Saturday, 6 September 2025

புலிகள் இயக்கத்தின் அழிவுக்கு காரணம் என்ன?

இயக்கத்தில் கத்தோலிக்க ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது பிரபாகரனின் தாழ்வு மனப்பான்மையா?

புலிகள் இயக்கத்தின் வெள்ளிக்கிழமைகளில் மாட்டிறைச்சி உணவு, சிலுவை அணியலாம் திருநீறு ருத்ராட்சம் அணியக்கூடாது போன்ற இந்து விரோத செயற்பாடுகள் பற்றியும், ஆனாலும் பிரபாகரன் பக்தி மார்க்க நம்பிக்கை உடையவர், முருக பக்தர் என்றும் பார்த்தோம். புலிகள் இயக்கத்தின் தலைவராக பிரபாகரனே உலகால் அறியப்படுகின்றார். அப்படி இருக்க இவை எல்லாம் எப்படி நடந்தது என்று பார்ப்போம்.

புலிகள் இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் தலைவர் என்று இல்லாமல் மத்திய குழு ஒன்றினால் முடிவுகள் எடுக்கப்படும் அமைப்பே இருந்தது(கம்யூனிச பொலிட் பீரோ முறை போல). பின்னர் அதனிலும் சில சிக்கல்கள் ஏற்பட தலைமை ஒன்று தேவை என்றும் அதற்கான தகைமை உள்ள ஒருவர் வேண்டும் என்றும் முடிவு செய்தார்கள். அவ்வாறு தம்மிடம் தகைமை உள்ள யாரும் இல்லை என்று அழைத்து வந்து தலைவர் ஆக்கப்பட்டவர்தான் உமாமகேஸ்வரன். பின்னாளில் புளொட் இயக்கத்தின் தலைவராக அறியப்படும் உமாமகேஸ்வரன் தான் முதலில் புலிகள் இயக்கத்திற்கு தலைவராக இருந்தார்.

புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்கள் பலரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் ஆங்கிலம் என்பதை அறிவு என்பதாக கருதும் மங்கிய மனநிலையிலேயே இருந்தனர். தமது தலைவர் ஆங்கில புலமை மிக்க ஒருவராக இருக்க வேண்டும் என்று கருதினார்கள். அதனால்தான் நில அளவையாளராக பணியாற்றிய, அரசியல் கட்சிகளுடன் தொடர்புள்ள, ஆங்கில புலமையுள்ள உமாமகேஸ்வரனை தலைவர் ஆக்கினார்கள். ஆனால் பிரபாகரன் அதனை உள்ளூர விரும்பவில்லை. பிரபாகரன் தானே தலைவராக இருக்கவ விரும்பினார். ஆனால் தன் கல்வித் தகைமை மீதான தாழ்வு மனப்பான்மையில் காட்டிக் கொள்ளாமலேயே இருந்தார்.

இரண்டு யாழ்ப்பாணத்தவர்கள் ஒத்த சிந்தனையில் செயற்படுவது என்பது முடியாத காரியம். அல்லது மிகக் கடினமான விடயம். புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. பிரபாகரனும் அதற்கு விதிவிலக்கல்ல. 

பிரபாகரன் எட்டாம் வகுப்புவரை மட்டுமே பாடசாலை சென்ற ஒருவர். பள்ளிக் கல்விக்கும் அவருக்கும் சற்று தூரம் அதிகம் எனலாம். தமிழகத்தில் கருணாநிதி ஈவேரா போன்றவர்களும் எட்டாம் வகுப்பை தாண்டாத தலைவர்கள் தான். ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தாமல், தம்மை மேதைகள் போல காட்டிக் கொண்டு, மக்களையும் கடைசி வரை ஏமாற்றி நம்பவைத்தார்கள். ஆனால் பிரபாகரன் அவ்வாறு இல்லை. மஹாபாரதத்தில் பார்வை இல்லை என்று கூறி முடியுரிமையை இழந்த திருதராஷ்டிரனின் மனநிலையிலேயே, கல்வித் தகைமையையும், ஆங்கில புலமையையும் காட்டி தான் விரும்பிய தலைமை பதவி மறுக்கப்படதை கருதினார்.

மத்திய குழுவை விடுத்து தனித்த தலைமை வேண்டும் என்று முதலில் கோரிக்கை வைத்தவர் பிரபாகரன் தான். தான் தலைமை தாங்க வேண்டும் என்பதற்காகவே அவர் அவ்வாறு கோரினார். ஆனால் ஏனையவர்கள் அதனைப் புரிந்து கொள்ளாமல் அல்லது தகுதியை காட்டி புறந்தள்ளி உமாமகேஸ்வரனை தலைவர் ஆக்கிவிட்டார்கள். பிரபாகரன் உமாமகேஸ்வரனை அப்புறப்படுத்தி தலைமைக்கு வர விரும்பினார். அவ்வாறே பின்னர் தலைமை பொறுப்பையும் எடுத்துக் கொண்டார். பிரபாகரன் உமாமகேஸ்வரன் மோதலுக்கும் பிரிவுக்கும் ஊர்மிளா காரணமாக கூறப்பட்டாலும் அடிப்படை இதுதான். 

பிரபாகரன் தலைமைக்கு வர ஆசைப்பட்டாரே தவிர, அதற்கான தகைமையும் திறனும் தனக்கு இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையிலேயே அவர் இருந்தார். சற்று நெருங்கிப் பழகிய, அனுபவமும் அறிவும் உள்ள பலரும் இதனை அறிந்து இருக்கிறார்கள்.

போராட்ட ஆரம்ப காலத்தில் புலிகளுக்கு அரசியல் ரீதியான அறிவு இல்லை என்பதால், ஈரோஸ் அமைப்பின் இராணுவ பிரிவாக புலிகள் அமைப்பை மாற்ற வேண்டும் என்றும், ஈரோஸ் அமைப்பு அரசியல் தலைமைத்துவத்தை கொடுக்க வேண்டும் என்றும் புலிகளின் மத்திய குழுவில் விவாதிக்கப்பட்டது. 

