் பெற்றவர்களுக்கு எதுவும் ஆகவில்லை. இளமைத் துடிப்பில் தெய்வத்தை மறந்து இன்பத்தை நாடியவர்கள் ஆவிகளால் வழிகெடுக்கப்பட்டு பலியானார்கள். உங்கள் தெய்வ வழிபாடும் அதனால் உண்டாகும் காவலும் உங்கள் வாழ்வை மட்டுமே காப்பாற்றும். ஆனால் நீங்கள் செய்யும் வேள்விப் பலிபூசை ஆவிகளை விரட்டி ஒட்டுமொத்த மக்களையும் காப்பாற்றும்.

"இப்போது வேள்வி எதற்காக என்று புரிந்தது சுவாமி. இந்த ஆவிகளில் தூய ஆவிகளும் இருக்கும் தானே சுவாமி. அவை எமக்கு நல்லது செய்யாதா?"

"நல்ல விஷம் என்றால் என்ன? உடன் உயிரைப் போக்கக்கூடிய விஷம் தானே நல்ல விஷமாக இருக்க முடியும். அதுபோலத்தான் தூய ஆவி என்பதும். தவறான வாழ்வை வாழ்ந்து, வாழ்வை இடைநடுவில் முறித்து, செத்துப் போன தீய நடத்தையுள்ளவர்களின் உயிர்களே முக்தி அடைய முடியாமல், மறுபிறப்பும் கிட்டாமல் அலைந்து திரிகின்றன. அவையே ஆவிகள் எனப்படுகிறது. இதன்படி பார்த்தால் தூய ஆவி என்பது தீமைகளால் நிறைந்த, அவலச்சாவு அடைந்த தீயவனின் ஆவி என்று தானே அர்த்தம். நல்ல விஷம், தூய ஆவி இரண்டும் அதிகூடிய கெடுதலை தருவதாகக்தானே இருக்க முடியும்?"

"நல்வாழ்வை வாழ்ந்து, வாழ்வின் முழுமையை அனுபவித்து இறந்தவர்களின் உயிர்கள் முக்தி நிலையை அடைகின்றன. அவ்வாறு முக்தி நிலையை அடைந்த பின்னரும் தம் குலங்களின் நன்மைக்காக முக்தி நிலையை தள்ளிவைத்து தம் குலத்தை காத்து நிற்கின்றனர். அவர்களையே குலதெய்வம் என்று சொல்கின்றோம்"

"இங்கே குடிகொண்டு இருப்பவர் சாதாரண தெய்வம் கிடையாது. மாயவனின் நரசிம்ம அவதாரத்தையே அழித்து அவருக்கும் மோட்சம் அளித்த நரசிம்ம வைரவர். ஆனால் தெய்வங்கள் உணர்த்துவதை நேரடியாக உணரவும், அவை வழிகாட்டுவதை அறியவும் பலரால் முடிவதில்லை. எம் முன்னோர்களின் ஆன்மாக்கள் குலதெய்வங்களாக நின்று, தெய்வங்களுக்கும் எமக்கும் பாலமாக இருந்து தெய்வங்கள் உணர்த்துவதை உணரச் செய்கின்றனர்"

"இங்கே கனகராசாவிற்கு வழிகாட்டி நின்றதும், அவ்வாறான ஒரு குலதெய்வம் தான். அவருக்கு மட்டும் வைரவர் கனவில் வந்ததற்கும் அவரது குலதெய்வ அனுக்கிரகம்தான் காரணம்"

"அப்படியானால் எங்கள் முன்னோர்கள் யாரும் எமக்கு வழிகாட்டும் நிலையில் இல்லையா சுவாமி?"

"உங்கள் முன்னோர்களில் யாரும் நல்லவர்கள் இல்லை என்றோ, மோட்சத்தை அடைய தகுதியானவர்கள் இல்லை என்றோ சொல்ல முடியாது. இறந்த உங்கள் முன்னோர்களை நீங்கள் மறந்ததால் அவர்களின் ஆன்மாக்கள் தம் மோட்ச நிலையை நோக்கி சென்றிருக்கலாம். அன்னிய ஆட்சியாளர்களின் அராஜகத்தால் அவர்கள் உடலை எரிக்காமல், மண்ணில் புதைத்ததால் அவர்கள் மோட்சத்தை அடையாமல் நீண்ட காலமாக ஆவிகளாக அலையலாம். உங்களுக்கு வைரவர் தோன்றாமல் இருக்க இப்படி பல்வேறு காரணங்கள் இருக்கலாம்"

"நாங்கள் இப்போது என்ன செய்வது சுவாமி"

"நீங்கள் கனவில் வந்து வைரவர் சொன்னது போல வேள்வித் திருவிழாவை ஊர்கூடி செய்யுங்கள். உங்கள் துன்பம் அனைத்தும் நீங்கி இன்பம் விளங்கும். நீங்கள் விரும்பும் நற்காரியங்கள் அனைத்தும் கைகூடும்"

"வன்னியில் இருந்து கோழிச்சாவலுடன் வந்து தொடங்கவேண்டும் என்பது.." என்று ஊர்மக்கள் இழுத்தார்கள்

"கனகராசாவின் சொத்துக்கு பங்காளர் ஒருவர் வன்னியில் உள்ளார். அன்னியர் அராஜகத்தில் ஊரைவிட்டு ஓடியபோது வன்னிக்கு சென்று குடியேறி விட்டார். இந்த கோயில் உரிமையிலும் அவருக்கு பங்குண்டு. வன்னியில் இருந்து கோழிச்சாவல் கொண்டுவருவது என்பது அவரது சம்மதத்துடன், அவரது முதற்பங்களிப்புடன், அவருக்குரிய பங்கைக் கொடுத்து வேள்வி செய்ய வேண்டும் என்பதாகும். அவரை அழைத்து வந்து அவருக்குரிய பங்கைக் கொடுத்து அவர் இங்கேயே இருந்துவிட்டால் வன்னிக்கு சென்று வேள்வி தொடங்கத் தேவையில்லை"

"நானே சென்று அவர்களை அழைத்து வருகிறேன். அவர்கள் கேட்கும் பங்கை கொடுத்து விடுகிறேன்" என்று வார்த்தை தளதளக்க கனகராசா சொன்னார். 

"எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும், வைகாசி மாதம் வளர்பிறை முடிந்து வரும் முதலாவது சனிக்கிழமை நரசிம்மரை வதைத்து வைரவர் மோட்சமளித்தநாள். நரசிம்ம வைரவருக்கு உகந்த அந்த நாளிலேயே வேள்வியை நடத்துங்கள்" என்று ஆசீர்வதித்து சித்தர் அங்கிருந்து புறப்பட்டார். அந்த நரசிம்ம வைரவரே தம்மை காப்பாற்ற சித்தர் வடிவில் வந்து வழிகாட்டியாக மக்கள் மகிழ்ந்தார்கள். 

மக்கள் அனைவரும் அன்றே வேள்விக்கு தயாரானார்கள். ஒவ்வொரு வீட்டிலும் வேள்விக்கென்றே ஒரு கிடாய் வளர்க்க ஆரம்பித்தார்கள். அவ்வருட வேள்வி மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதன் பிறகு யாரும் பலிகொள்ளப் படவில்லை. மதமாற்ற கூட்டம் ஏவிய வாலாயங்கள் விரட்டப்பட்டு மக்கள் நின்மதியாக வாழ ஆரம்பித்தார்கள். 

அன்று முதல் எத்தனை தடைகள் வந்தபோதும், அரக்கர்கள் போல வந்து பலர் வேள்வியை தடுக்க முனைந்தபோதும் அவற்றை எல்லாம் வென்று வேள்வியை நிறைவேற்றியே வருகிறார்கள். அன்னியர்கள் இந்த மண்ணைவிட்டு நீங்கும் வரை வேள்வி தொடரும் என்று மக்கள் உறுதியாக கூறுகின்றனர். ஆவிகளை ஏவிவிடும் அரக்கர் கூட்டம் இந்த மண்ணை விட்டு நீங்கும் போது நரசிம்ம வைரவரே வேள்வியை நிறுத்து என்று கூறுவார். இது அந்த கிராமத்தில் உள்ள மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.


(மாயவனின் நரசிம்ம அவதார முடிவில், அவரை அழிந்து முக்திக்கு அருளிய சரப ரூபம் என்பது சிவனின் அறுபத்து நான்கு வைரவர் மூர்த்தங்களில் ஒன்றாகும். இந்த சிவனின் சரப வைரவ மூர்த்தமே நரசிம்ம வைரவர் எனப்படுகிறது)












Thursday, 24 November 2022

உயிர்த்தெழுந்த மன்மதன்-காமன் பண்டிகை வரலாறு

இதுவரையில் ஈரேழு உலகத்திலும் இப்படி ஒரு பெண் பிள்ளை பிறந்ததில்லை, அவ்வளவு அழகு. கோடி சூரியன்களின் பிரகாசமும், கோடி சந்திரன்களின் அமைதியும் அவள் முகத்தில் குடிகொண்டிருந்தது. அறிவு, அழகு என்று அனைத்திலும் அவளுக்கு நிகர் அவள் மட்டுமே. எந்த ஒன்றிலும் ஒப்பிட முடியாத தனித்தன்மையுடன் இருந்தாள் ரதி. ஈஸ்வரனுக்கும், பார்வதிக்கும் பிறந்த குழந்தையல்லவா அவள். அவளுக்கு ஏது குறைவிருக்கும்.

ரதி பருவ வயதை அடைந்து விட்டாலும் அவளை பெற்ற ஈஸ்வரனுக்கும், பார்வதிக்கும் அது தோன்றவே இல்லை. பரமாளும் கடவுள் என்றாலும் பெற்றவர்களுக்கு பிள்ளைகள் எப்போதும்  குழந்தைகள தானே. ஆனால் நாரதர் கண்களுக்கு அது உறுத்திக் கொண்டு இருந்தது. கைலாயத்தில் இருக்கும் பேரழகின் செய்தியைக் காவிக்கொண்டு ஆரோக்கியபுரத்திற்கு சென்றார்.

ஆரோக்கியபுரத்தின் அரசன் மன்மதன். மாயவனுக்கும் மகாலட்சுமிக்கும் மகனாக வைகுண்டத்தில் பிறந்தவன். ரதிக்காகவே பிறந்தவன் போல் அப்படி ஒரு ஆணழகன். இந்த ஈரேழு உலகத்தில் இவனால் சஞ்சலப்படாதவர் ஒருவர் கூட இல்லை. அப்படியான மன்மதன் தனக்கான நாடாக ஆரோக்கியபுரத்தை உருவாக்கி அதனை ஆட்சிசெய்து வருகிறான். 

மன்மதனிடம் வந்த நாரதர் ரதி தேவியின் பேரழகைப்பற்றிக் கூறி உனக்கு ஏற்றவள் அவள்தான், ஏன் உனக்கானவள் அவள்தான் என்றே வைத்துக் கொள் என்று கூறி ஆசையை தூண்டினார். எல்லோரையும் சஞ்சலப்பட வைக்கும் மன்மதனே இப்போது சஞ்சலம் அடைந்து நின்றான். ஒருபோதும் ரதியை காணாதவன் அவள் அழகை கற்பனையில் உருச்செய்து உருகிநின்றான். நாரதர் ஆரோக்கியபுரம் வந்த வேலை  முடிந்தது. அடுத்து வைகுண்டம் நோக்கி புறப்பட்டார்.