பிரபாகரன் தலைமைக்கு பொருத்தமானவர் இல்லை, அவருக்கு அரசியல் ரீதியான எந்த புரிதலும் அறிவும் இல்லை என்று தொடர்ந்து வலியுறுத்திய, மத்திய குழு உறுப்பினர் பற்குணம் எனப்படும் சரவணனை, பிரபாகரன் கொன்றது எல்லாம் ஆரம்ப கால வரலாறுகள்.

இவ்வாறான நிலையில் தான் புலிகள் அமைப்புடன் அன்ரன் பாலசிங்கம் எனப்படும், அன்ரன் ஸ்ரனிஸ்லஸ் பாலசிங்கம் தொடர்புக்கு வருகிறார். இவர் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த கத்தோலிக்க கிறித்தவர். முலாட்டோ இனத்தைச் சேர்ந்தவர். இவர் அன்றைய அனைத்து போராட்ட இயக்கங்களுடனும் தொடர்பில் இருந்தவர். ஈரோஸ் அமைப்பின் மூலமாக பிரபாகரனுடன் தொடர்பை உண்டாக்கி பிரபாகரனை தன் வசப்படுத்திக் கொள்கிறார். பிரபாகரன் விரும்பிய வகையில் அவருக்கு ஏற்றவாறு தன்னைக் காட்டிக் கொள்கிறார். தன்னை முன்னிலைப்படுத்தி காட்டாமல் பிரபாகரனை முன்னிலைப்படுத்தி தன் விருப்பங்களை கட்டளைகளை பிறப்பித்து கொள்கிறார்.

அன்ரன் பாலசிங்கத்தின் ஆங்கில புலமை, மார்க்சியக் கருத்துக்கள், அரசியல் ரீதியான கருத்துக்கள், பன்னாட்டு அரசியல் தொடர்புகள், தன்னை முன்னிலைப்படுத்தாமல் பிரபாகரனை முன்னிலைப்படுத்தி செயற்படும் அணுகுமுறை என்பவற்றால் பிரபாகரன் கவரப்படுகிறார். தன் தேவைக்கும் விருப்பத்திற்கும் பொருத்தமான நபர் என்று முடிவு செய்கிறார். தன்னிடம் இல்லாத அறிவும் ஆற்றலும் அவரிடம் இருப்பதாக பிரபாகரன் கருதுகிறார். ஆயுதங்கள் மீதும், ஆயுத வழிமுறைகள் மீதும் மட்டுமே நாட்டம் கொண்ட பிரபாகரன், தனது அரசியல் ரீதியான குறைபாடுகளை அன்ரன் பாலசிங்கம் மூலம் தீர்த்துக் கொள்ள முடிவு செய்கிறார்.

அன்ரன் பாலசிங்கம் கிழக்கு மண்ணினை சேர்ந்தவர் என்பதால் கல்வி ரீதியாக மற்றவரை மட்டம் தட்டும் யாழ்ப்பாணிய மனோபாவம் இன்றி, மனம் கோணாதவாறு பிரபாகரனிடம் நடந்து கொள்கிறார். அன்று முதல் புலிகள் அமைப்பின் யுத்தம் சாராத அனைத்து முடிவுகளையும் எடுக்கும் நபராக, புலிகள் அமைப்பின் உயர் அதிகாரம் உடையவராக மாறிவிடுகிறார்.

கிறிஸ்தவர்கள் உலகில் எந்த நாட்டில் எந்த பதவியில் இருந்தாலும், அவர்கள் கிறிஸ்தவர்களாகவே இருப்பார்கள். அன்ரன் பாலசிங்கமும் அதில் இருந்து விலகவில்லை. அன்ரன் பாலசிங்கம் குடும்பம் கிழக்கு மாகாணத்தில் செல்வாக்கு மிக்க தீவிரமான கிறிஸ்தவ குடும்பம். அவர் தன்னை மார்க்சிய வாதியாக ஆரம்பத்தில் அடையாளப்படுத்திக் கொண்டவர் என்றாலும், அவரது தீவிர கத்தோலிக்க கிறிஸ்தவ அடையாளத்தை மரணம் வரையில் கைவிடவில்லை. 

புலிகள் இயக்கத்தின் தலைவர் எனப்பட்ட பிரபாகரன் போர் மற்றும் ஆயுத நடவடிக்கைகளில் கவனம் செலுத்த, அமைப்பின் கட்டமைப்பு, கொள்கை முடிவுகள், அமைப்பின் நடைமுறைகள் அனைத்தையும் அன்ரன் பாலசிங்கமே முடிவு செய்கிறார். கத்தோலிக்க சபையினரும் தமது இலக்குகளை எட்டுவதற்கான வழிமுறைகளை அன்ரன் பாலசிங்கம் மூலமாக புலிகள் இயக்கத்திற்குள் கொண்டு வருகின்றனர்.

புலிகள் இயக்கத்தின் வெள்ளிக்கிழமைகளில் மாட்டிறைச்சி சாப்பாடு, சிலுவை அணியலாம் திருநீறு ருத்ராட்சம் அணியக்கூடாது போன்றவைகளை எல்லாம், புலிகள் இயக்கத்திற்குள் ஊடுருவி இருந்த கத்தோலிக்க லாபியே அன்ரன் பாலசிங்கம் மூலமாக செய்தது எனலாம். 

பிரபாகரனின் எதிர்ப்பாளர்கள் பலரும், பிரபாகரன் முட்டாளல்ல அவர் புத்திசாலி வேண்டும் என்றே தான் இந்துமத எதிர்ப்பில் ஈடுபட்டார் என்று நினைக்கின்றனர். ஆனால் பிரபாகரனின் ஆதரவாளர்கள் பலரும் பிரபாகரன் இந்த சூழ்ச்சியை அறிந்திருக்கவில்லை அவர் அறியாமையில் இருந்தார் என்று நினைக்கின்றனர். இது ஒரு நகை முரணான அணுகுமுறையாகவே உள்ளது. பிரபாகரனின் ஆதரவாளர்கள் அவரை முட்டாள் என்று கருதுகின்றனர். பிரபாகரனின் எதிர்ப்பாளர்கள் அவரை புத்திசாலி என்று கருதுகின்றனர்.

கத்தோலிக்க கிறித்தவ சபையின் சூழ்ச்சியையும், கத்தோலிக்க சபையின் முகவரான அன்ரன் பாலசிங்கத்தின் துரோகத்தையும், தான் முழுதாக ஏமாற்றப் பட்டத்தையும் பிரபாகரன் 2004 களின் பின்னர் தான் உணர்ந்து கொள்கிறார். அன்ரன் பாலசிங்கம் மீது கோபப்பட்டார், திட்டினார், ஆத்திரத்தில் கொதித்தெழுந்தார். ஆனால் அப்போது காலம் கடந்து போயிருந்தது. அது அவருக்கு சுடலை ஞானமாகவே இருந்தது.

அனைத்தும் அவரது கைகளை மீறி போயிருந்தது.  புத்தி பேதலித்து தூக்கம் தொலைத்து உழலும் நிலைக்கு தள்ளப்பட்டார். தன் தாழ்வு மனப்பான்மையில் பெயரளவில் தலைவராக இருந்து கொண்டு, தலைமை பொறுப்பையும், முடிவெடுக்கும் அதிகாரத்தையும் அன்ரன் பாலசிங்கத்திடம் கொடுத்ததற்காக மிகவும் வருந்தினார். ஆனால், காலமும் கர்ம வினைகளும் அவரைச் சூழ ஆரம்பித்தது. அது தன் முடிவுரையையும் எழுதிக் கொண்டது.  

போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து மறைவிடங்கள், காடுகள், பதுங்கு குழிகள் என்பவற்றில் மட்டுமே பெரும்பான்மை நேரத்தை செலவிட்ட பிரபாகரனுக்கு, மக்களதும் சமூகத்தினதும் தொடர்பு இல்லாமலேயே இருந்துள்ளது. பாதுகாப்பு காரணங்களை காட்டி அவர் தனியான ஒரு உலகத்திற்குள் சிறைப்பட்டுக் கொண்டார், அல்லது அவரைச் சூழ்ந்திருந்த லாபிகளால் சிறை வைக்கப்பட்டார். புலிகளின் முதல் நிலை தளபதிகள் பலரும் கூட பின்னர் இந்த நிலைக்கு சென்றுவிட்டார்கள். 

தம்மை அணுகுவதற்கான, தகவல்களை பெறுவதற்கான வழிகளுக்கு ஓரிருவரை மட்டுமே சார்ந்திருக்கும் நிலையில் இருந்தார்கள். அவர்கள் விரும்பும் நபர்கள் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும், அவர்கள் விரும்பும் தகவல்கள் மட்டும் பிரபாகரனை, முதல்நிலை தளபதிகளை சென்று சேரும் என்ற நிலையே இருந்தது. சமூகத்தின் உண்மை தன்மையை எடுத்துக் கூறக் கூடிய யாரையும் பிரபாகரன் அணுகும் சூழலே அன்று இருக்கவில்லை.

எது தர்மம் எது அதர்மம் என்று எடுத்துக் கூறி பிரபாகரனை திருத்த கூடிய வழிநடத்த கூடிய யாரையும் பிரபாகரன் அருகில் வைத்திருக்கவில்லை, அல்லது அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் வைத்திருக்க விடவில்லை.  தர்மத்தில் இருந்து வெகுதூரம் விலகி புலிகள் செயற்பட்டதற்கு அதுவே காரணம் ஆனது. பின்னாளில் அவர்களின் முடிவுக்கும் அதுவே என்று கூறலாம். 

"அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு" என்கிறார் வள்ளுவர். அந்த உண்மை இங்கே உறுதிப்படுத்தபட்டுள்ளது.





புலிகளுக்கும் கிறிஸ்தவ சபைகளுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு என்ன

அதற்கு முன், புலிகளின் போராட்டத்தை கிறிஸ்தவர்கள் ஆதரித்தார்களா? இல்லையா என்று பார்க்க வேண்டும்.

ஆம், இல்லை என்று ஒரிவரியில் இந்த கேள்விக்கான பதிலை கூறிவிட முடியாது. ஏனென்றால் கிறிஸ்தவர்கள் என்பது ஒரு பொதுவான அடையாளமாக காட்டப்படுகிறதே அன்றி கிறிஸ்தவர்கள் என்று தனியான ஒரு மதம் ஒரு சமூகம் இங்கே கிடையாது. அவர்களுக்குள் ஆயிரம் பிரிவுகள் ஆயிரம் சிக்கல்கள். 

இலங்கையில் உள்நாட்டு போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இலங்கை அரசியலில் செல்வாக்கு செலுத்தும் அமைப்புகளாக ஆங்கிலிக்கன், மெதடிஸ்த கிறிஸ்தவ சபைகள் இருந்தன. இதனை முன்பும் பார்த்திருக்கிறோம். ஏற்கனவே செல்வாக்கு செலுத்திய இந்த பிரிவுகள் தமது அந்த நிலையை தொடரத்தான் விரும்பினவே அன்றி அதனைக் குழப்ப விரும்பவில்லை. அதனால்தான் புலிகளின் போராட்டத்தையும் சரி ஏனைய போராட்ட இயக்கங்களையும் சரி ஆரம்பத்திலேயே அழிக்க விரும்பினார்கள். அடியோடு இல்லாமல் செய்ய வேண்டும் என்றும் விரும்பினார்கள்.