வைகுண்டம் வந்த நாரதர் தன் வேலையை அங்கேயும் ஆரம்பித்தார். "அங்கே மன்மதன் மனவேதனையில் இருக்கிறான், நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறீர்கள்" என்று பொடிவைத்துப் பேச்சை ஆரம்பித்தார். 

"சுற்றி வளைக்காமல் விசயத்திற்கு வாரும் நாரதரே.. என்ன கலகம் உண்டாக்க வந்தீர், மன்மதனுக்கு அப்படி என்ன மனவேதனை" என்று சிரித்துக் கொண்டே கேட்டார் மாயவன்.

"கலகம் ஒன்றும் இல்லை பிரபு, வரும் வழியில் ஆரோக்கியபுரத்திற்கு சென்றேன். மன்மதன் மணவயதை அடைந்தும் தனியாக இருக்கிறான். அவனுக்கு ஏற்ற ஒரே பெண் கைலாயத்தில் இருக்கும் எம்பெருமான் ஈஸ்வரனின் மகள் ரதி ஒருத்திதான். மன்மதனும் அவளை நினைத்தே மனம் உருகிக் கொண்டிருக்கிறான்" என்று வந்த விடயத்தை ஒரே மூச்சில் சுருக்கமாக சொல்லி முடித்தார்.

மன்மதன் மணவயதை அடைந்துவிட்டான் என்பது மாயவனுக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது. "நாரதரே.. நீர் சொல்வதும் சரிதான்.  ஈஸ்வரரிடம் சென்று பெண்கேட்டு வருவோம், இப்போதே புறப்படுவோம்" என்று சொல்லி நாரதரையும் அழைத்துக் கொண்டு மகாலட்சுமியுடன் புறப்பட்டார்.

கைலாயம் சென்றவர்கள் ரதியின் பேரழகைக்கண்டு சொக்கி நின்றார்கள். தங்கள் மகன் மன்மதனுக்கு ரதியை மணமுடித்து வைக்கவேண்டும் என்று ஈஸ்வரரிடம் வேண்டினார்கள். அதற்கு ஈஸ்வரரோ எனக்கு எந்த விருப்பு வெறுப்பும் கிடையாது. அது ரதியின் விருப்பம். அவள் சம்மதித்தால் திருமணம் நடக்கும் என்றார்.

ரதியை மன்மதனுக்கு மணமுடித்து வைப்பதில் பார்வதிக்கும் விருப்பம். அண்ணன் மகன் மன்மதனையே மணமுடிக்க வேண்டும் என்று ரதியிடம் கூறினார். அவள் தாய் சொல்லை மீறவில்லை. மன்மதனை திருமணம் செய்ய சம்மதித்தாள்.

மாசித் திங்கள் பதினெட்டாம் நாளில் திருமணம் செய்ய நாள் குறிக்கப்பட்டது. திருமண ஏற்பாடுகள் எல்லாம் கோலாகலமாக நடந்தது. கைலாயம், வைகுண்டம் மட்டுமல்லாமல் ஈரேழு உலகங்களும் விழாக்கோலம் பூண்டது. இதுவரையில் இப்படி ஓர் திருமணம் நடந்ததில்லை என்று சொல்லும் வகையில் ரதி மன்மதன் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த பின்னர் மன்மதன் ரதியுடன் ஆரோக்கியபுரத்திற்கு சென்றுவிட்டான். ஈஸ்வரரும் ஆழ்ந்த தியானத்தில்  மூழ்கிவிட்டார். உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் உலகியல் இன்பங்களில் மூழ்கிவிட்டார்கள்.

ஈஸ்வரரின் இந்த ஆழ்ந்த தியானத்தால் அனைத்து உலகங்களும் நிலைகுலைந்து போனது. சக்தியால் எந்த ஒரு செயலையும் ஒழுங்கு செய்ய முடியவில்லை. நாற்பத்தெட்டாயிரம் பிரம்மாக்களும் நாற்பத்தெட்டாயிரம் விஷ்ணுக்களும் செய்வதறியாது தவித்தனர்.

தேவர்கள் எல்லோரும் சென்று தேவேந்திரனிடம் முறையிட்டார்கள். உலகங்கள் அனைத்தும் இருளில் மூழ்கி சீரழிந்து நிற்கிறது. அவை அனைத்தும் சீராக இயங்க எப்படியாவது ஈஸ்வரரின் தியானத்தை கலைக்க வேண்டும் என்று வேண்டினார்கள். 

ஈஸ்வரரின் பார்வை பட்டால் மாத்திரமே இந்த உலகங்கள் அனைத்தும் சீர்பெறும், ஆனால் ஈஸ்வரரின் தியானத்தை யாரால் கலைக்க முடியும்.  அவ்வாறு சிந்தித்து கொண்டிருந்த இந்திரன் முன்பு நாரதர் வந்தார். மன்மதன் ஒருவனால் மாத்திரமே அது முடியும். மன்மதனை அழைத்து ஈஸ்வரரின் தியானத்தை கலைக்க வேண்டும் என்று சொல் என்றார்.

இந்திர சபைக்கு மன்மதனை அழைத்த இந்திரன், ஈஸ்வரரின் தியானத்தை கலைக்க வேண்டும் என்று வேண்டினார். ஸ்தம்பித்து நிற்கும் பிரபஞ்சங்கள் அனைத்தும் ஒழுங்காக இயங்க ஈஸ்வரரின் தியானத்தை கலைத்தே ஆகவேண்டும் அது உன்னால் மட்டுமே முடியும் என்றார். மன்மதனால் மறுக்க முடியவில்லை, சம்மதித்துப் புறப்பட்டான். விடயம் அறிந்த ரதி தேவி பதறிப்போய் மன்மதனைத் தடுத்தாள். ஈஸ்வரரின் தியானத்தை கலைத்தால் அவரின் சினத்தால் நீங்கள் அழிந்து போவீர்கள். தயவுசெய்து அந்த முயற்சியை கைவிட்டு விடுங்கள் என்றாள்.

மன்மதன் பிடிவாதமாக இருந்தான். நான் இந்திரருக்கு வாக்குக் கொடுத்து விட்டேன். கொடுத்த வாக்கை என்னால் மீற முடியாது. அதுதவிர ஈரேழு உலகங்களும் நன்மை அடையும் என்றால் என்னை இழக்கவும் தயாராக உள்ளேன் என்றான். ரதி எவ்வளவோ கெஞ்சியும், தடுத்தும் ஒன்றும் முடியவில்லை. 

மன்மதன் தன்னுடைய கிளிவாகனத்தில் ஏறி தென்றல் தேரில் புறப்பட்டான். மீன்கொடி பட்டொளி வீசிப் பறந்தது. கையில் கரும்பு வில், நாணாக தேன் வண்டுகள், ஐமலர் அம்புகள் என்று அவனொரு விசித்திரமான போர்வீரனாக காட்சி அளித்தான். படைகளும் ஆயுதங்களும் இல்லாத ஆரோக்கியபுரத்தில் இருந்து பேரெழில் மின்னும் ஒரு வித்தியாசமான தாக்குதலாளன். 

மாசி மாத முழுமதி நாளில் ஈஸ்வரரின் இருப்பிடத்தை அடைந்தான். அவரின் தியானத்தை கலைக்க ஏதேதோ செய்து பார்த்தான். ஆத்திரமூட்டும் வகையில் ஏகடியம் எல்லாம் பேசினான். ஆனால் எதற்கும் எந்த சலனமும் இல்லை. கடைசியில் தன் கரும்பு லில்லை எடுத்து மலர்க்கணைகளை நாணேற்றி அவர்மீது எய்தான். ஈஸ்வரரின் தியானம் கலைந்தது. அவர் நெற்றிக் கண்ணைத் திறந்தார்.  மன்மதன் அந்த அனலில் கருகி சாம்பலாகிப் போனான்.

தகவல் அறிந்து ரதியும், வானவர்களும், ஈரேழு உலகங்களில் உள்ளவர்களும் வருந்தினார்கள். மாயவன் இந்திரன் முதலான வானவர்களும் ரதியும் ஈஸ்வரரிடம் சென்றார்கள். மன்மதனை உயிர்ப்பித்து அருள வேண்டும் என்று வேண்டினார்கள். 

மன்மதன் இறந்த மூன்றாம் நாள், மாசித்திங்கள் முழுநிலவை அடுத்த மூன்றாம் நாள், ரதியின் கண்களுக்கு மட்டுமே மன்மதன் தெரிவான், வேறு எவர் கண்களுக்கும் அவன் தோன்றமாட்டான் என்று கூறி ரதியை வாழ்த்தி மன்மதனை உயிர்ப்பித்தார் ஈஸ்வரர். 

இறந்த மூன்றாம் நாளில் உயிர்பெற்று எழுந்தான் மன்மதன். அதுதான் அவர்களின் மணநாளும் கூட. மன்மதன் ரதியை அழைத்துக் கொண்டு மீண்டும் ஆரோக்கியபுரத்திற்கு சென்றான். மன்மதன் மீண்டும் உயிர்பெற்று எழுந்த செய்தியை அறிந்து ஈரேழு உலகங்களில் வசிப்பவர்களும் மகிழ்ந்தார்கள்.

இந்த நாளே மன்மதன் உயிர்த்தெழுந்த நாள் என்றும், ரதி-மன்மதன் திருமண நாள் என்றும் கொண்டாடப்படுகிறது. காமன் பண்டிகையின் கடைசி நாள் மன்மதன் உயிர்த்தெழுந்து ரதியுடன் மீண்டும் சேர்தல் என்பதுடன் முடிவடைகிறது.

வரலாற்று குறிப்புகள்:

*காமன்விழா மாசிமாத அமாவாசை தினத்தில் ஆரம்பித்து பௌர்ணமி முடிந்து மூன்று நாட்கள் வரையில் கொண்டாடப்படுகிறது.

*ஈஸ்வரரின் தியானத்தை கலைத்து அவரின் நெற்றிக் கண் அனலில் மன்மதன் சாம்பலான நாள் மாசிமாத பௌர்ணமி நாளாகும்.

*மாசிமாத பௌர்ணமியை அடுத்த மூன்றாம் நாள் ரதி-மன்மதன் திருமண நாள். அன்றுதான் மன்மதன் மீண்டும் உயிர்த்தெழுந்து ரதியினை அடைந்த நாள்.

*கிரேக்க, ரோமானிய நாகரிகத்தில் ஹெய்ரோஸ்/ஈரோஸ்/குபிட் என்று மன்மதனும் ,அப்ரோடைட், சைக் என்று ரதியும் குறிப்பிடப்படுகிறது.


தத்துவார்த்த குறிப்புகள்:

*ஈஸ்வரர் என்பது அறிவின் குறியீடு. அறிவு கண்களை மூடும் போது உலக ஒழுங்கு சீர்கெட்டு விடுகிறது.