போராட்டத்தை எதிர்த்த காரணத்துக்காக, புலிகளால் அல்லது ஏனைய போராட்ட அமைப்புக்களால் கொல்லப்பட்ட ரஜனி திரணகம, ஆல்பிரட் துரையப்பா போன்றவர்கள் பலரும் ஆங்கிலிக்க மெதடிஸ்த கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். குறித்த இரண்டு கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்தவர்களும் அவர்களுடன் தொடர்புபட்ட நபர்களுமே ஆரம்ப காலத்தில் போராட்டத்தை எதிர்த்த நபர்களாக உள்ளனர். 

ஏனைய போராட்ட இயக்கங்கள் கம்யூனிச நாத்திக கோசங்களை முன்னிலைப்படுத்திய போதிலும், புலிகள் அவ்வாறு இல்லாமல் தமது இந்து அடையாளத்துடன் தொடர்ந்ததால் கிறிஸ்தவ சபைகள் பலவும் அன்று புலிகளையே அதிகமாக எதிர்த்தார்கள். அச்சத்துடன் பார்த்தார்கள். புலிகளின் ஆரம்பகால மத்திய குழுவில் பிராமணர் ஒருவர் இருந்ததும் அவர்களின் எதிர்ப்புக்கான இன்னொரு காரணமாக நிச்சயம் இருந்திருக்கும். 

அன்றைய காலத்தில் பெரிதும் செல்வாக்கு இன்றியும் ஆபிரிக்க ஐரோப்பிய கலபினமான முலாட்டோ இனத்திடம் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய கத்தோலிக்க சபைகளும் புலிகளையோ ஏனைய போராட்ட அமைப்புக்களையோ கண்டுகொள்ளவில்லை. 

இந்த கத்தோலிக்கர்கள் என அடையாளப்படுத்திக் கொள்ளும் முலாட்டோ இனத்தவர்கள், இலங்கையின் கரையோரப் பகுதிகளில் செறிந்து வாழ்ந்தாலும்,  பிரபாகரனின் கிராமமான வல்வெட்டித்துறையிலோ அதனை அண்மித்த கிராமங்களிலோ செல்வாக்கு இன்றியே இருந்துள்ளனர். புலிகளின் தலைவர் பிரபாகரன் கரையோர கரையார் சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும், வல்வெட்டித்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள கரையோர கிராமங்கள் பலவும் இந்து கிராமங்களாகவும் முலாட்டோக்கள் மிகவும் குறைவாக இருந்த காரணத்தாலும் கத்தோலிக்க ஆதிக்கம் புலிகள் இயக்கத்தின் மீதும் பிரபாகரன் மீதும் ஆரம்ப காலத்தில் இல்லாமலேயே இருந்துள்ளது.

புலிகள் இயக்கம் தனது ஆரம்ப காலத்தில் தனிமனித ஒழுக்கம், குடும்ப பின்புலம், சாதி என்பவற்றை ஆராய்ந்தே நபர்களை இணைந்தார்கள். ஆனால், பின்னாளில் தமது அமைப்புக்கு ஆட்சேர்ப்பதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி பலரையும் இணைத்த போது, யாழ்ப்பாணத்தில் முலாட்டோக்கள் அதிகமாக வாழும் மேற்கு கடற்கரை பகுதிகளில் இருந்தும், மன்னார் கரையோர பகுதிகளில் இருந்தும், திருகோணமலையில் பத்தாம் நம்பர் போன்ற பகுதிகளில் இருந்தும் இந்த கத்தோலிக்க முலாட்டோ இனத்தவர்கள் பலர் புலிகள் இயக்கத்திற்குள் இணைந்து கொண்டார்கள். இந்த பரவலான ஆட்சேர்ப்பு மாற்றமே பின்னாளில் புலிகள் இயக்கத்தில் ஏற்பட்ட கத்தோலிக்க ஆதிக்கத்திற்கும் செல்வாக்கிற்கும் காரணமாக அமைந்தது எனலாம்.

புலிகள் இயக்கம் மற்றும் ஏனைய போராட்ட இயக்கங்களின் எழுச்சியை விரும்பாத ஆங்கிலிக்கன் மெதடிஸ்த சபைகள் இறுதிவரை அவற்றை அழிப்பதில் மட்டுமே கங்கனம் கட்டி செயற்பட்டு வந்தன. இலங்கை அரசியலில் இருந்த தமது மேலாதிக்கத்தை இந்த போராட்ட இயக்கங்கள் சிதைத்துவிட்டன அல்லது கேள்விக்கு உட்படுத்தி விட்டன என்பதே அவர்களது கோபத்திற்கும் வெறுப்பிற்கும் காரணமாக இருந்தது.

அதனால்தான் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராட கூடாது என்பதை வேறு வடிவிலான பிரச்சாரமாக அவை மேற்கொண்டு வந்தன. மெதடிஸ்த கிறிஸ்தவ சபை தமது இலங்கை இவாஞ்சலிஸ்ட் கூட்டமைப்பில்(SLCEA) உள்ள கிறிஸ்தவ சபைகள் ஊடாக மதமாற்றத்தை தூண்டி புதிதாக மதம் மாறிய கிறிஸ்தவர்களை போராட்டத்திற்கு எதிராகவும், எமது மதம் அன்பு மதம் போராட்டம் என்ற பெயரில் கொலை செய்வது தவறு என்னும் வகையிலும் பிரச்சாரம் செய்து, தமது மதத்தவர்கள் போராட்டத்தில் இணையக் கூடாது என்று கட்டுப்படுத்தி வந்தனர். 