*மன்மதன் என்பது காமத்தின் குறியீடு. காமம் தவறானது இல்லை என்றபோதும் அது வெளிப்படையாக மாறும் போது உலக ஒழுங்கு சீர் கெட்டுவிடும். 

*காமத்தை தவிர்த்து விட்டு அறிவை மட்டும் கொண்டு உலகம் இயங்க முடியாது. ஆனால் காமம் எல்லோருக்கும் தெரியாமல் உரியவர்க்கு மட்டுமே தெரிய வேண்டும்.

*உண்மையான அறிவு காமத்தை அழித்துவிடும்.

*ரதி என்றால் எல்லோராலும் விரும்பப்படுவது என்று பொருள். அறிவும் ஆற்றலும் எல்லோராலும் விரும்பப்படுவது. சிவன் சக்தி என்பது அறிவு ஆற்றல் என்பவற்றை குறிக்கும்.

*காமம் என்பது மாயையில் இருந்து தோன்றுவது. மாயவனின் மைந்தன் மன்மதன் என்பது காமம் மாயையில் இருந்து பிறப்பது என்பதாகும்.

*ஆரோககியபுரத்தின் அரசன் மன்மதன். ஆரோக்கியம் இல்லை என்றால் அங்கு காமம் தோன்றாது. ஆரோக்கியமாக இருக்கும் வரையிலேயே காமம் இருக்கும்.















Friday, 18 November 2022

சாதி-கீழ்சாதி

கிறிஸ்தவர்கள் வருவதற்கு முன்பு சாதி என்பதோ, சாதி என்ற வார்த்தையோ இந்த மண்ணில் இல்லை என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

சாதி என்ற சொல் சமஸ்கிருதச் சொல் என்றே பலரும் நம்பவைக்கப்பட்டுள்ளனர். உண்மையில் சாதி என்பது போர்த்துக்கீச மொழிச்சொல்.

இந்த மண்ணில் கிறிஸ்தவர்கள் வருவதற்கு முன்னர் தொழில் ரீதியான குடிகளும், பரம்பரை ரீதியான பாரம்பரிய முறைகளும் பின்பற்றப்பட்டு வந்ததே தவிர இன்று இருக்கும் சாதிய கட்டமைப்பு ஒருபோதும் இருக்கவில்லை. ஒருவன் தன் அறிவுக்கும் ஆற்றலுக்கும் அமைவாக தொழில்களை மாற்றும் சுதந்திரம் பெற்றவனாகவே இந்த சமூகத்தில் வாழ்ந்துள்ளான்.

இந்த மண்ணில் தோன்றிய இலக்கிய, இலக்கண ஆதாரங்கள் எல்லாம் பதினெட்டு குடிகளைப் பற்றி மட்டுமே பேசுகின்றன.

இன்று இருக்கும் பல்லாயிரம் சாதிகளும் தோன்றிய காலம் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பும், மதமாற்றமும் நிகழ்ந்த அன்னிய ஆட்சிக்காலமே

கிறிஸ்தவர்கள் இந்த நாட்டிற்குள் வரும்போது, பல்வேறு மொழிகளைப் பேசும் பதினெட்டு குடிகளும், பத்தாயிரத்திற்கும் அதிகமான இனக்குழுக்களும் இந்த மண்ணில் வாழ்ந்துள்ளன. 

கிறிஸ்தவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறும் காலத்தில் முன்பு இருந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான இனங்களில்; 1652 இனங்களே எஞ்சி இருந்தன. மீதமுள்ள பல்லாயிரம் இனங்கள் கிறிஸ்தவர்கள் ஆண்ட அந்த 400 ஆண்டுகளில் காணாமல் போய் விட்டன.

கிறிஸ்தவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு போது, அவர்கள் இந்த நாட்டிற்குள் வரும்போது இருந்த பதினெட்டு குடிகள் முறைமை காணாமல் போய், பத்து-இருபது உயர் சாதிகளும், பல்லாயிரம் கீழ் சாதிகளும் எஞ்சியிருந்தன.

இறைவனே சொன்னால் கூட கண்ணை மூடி ஏற்காமல் விவாதித்து நிரூபிக்க வேண்டும் என்று சொல்லும் இந்த மண்ணின் வழமை மறைந்து போய், யாரோ ஒரு அன்னியன் சொன்னவை எல்லாம் உண்மை என்று தலையில் தூக்கி அலையும் பெரும் அடிமைகள் கூட்டம் கிறிஸ்தவர்கள் வெளியேறும் போது உருவாகி இருந்தது.

கிறிஸ்தவர்கள் வரும்போது இருந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான இனங்களில், அவர்கள் போகும் போது 1652 இனங்கள் தான் எஞ்சி இருக்கிறது என்றால் மீதமுள்ள இனங்களுக்கு என்ன நடந்தது?

அவர்கள் வரும்போது இல்லாத பல்லாயிரம் சாதிகள், அவர்கள் இந்த நாட்டை ஆண்ட போது எப்படி உருவானது?

இந்த மண்ணில் வாழ்ந்த பல்லாயிரம் இனங்களுக்கு நடந்தது இதுதான். அவர்களின் பாரம்பரிய வாழ்வியல் அடையாளங்கள் சிதைக்கப்பட்டு, வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு கீழ்சாதிகள் ஆக்கப்பட்டார்கள்.

வாழ்வியல் அடையாளங்களை அழிக்கும் போதே, அந்த இனங்கள் அழிந்து, அவர்களின் மொழியும் இல்லாமல் போய்விடும். உலகம் முழுவதும் கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்கள் பல்லாயிரம் இனங்களை அழித்தது அவ்வாறுதான்.

இந்த மண்ணிலும் அன்னிய ஆட்சிக் காலத்தில் தங்களின் பாரம்பரிய வாழ்வியலை இழந்த மக்கள்; தமது மொழியையும், இன அடையாளத்தையும் தொலைத்து கீழ்சாதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்

தங்களுடைய மரபுவழி வாழ்வியலை தொலைந்தால், அந்த மக்கள் கூட்டம் இழிவான நிலைக்கு சென்றுவிடும்

தமிழர்களே!

எங்கள் இந்து வாழ்வியலை இழந்தால், எங்கள் சந்ததிகள் கூட நாளை கீழ்சாதிகள் என்ற இழிவு நிலையைத்தாங்கி, அன்னிய மொழிபேசியே வாழவேண்டும்.

எங்கள் சந்ததிகள் அவ்வாறு இழிவு நிலையில் வாழ வேண்டும் என்று நாம் விரும்ப முடியுமா?

சாதி என்பதும், சாதிய உயர்வு-தாழ்வும் கிறிஸ்தவர்கள் எம்மீது திணித்த அசிங்கம். அன்னிரால் உண்டான வம்சங்களும், அடிமைகளும் மட்டுமே அந்த அசிங்கத்தை தூக்கிச் சுமப்பார்கள்.

தமிழர்களாய் ஒன்றிணைவோம். எம் இந்து வாழ்வியலை காப்போம்.

இந்து மட்டுமே தமிழன்





Saturday, 5 November 2022

சிவன் சொன்ன ரகசியம்

மகாபாரத போர் முடிந்து கலியுகம் ஆரம்பமாகிய காலம். இந்த கலியுகத்தின் வாழ்வை எண்ணி மனிதர்கள், தேவர்கள், முனிவர்கள் என்று அனைவரும் கலங்கிங்கொண்டு இருந்தார்கள். விஸ்வாமித்திரர் மட்டும் எந்த சலனமும் இல்லாமல் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்துகொண்டிருந்தார். அவரது தவத்தின் பயனால் அவர்முன் சிவன் தோன்றினர். விஸ்வாமித்திரா எதற்காக இப்படி கடுந்தவம் புரிகிறாய், உனக்கு என்ன வேண்டும் கேள் என்று கேட்டார்.

ஈஸ்வரனை பணிந்த விஸ்வாமித்திரர் "பெருமானே இந்த கலியுகத்தின் வாழ்வை எண்ணி மனிதர்கள், முனிவர்கள், தேவர்கள் என்று அனைவரும் கலங்கி நிற்கிறார்கள். இந்த கலக்கத்தை போக்க அருள்புரிய வேண்டும். கலியுகத்திலும் தர்மம் மாறாமல் துன்பமின்றி வாழ அருள்புரிய வேண்டும்" என்று வேண்டினார்.

"விஸ்வாமித்திரா! உன் வேண்டுதலிலேயே அதற்கான தீர்வும் உள்ளது. யுகங்களை பற்றிக் கலக்கம் கொள்ளாதே, எந்த யுகமாக இருந்தாலும் அறம் தவறியவர்கள் அமைதியாக வாழமுடியாது, அவர்களுக்கு மெய்யின்பமும் கிட்டாது. மக்கள் தர்மத்தின்படி வாழ்ந்தால் அவர்களுக்கு துன்பம் கிடையாது. நீ கலங்கிநிற்க தேவையில்லை" என்றார்.

"ஈஸ்வரா அப்படியானால் ஏனைய யுகங்கள் போலத்தான் இந்த யுகமும் இருக்குமா? அப்படியானால் ஏன் கலியுகத்தைக் கண்டு எல்லோரும் பயப்படுகிறார்கள்?"

"உன் சந்தேகம் நியாயமானது, அவர்கள் பயப்படுவதற்கும் காரணம் உள்ளது. ஏனைய யுகங்களைவிட அதர்மிகள் அதிகரித்து இருப்பார்கள், தர்மம் என்பது கூட தனியான பெயராக அடையாளம் காட்டப்படும். தர்மத்தை காப்பதற்காக கடுமையாக போராட வேண்டி இருக்கும். தர்மத்தை குறிக்கும் பெயர் புதிது என்றும், அதனால் முன்பு தர்மம் என்ற ஒன்று இருந்ததே இல்லை என்றும் அதர்மிகள் வாதிப்பார்கள். வன்முறையில் அதர்மம் திணிக்கப்படும். தர்மத்தின் வழியில் வாழ்பவர்கள் அவமானப்படுத்தப்படுவார்கள். எது தர்மம் என்றே தெரியாத பெரிய மக்கள் கூட்டம் உருவாகி இருப்பார்கள்" என்றார்.

"பெருமானே! நீங்கள் மட்டுமே எல்லாம் அறிந்தவர், எது எப்படி நடக்கும் என்பதையும், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறினால் நாம் அதிலிருந்து தப்பிக்க வழி கிடைக்கும். அதற்கு நீங்கள் தான் அருளவேண்டும்"

வேண்டியவர்களுக்கு வேண்டியது எல்லாம் அருள்பவர் அல்லவா ஈஸ்வரன், அதனால் விஸ்வாமித்திரருக்கு எதிர்கால உண்மையை உரைத்தார். 