இது இரண்டு வகையில் அவர்களுக்கு பலனை தந்தது. ஒன்று புலிகளின் ஆட்சேர்பை குறைத்து, போரிடும் வல்லமையை குறைத்து அவர்களை அழிப்பது. மற்றையது இந்து இளைஞர்கள் போராடி சாக அவர்களின் சந்ததிகள் அழிந்து போகும், அதேவேளை தமது கிறிஸ்தவர்கள் போராடி சாகாமல் சந்ததி பெருக்க வேண்டும். அப்போதுதான் இந்துக்களை அழித்து தாங்கள் பெரும்பான்மை ஆகலாம் என்று கணித்தார்கள். இதுதான் புலிகளுக்கும் கிறிஸ்தவ அமைப்புக்களுக்குமான பெரிய நெருடலாகவும் முரண்பாடாகவும் மாறியது. 

இந்துக்களை அழித்து கிறிஸ்தவர்கள் பெரும்பான்மை ஆகிவிடுவார்கள் என்பதைவிட , மதமாற்றம் என்பது இனவழிப்பு என்ற புரிதலை விட, போராட்டத்திற்கு எதிராகவும், போராட்டத்தில் இணைய கூடாது என்பதாகவும் அவர்கள் செய்யும் பிரச்சாரங்களை தான் புலிகள் ரசிக்கவில்லை எனலாம். அதுதான் மதமாற்றத்திற்கு எதிராகவும் , கிறிஸ்தவ சபைகளுக்கு எதிராகவும் புலிகள் செயற்பட காரணமாக இருந்தது.

இந்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் கத்தோலிக்க சபைகள் தமக்கான வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டன. மெதடிஸ்த சபையிடம் இருந்த வடக்கின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற புலிகள் இயக்கத்தை பயன்படுத்த கைப்பற்ற ஆரம்பித்தனர். மெதடிஸ்த, ஆங்கிலிக்கன் சபைகளின் புலி எதிர்ப்பு நடவடிக்கைக்கு மாற்றான செயற்பாட்டு நிலைகளை எடுத்தனர். புலிகளின் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை ஆதரிப்பது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கினர். புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டு தளபதிகள் பொறுப்பாளர்கள் என்று அதிகாரம் செலுத்த தொடங்கிய கத்தோலிக்க முலாட்டோக்களின் துணையுடன், பயிற்சி முகாம்கள் மற்றும் புலிகளின் கருத்தரங்குகள் என்பவற்றில் தம்மை முன்னிலைப் படுத்திக் கொண்டனர். போராட்டத்திற்கும் புலிகள் அமைப்புக்கும் ஆதரவானவர்கள் என்பதாக காட்டிக் கொண்டார்கள்.

அதே நேரத்தில் தெற்கில் செல்வாக்கு செலுத்திவந்த ஆங்கிலிக்கன் திருச்சபையின் அதிகாரத்தை கைப்பற்றும் நடவடிக்கையிலும் கத்தோலிக்க சபை ஈடுபட ஆரம்பித்திருந்தது. யுத்தத்தின் காரணத்தால் அதிகளவானவர்கள் இராணுவத்தில் இணைக்கப்பட்டனர். அதன்போது கரையோர கத்தோலிக்க முலாட்டோக்கள் பலர் இராணுவத்தில் இணைந்தனர். இதனால் இராணுவ மட்டத்தில் கத்தோலிக்க சபையின் ஆதிக்கம் மேலோங்க ஆரம்பித்தது. இலங்கையின் பிரபல அரசியல் குடும்பங்களுக்குள் காதல் திருமணத்தின் மூலம் கத்தோலிக்கர்கள் உள்நுழைந்தார்கள். இது இலங்கையின் அரசியலில் நீண்ட காலமாக இல்லாமல் இருந்த கத்தோலிக்க ஆதிக்கம் மீண்டும் உருவாக காரணமாக இருந்தது. இலங்கையின் பிரபல அரசியல் குடும்பங்களுக்குள் காதல் திருமணத்தின் மூலம் உள்நுழைந்தது போலவே, புலிகள் இயக்கத்தின் தளபதிகளையும் நாடக காதல் திருமணத்தின் மூலம் வசப்படுத்திக் கொண்டார்கள். இவற்றை எல்லாம் நாம் பின் விரிவாக ஆராய வேண்டும். 

புலிகள் இயக்கத்திற்குள் நடந்த கத்தோலிக்க உள்நுழைவும், இயக்கத்தின் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியுமே பின்நாளில் இயக்கத்தில் நடந்த பிளவுக்கும், புலிகள் இயக்கத்திற்குள் ஏற்பட்ட பிரதேச வாதத்திற்கும் அடிப்படையாக அமைந்தது. தமது கத்தோலிக்க முலாட்டோ தளபதிகள், பொறுப்பாளர்களை முன்னிலைப் படுத்த வேண்டும், அவர்களை இயக்கத்தில் மிகப்பெரிய ஆதிக்கமாக மாற்ற வேண்டும் என்பதற்காக மக்கள் மத்தியில் சில பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள். அவர்களுக்கான ஆதரவைப் பெறுவதற்காக மதத்தை வெளிக்காட்டாமல் பிரதேச ரீதியாக மக்களை ஆதரிக்க செய்யும் பிரச்சாரங்களை உருவாக்கினார்கள்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் கிறிஸ்தவ அமைப்புக்கள் புலிகளை தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட பயன்படுத்த முனைந்தார்களே அன்றி ஆதரிக்கவில்லை என்பதை உறுதி செய்கிறது. புலிகளின் தலைமை முள்ளிவாய்க்காலில் நின்றுதான் அந்த உண்மையை உணர்ந்து கொண்டிருப்பார். ஆனால் தமிழ் மக்கள் பலர் அதனை இன்றும் உணராமல் இருப்பது, நாம் வரலாற்றில் எவ்வளவு பெரிய முட்டாள்களாக மாற்றப்பட்டுள்ளோம்  என்பதையே காட்டுகிறது.

புலிகள் இயக்கத்தை கைப்பற்ற கத்தோலிக்க சபைகள் செய்த முயற்சிகள் எவை? முலாட்டோ தளபதிகளை ஹீரோக்களாக நம்ப வைக்க அவர்கள் மேற்கொண்ட பிரச்சாரங்கள் எவை? இலங்கையின் அரசியல் குடும்பங்களுக்குள் நடந்த காதல் திருமண உள்நுழைவுகள் எவை? நாடக காதல் வலையில் சிக்கிய புலிகளின் தளபதிகள் பொறுப்பாளர்கள் யார்?



வெள்ளிக்கிழமைகளில் ஏன் மாட்டிறைச்சி சாப்பிட சொன்னார்கள்? அதனால் என்ன நன்மை கிடைக்கும்

இலங்கை சிவபூமி என்பது பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ள பட்ட ஒன்று. இலங்கையில் உள்ள பழைமையான சிவாலயங்கள் மற்றும் பாரம்பரிய மக்களின் வாழ்வியல் என்பவை எல்லாம் அதை உறுதிப் படுத்துவதாகவே உள்ளது. அதிலும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் சைவர்களாகவே உள்ளார்கள். 

சைவர்கள் என்று சொன்னாலும் பொதுவாக கடலுணவுகளை அதிகம் உண்ணும் மக்களாகவும், ஆனாலும் வெள்ளி, செவ்வாய், திங்கள், சதுர்த்தி, பிரதோஷம் என்று அதிகமாக நாட்களில்  மச்சம் மாமிசம் என்பவற்றை தவிர்ப்பவர்களாகவும் இருக்கிறார்கள். பொதுவாக அனைத்து தமிழ் மக்களும் வெள்ளிக்கிழமைகளில் கட்டாயமாக அசைவத்தை தவிர்த்து விடுவார்கள். ஏன் அன்றைய நாட்களில் வீடுகளை கழுவி மெழுகி சமைக்கும் வழக்கம் கூட இன்றுவரை தொடர்கிறது.

யதார்த்தம் இப்படி இருக்க புலிகள் இயக்கம் வெள்ளிக் கிழமைகளில் மாட்டு இறைச்சி உணவை தமது உறுப்பினர்களுக்கு கட்டாயமாக வழங்கியது. அங்கு தெரிவு சுதந்திரம் எல்லாம் கிடையாது. அதுதான் உணவு, அதைத்தான் சாப்பிட்டு ஆகவேண்டும்.

புலிகளின் போராட்டம் தமிழ் மக்களுக்கான போராட்டம் என்றால், தமிழர்களின் இருப்பு க்கான போராட்டம் என்றால், தமிழர்களின் பாரம்பரிய வாழ்வியலில் மறுக்கப்பட்ட ஒன்றை மறுதலித்து ஏன் வெள்ளிக் கிழமைகளில் மாட்டிறைச்சியை வழங்கினார்கள்?

ஒரு இனத்தின் இருப்பு என்பது அந்த மக்களின் பாரம்பரிய வாழ்வியலையும் சேர்த்தது தானே? வாழ்வியலை சிதைத்தால் அந்த இனத்தின் இருப்பு சிதைந்து விடாதா?

இனத்தின் இருப்பை சிதைத்துக் கொண்டு இனத்திற்கான போராட்டம் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? அது எப்படி வெற்றி பெறும்? 

புலிகள் வெள்ளிக்கிழமைகளில் மாட்டிறைச்சி உணவு வழங்கும் நடைமுறை எத்தனையாம் ஆண்டில் ஆரம்பித்தது என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறலாம். ஆனால் எனக்கு தெரிந்து 1996 காலப்பகுதியில் இருந்து கடைசிவரை அந்த நடைமுறை தொடர்ச்சியாக இருந்துள்ளது. 

புலிகள் தமது உறுப்பினர்களுக்கு திருநீறு பூசக் கூடாது, பொட்டு வைக்க கூடாது, ருத்ராட்சம், தாயத்து என்பவற்றை கட்டக்கூடாது என்பதுவரை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். ஆனால் சிலுவை அணிந்த பல புலி உறுப்பினர்களை நான் கண்டிருக்கிறேன், பலரும் கண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் எதற்காக செய்தார்கள் என்றோ, ஏன் செய்தார்கள் என்றோ தெரியவில்லை. இதனால் அவர்கள் பெற்ற நன்மை என்னவென்று எனக்கு புரியவில்லை. 

புலிகள் வேண்டுமென்றே தமிழர்களின் பாரம்பரிய வாழ்வியல் அடையாளங்களைச் சிதைத்து மதமாற்றம் என்ற பெயரில் இனவழிப்பு செய்திருப்பார்கள் என்று நம்ப முடியவில்லை. அவர்கள் மதமாற்றத்திற்கு துணை போயிருப்பார்கள் என்றும் கூற முடியவில்லை. 

ஆனால்,

இவ்வாறு எல்லாம் செய்ததற்கு என்ன காரணம், அதன் பின்புலம் என்ன என்பது நிச்சயமாக ஆராயப்பட வேண்டிய ஒன்று. போராட்டம் ஆரம்பித்த போது சிறுபான்மையாக இருந்த கிறிஸ்தவ மதம் போர் முடிந்த இன்றைய காலகட்டத்தில் பல்கிப் பெருகி அதிகமானது எவ்வாறு? போராட்டத்தின் விளைவாக இந்த மண் அடைந்தது மதமாற்றத்தை மட்டும் தானா? 400 வருட அன்னிய ஆட்சியில் செய்ய முடியாத மதமாற்றத்தை முப்பது வருட யுத்தம் சாத்தியமாக்கியது எவ்வாறு? 

மதமாற்றம் என்பது இனவழிப்பு என்பதை உணராமல் தமிழர்களை மயங்கச் செய்து வைத்திருப்பது எது?