"அறிவாற்றல் கிடைக்கும் வழிமுறைகளையும், தர்மத்தின் அடிப்படைத் தத்துவங்களையும் மக்களுக்குப் பரப்பும் வழிமுறையை உருவாக்கு, காலத்தால் அவை அழிவதுபோல் தோன்றும், நேராக கூறும் கருத்து திரித்துக் கூறப்படும், குறியீடாக கூறும் கருத்து புரிந்து கொள்ளாமல் போகும், நீ உருவாக்கும் வழிமுறைகள் உன்னை வெறுப்பவர்கள் மூலமே பரப்பப்படட்டு காக்கப்படும். ஆனால் உரிய காலத்தில் அவை மீட்கப்பட்டு சரியான அர்த்தங்கள் மக்களுக்கு உணர்த்தப்படும்.

ஈஸ்வரா உரிய காலம் எது என்று கூறவில்லையே..?

"மனிதப் பிறவிகளை கடவுள் என்றும், தூதுவர் என்றும் நம்பும் அதர்மிகள் அதிகரித்து வருவார்கள். வாள்முனையிலும் வன்முறையிலும் அதர்மத்தை பரப்பும் அதர்மிகள் அன்பு, அமைதி என்று வேடம் தரிப்பார்கள். நீ உருவாக்கும் தர்மம் அன்று "இந்து" என்று பெயர் பெற்று நிற்கும். பெயர் புதிது என்பதால் தமது அதர்மமே பழமையானது என்றும் சரியானது என்றும் வாதிப்பார்ரகள். நீ வகுத்த வழிமுறையிலேயே அதர்ம சிந்தனைகளையும் பரப்ப முனைவார்கள்"

அதர்மிகள் அழிப்பது முடியாத காரியமா? அவர்களை வெல்வது எப்படி?

"தர்மம் ஒன்றுதான் அவர்களை அழிக்கும் ஆயுதம். மக்கள் ஒழுக்கம் தவறாமல் வாழவேண்டும், அறிவு பெற்று உழைப்பை நம்பி வாழவேண்டும், அப்போது அதர்மிகள் முற்றாக அழிந்து விடுவார்கள். உழைக்காமல் வாழவேண்டும் என்பவர்களும், ஒழுக்கமின்றி வாழ விரும்புபவர்களுமே அதர்மிகளாக மாறுகிறார்கள். உழைத்து வாழும் ஒழுக்கமுள்ள சமுதாயம் உருவாகும் போது கலியுகம் கூட மகிழ்ச்சி நிறைந்ததாக மாறிவிடும்" என்றார் ஈஸ்வரன்.

"சிவசிவா" என்று பாதம் பணிந்தார் விஸ்வாமித்திரர். 

சர்வம் சிவமயம்





Friday, 4 November 2022

நரசிம்ம வதம்-ஆன்மீக கதை

யுகங்கள் தோறும் திருமால் பலலட்சம் கோடி அவதாரங்களை எடுத்துள்ளார். இன்றும் எடுத்துக் கொண்டே இருக்கின்றார். இதில் முக்கியமான ஒரு அவதாரம் நரசிம்ம அவதாரம். மிகவும் உக்கிரமான திருமாலின் இந்த அவதாரமானது இரணியகசிபுவை அழிப்பதற்காக எடுக்கப்பட்டது. 

இரணியகசிபுவின் மகன் பிரகலாதன், தன்னை வணங்காமல் திருமாலை வணங்கியதால் கோபமுற்ற இரணியகசிபு பிரகலாதனை கொல்ல முனைந்தான். (உலகத்தில் உருவ வழிப்பாடிற்கு எதிராக பதியப்பட்ட முதலாவது வன்முறை இதுதான். தன்னை வணங்குதல் என்றால் இரணியகசிபுவை வணங்குதல் கிடையாது, நான் யார் என்று உணர்ந்து நானே கடவுள் என்று கருதும் நிலையே தன்னை வணங்குதல், இது ஏகான்மவாதம் எனப்படும். தவறாக புரிந்து கொள்ளப்பட்ட அத்வைதமே ஏகான்மவாதமாகும். இவர்கள் உருவங்களாக தோன்றும் மாயைகளை வணங்குபவர்களை மால் வழிபாட்டு மக்கள் என்று குறிப்பிட்டனர். மால் என்றால் மாயை, சிவனை உருச்செய்து வழிபட்டாலும் அது மால் வழிபாடுதான். இவ்வாறு உருவ வழிபாடு செய்த மக்களை ஏகான்மவாதிகள் தவறான வழிபாட்டை பின்பற்றுபவர்கள், மால் வழிபாட்டாளர்கள் என்று சொல்லி கொலை செய்தார்கள்)

சப்தரிஷிகளில் ஒருவரான ரிஷி காசியப்பருக்கு திருமாலின் அருளால் இரணிய கசிபு மற்றும் இரண்யட்சகன் என்னும் இரண்டு மகன்கள் பிறந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் அசுரர்களாக வளர்ந்தனர். அவர்களில் இரண்யட்சகன் பூமா தேவியை கட்டாயப்படுத்தி அசுர உலகத்திற்கு கடத்திச்சென்றான். அந்த தருணத்தில் அனைத்து தேவர்களும் பெருமாளிடம் காப்பாற்றும்படி வேண்டினர். வராக அவதாரமெடுத்த திருமால் தன் கொம்பால் இரண்யட்சகன் மார்பில் குத்தி அவனை வதைத்தார். பூமாதேவியை காப்பாற்றி அசுரர் உலகத்தில் இருந்த அசுரர்கள் அனைவரையும் வதைத்தார். தன் சகோதரனின் இறப்பை கேட்டு நடுங்கிய இரணியகசிபு தன் உயிரை பாதுகாக்க சிவபெருமானை நோக்கி தவம் இருக்க தொடங்கினான்.