Friday, 22 August 2025

இலங்கையில் கிறிஸ்தவ சபைகளின் மறைமுக ஆட்சி

இலங்கையில் கிறிஸ்தவர்கள் பொதுவாக RC, NonRC என்று பிரிக்கப்பட்டு அடையாளப்படுத்த படுகிறார்கள். 

அதாவது ரோமன் கத்தோலிக்கர்கள், ரோமன் கத்தோலிக்கர்கள் அல்லாதவர்கள் என்பதே அந்த பகுப்பாகும். 

வத்திக்கானை, போப்பை நேரடியாக ஏற்பவர்கள் கத்தோலிக்கர்கள் என்றும் அவ்வாறு இல்லாத பிரிவுகள் அனைத்தும் இந்த NonRC என்பதற்குள்ளும் அடங்கிவிடும். 

இந்த NonRC என்பதற்குள் ஆங்கிலிக்கன், மெதடிஸ்த், பாப்டிஸ்ட், பெப்டிஸ்ட், புரட்டஸ்தாந்து, இவாஞ்சலிஸ்ட், லூத்தரன், பெந்தகோஸ்து மற்றும் ஊர்கள் தோறும் உள்ள பல அல்லேலூயா மதமாற்ற சபைகளும் அடங்கிவிடும்.

இலங்கையில் நீண்ட காலமாக அரசியல் ரீதியாக செல்வாக்கு செலுத்தும் பிரிவுகள் ஆங்கிலிக்கன், மெதடிஸ்த், கத்தோலிக்க சபைகளே. இலங்கையின் பிரபலமான தமிழ் சிங்கள தரப்பு அரசியல் வாதிகள் பலரும் இந்த மூன்று சபைகளுக்குள் அடங்கி விடுவார்கள்.

இன்று சிங்கள பௌத்த அரசியல் தலைவர்கள் என்று திரும்ப திரும்ப கூறி நாம் அவ்வாறு நம்பும் நபர்களாக எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்க, ஜே ஆர் ஜயவர்தன, ரணில் விக்கிரமசிங்க, சிறீமாவோ பண்டாரநாயக்க, சந்திரிக்கா குமாரதுங்க இவர்கள் எல்லாம் இந்த ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையைச் சேர்ந்தவர்கள் தான்.

உதாரணமாக ரணில் விக்கிரமசிங்க ஆங்கிலிக்கன் திருச்சபை (Church of Ceylon, Anglican Communion) உறுப்பினராக இருக்கிறார்.

அவர் கொழும்பு கிறிஸ்து தேவாலயம் (St. Michael and All Angels Church, Polwatte, Anglican Church)-இன் உறுப்பினராகவும், உள்ளார். இவ்வாறு மேலே கூறப்பட்ட நபர்கள் அனைவரும் இந்த சபையின் நேரடி மற்றும் மறைமுக உறுப்பினர்களாகவே இன்றுவரை தொடர்கிறார்கள். 

இந்த ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப செல்வாக்கு என்பது, இலங்கை அரசியலில் ஆங்கிலிக்க கிறிஸ்தவ சபையின் செல்வாக்கு என்ன என்பதை உங்களுக்கு உணர்த்தும் என்று நினைக்கிறேன்.

தமிழ் பேசும் தரப்பில் எஸ் ஜே வி செல்வநாயகம் இந்த ஆங்கிலிக்க கிறிஸ்தவ சபையை சேர்ந்தவராவார். சிங்கள பௌத்த அரசியல் வாதிகள் என்று நீங்களும் நானும் நம்பிய அதே நபர்களும், இந்த தமிழர் தந்தை என்று நம்பவைக்கப்பட்ட செல்வநாயகமும் ஒரே சபையின் உறுப்பினர் மற்றும் பங்காளிகள். 

கொழும்பில் ஆங்கிலிக்க கிறிஸ்தவ சபையின் அரசியல் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது போலவே வட கிழக்கில் மெதடிஸ்த கிறிஸ்தவ சபையின் ஆதிக்கம் பின்னாளில் மேலோங்கி இருந்தது. ஏன் இன்றும் இருக்கிறது என்றும் கூறலாம். சுமந்திரன், சாணக்கியன், அரியநாயகம் சந்திரநேரு, சந்திரநேரு சந்திரகாந்தன், சாம் தம்பிமுத்து, கூ வன்னியசிங்கம் (செல்வநாயகத்துடன் சேர்ந்து ஃபெடரல் பார்டியை உருவாக்கியவர்), ஆனந்தசங்கரி இவர்கள் எல்லாம் இந்த மெதடிஸ்த கிறிஸ்தவ சபையைச் சேர்ந்தவர்கள் தான். வடகிழக்கு அரசியலில் கத்தோலிக்க ஆதிக்கம் என்பது ஓரளவு வெளிப்படையாக தெரிந்தாலும் இந்த மெதடிஸ்த கிறிஸ்தவ சபைகளின் ஆதிக்கம் வெளிப்படையாக தெரியாமல் ஆனால் மேலோங்கியே இருக்கிறது. மெதடிஸ்த கிறிஸ்தவர்கள் என்றால் சிலருக்கு யார் என்று தெரியாமல் இருக்கலாம். நீங்கள் காணும் தென்னிந்திய திருச்சபை, அமெரிக்க மிஷன், என்பவை எல்லாம் இந்த மெதடிஸ்த கிறிஸ்தவ சபையின் மரு வைத்த மாறு வேடங்கள் தான்.