இரணியகசிபு தன் தவத்தால் சிவபெருமானிடம் அவன் விரும்பும் வரத்தை பெற்றான். மரணமில்லா வாழ்வு சிவனைத் தவிர வேறு எவருக்கும் இல்லை என்பதால், தந்திரமாக சிவனையே ஏமாற்றுவதாக எண்ணிய இரணியகசிபு, தன் மரணம் மனிதனோ, மிருகமோ அல்லாத ஒருவனால் எந்தவித ஆயுதமும் இல்லாமல், பகலோ இரவோ இல்லாத நேரத்தில், பூமியிலும், வானத்திலும் இல்லாமல் நிகழவேண்டும் என்று வரம் கேட்டான்.கேட்கும் அடியவர்க்கு கேட்பதை எல்லாம் கொடுக்கும் சிவபெருமான் அவன் கேட்ட வரத்தையும் வழங்கினார்.

தான் கேட்ட வரம் கிடைத்துவிட்ட கர்வத்தால் இரணியகசிபு மூவுலகத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தான். தன்னை எதிர்ப்பவர்கள் அனைவரையும் துளியும் இரக்கமின்றி கொன்றான். இந்த சூழ்நிலையில்தான் இரணியகசிபுவிற்கு பிரகலாதன் என்னும் மகன் பிறந்தான். அவன் தன் தந்தையை போல அல்லாமல் திருமால் மீது அதிக பக்தி கொண்டவனாக இருந்தான்.

இரணியகசிபு எவ்வளவு சொல்லியும் கேட்காத பிரகலாதன் தொடர்ந்து திருமாலையே வணங்கினான். இதனால் தன் மகன் என்றும் பாராமல் அவனை கொல்ல உத்தரவிட்டான். இரணியகசிபுவின் வீரர்கள் எவ்வளவு முயன்றும் பிரகலாதனை ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியில் பிரகலாதனை தன் கைகளாலே கொல்வது என்று துணிந்தான் இரணியகசிபு.

பிரகலாதனை வதைக்க இரணியகசிபு முயன்றபோது அங்கு நரசிம்ம அவதாரத்தில் தோன்றிய திருமால் அவனை வதைக்க முயன்றார். இரணியகசிபுவை வீழ்த்திய நரசிம்மர் அவனை தூக்கி தன் மடியில் வைத்து தன் கூறிய நகங்களால் அவன் மார்பை பிளந்து கொன்றார். நரசிம்மர் மனிதரும் அல்ல மிருகமும் அல்ல இரண்டும் கலந்த உருவம், அவர் இரணியகசிபுவை வதைக்க பயன்படுத்தியது எந்த ஆயுதத்தையும் அல்ல தன் நகங்களை, அவர் கொன்ற இடம் வானமும் அல்ல பூமியும் அல்ல அவரின் மடியில், அவர் இரணியகசிபுவை வதைத்த நேரம் பகலும் அல்ல இரவும் அல்ல இரண்டுக்கும் இடைப்பட்ட மாலை நேரம். இதனால்தான் நரசிம்மரால் இரணியகசிபுவை வதைக்க முடிந்தது.

நரசிம்மரின் கோபம் மூவுலகத்தினரையும் அஞ்சி நடுங்கும்படி செய்தது. அவரின் கோபம் அனைவரையும் அழிக்க கூடியதாக இருந்தது. இதனால் உலகத்தை காப்பாற்ற அனைவரும் சிவபெருமானை வேண்டினர். எனவே சிவபெருமான் வீரபத்திரர் மற்றும் பத்ரகாளியை நரசிம்மமரை அமைதிப்படுத்த அனுப்பிவைத்தார்.

வீரபத்திரர் மற்றும் பத்ரகாளி இருவரும் எவ்வளவோ முயற்சித்தும் நரசிம்மரை வீழ்த்தவோ, அமைதிப்படுத்தவோ இயலவில்லை. ஆனால் நரசிம்மர் அவர்களையும் வதைக்க துணிந்தார். எனவே சிவபெருமான் அவர்களை காப்பாற்றி நரசிம்மரை அமைதிப்படுத்த எண்ணினார்.

நரசிம்மரை கட்டுப்படுத்த தூய உருவைவிட்டு பேரழிவு உருவமான சரபா உருவத்தில் தோன்றினார் சிவபெருமான். சரப உருவம் என்பது மிகப்பெரிய தோன்றும் உருவமாகவும், நிறைய அங்கங்களுடனும், பறக்க இறக்கைகளுடனும் இருந்தது. இந்த பயங்கர உருவத்தில் தோன்றிய சிவபெருமான் நரசிம்மரை அந்த இடத்தில் இருந்து தூக்கிக்கொண்டு பறந்து சென்று மயக்கமடைய செய்தார்.

மயக்கம் தெளிந்த நரசிம்மர் தன் தவறை உணர்ந்து சிவபெருமானிடம் சரணடைந்தார். திருமாலின் ஒவ்வொரு அவதாரமும் மரணத்தை தழுவ வேண்டியது கட்டாயம். தன் அவதாரத்தின் நோக்கம் முடிந்தது என்று சொல்லிய நரசிம்மர் தம்மை வதம்செய்து அருளும்படி சிவபெருமானிடம் வேண்டினார். சிவபெருமான் நரசிம்மரை வதம் செய்து அவரையும் தன் பதத்தில் இணைத்து அருள்புரிந்தார்.



புலிகள் இயக்கத்தின் அழிவுக்கு காரணம் என்ன?

இயக்கத்தில் கத்தோலிக்க ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது பிரபாகரனின் தாழ்வு மனப்பான்மையா? புலிகள் இயக்கத்தின் வெள்ளிக்கிழமைகளில் மாட்டிறைச்சி உணவு,...