வடக்கு கிழக்கு தெற்கு என்று எல்லா இடங்களிலும் கரையோர பகுதிகளில் கத்தோலிக்க கிறித்தவ சபையின் செல்வாக்கு மேலோங்கி இருக்கிறது என்று கூறலாம். போர்த்துக்கேயர் காலத்தில் அவர்களால் கொண்டுவரப்பட்ட மக்களாலும் மதமாற்றம் செய்யப்பட்ட மக்களாலும் பின்பற்றப்படுகிறது என்பதால் எண்ணிக்கை அளவில் கரையோரப் பகுதிகளில் இவர்களது செல்வாக்கு அதிகமாக உள்ளது. போர்த்துக்கேயர் காலத்தில் ஆபிரிக்காவில் இருந்தும் கிழக்காசிய நாடுகளில் இருந்தும் கொண்டுவரப்பட்ட கூலிப்படைகளும், அடிமைகளாக கொண்டு வரப்பட்டு கருவாட்டு உற்பத்தி, முத்து எடுத்தல், சங்கு எடுத்தல், புகையிலை தோட்டம், சுண்ணாம்பு சூளை, செங்கல் சூளை போன்றவற்றுக்கான பயன்படுத்தப்பட்ட அடிமைகளும் கத்தோலிக்க மதத்தை பின்பற்ற நிர்பந்திக்கப் பட்டதால் இங்கு வாழும் அவர்கள் பின்னாளில் அந்தந்த பகுதிகளில் உள்ள சிங்களம் தமிழ் போன்ற  மொழிகளைப் பேசும் மக்களாக மாறினாலும் கத்தோலிக்கத்தை பின்பற்றுபவர்களாக உள்ளார்கள். 

இலங்கையின் பிரபலமான பௌத்த சிங்கள என்று நம்ப வைக்கப்பட்ட அரசியல் குடும்பங்களில் ஒன்றான ராஜபக்ஷ குடும்பம் இந்த கத்தோலிக்க கிறித்தவ சபையைச் சேர்ந்த சேர்ந்ததே. அதுபோலவே பிரபலமான  பெர்னாண்டோ, பெரேரா, பீரிஸ், குரூஸ், சில்வா, பொன்சேகா, மெல், அல்விஸ், டயஸ், மென்டிஸ், அல்மைடா, ரொட்ரிகோ என்று பெயர் தாங்கிய அரசியல் வாதிகள் குடும்பங்கள் எல்லாம் இந்த கத்தோலிக்க கிறித்தவ சபையைச் சேர்ந்தவர்கள் தான். இப்போது நீங்கள் கடும் பௌத்த சிங்கள பேரினவாதிகள் என்று நம்பியவர்களின் பெயர்களை எல்லாம் எடுத்து பாருங்கள் பாதிக்கும் மேல் இவர்கள் தான் வருகிறார்கள் இல்லையா?

வடக்கு கிழக்கில் சாள்ஸ், அடைக்கலநாதன், அல்பிரட் துரையப்பா, பொன்னம்பலம், நாகநாதன் (செல்வநாயகத்துடன் சேர்ந்து ஃபெடரல் கட்சியை உருவாக்கியவர்கள்) யோகேஸ்வரன் இவர்கள் எல்லாம் கத்தோலிக்க கிறித்தவ சபையைச் சேர்ந்தவர்கள் தான். 

இப்பவே கண்ணைக் கட்டுதா, நிற்க.

ஏதோ அரசியல் செய்வதற்காக, பெரும்பான்மையாக வாழும் இந்து பௌத்த மக்களை ஏமாற்றி வாக்கு பெறுவதற்காக அப்படி பண்ணுகிறார்கள். அவர்களுக்கு உள்ளேயே எவ்வளவு பிரிவு பிரச்சினை என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை... அவர்கள் திட்டம் வாக்கு பெறுவது கிடையாது அதற்கும் மேலே..

உலகளாவிய அளவில் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக செயற்படுபவர்கள் இவாஞ்சலிஸ்ட் என்று அழைக்கப்படுகிறார்கள். குறளி வித்தை, நவமான பாஷை(தூஷணம் உட்பட) , புனித பேயுடனான அனுபவம் இவற்றை எல்லாம் வைத்து மதம் மாற்றுவது இவாஞ்சலிஸ்ட் கொள்கை. இந்த இவாஞ்சலிஸ்ட்கள் உலகளாவிய பல்வேறு சபைகளை உள்ளடக்கி ஒரு கூட்டமைப்பை வைத்துள்ளார்கள். அதாவது சர்வதேச கிறிஸ்தவ இவாஞ்சலிக்கல் கூட்டமைப்பு(ICEA) என்று. நான் மேலே கூறிய பல்வேறு கத்தோலிக்கம் அல்லாத சபைகள் பலவும் இந்த ICEA கூட்டமைப்பில் உள்ளன. சுமந்திரன் சாணக்கியனின் மெதடிஸ்த திருச்சபை உட்பட பலவும் மதமாற்ற இவாஞ்சலிஸ்ட் கூட்டமைப்பில் உள்ளன. சுமந்திரன் இலங்கை மெதடிஸ்த சபையின் உப தலைவர் அவரது மனைவி கிறிஸ்தவ மதமாற்ற கூட்டமைப்பான ICEA இன் தென்கிழக்கு ஆசியாவின் பிரதிநிதி என்னும் அளவுக்கு இவர்களின் மதவெறி+ மதமாற்ற வெறி என்பவை நீள்கிறது. 

இலங்கையில் பௌத்த சிங்கள பேரினவாதம் என்ற பொய் திரும்ப திரும்ப சொல்லப்பட்டு மக்களால் நம்பவைக்கப்பட்டு, இந்த கிறிஸ்தவ சபைகளின் ஆதிக்கம் ஆட்சி என்பவையும் அவர்களின் மதவெறியும் மறைக்கப்பட்டுள்ளது.

அதுபோலவே தமிழ் தேசியம் என்ற பெயரில் கிறிஸ்தவ மத வெறியும் மதமாற்றமும் பேசுபொருளாக மாறாதவாறு மக்கள் முட்டாள்களாக மாற்றப்பட்டுள்ளார்கள். ஏமாளிகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள். தமிழர்களை மதமாற்றம் செய்வதற்கு தடையாக உள்ள கல்வியும் கலாச்சாரமும் இவர்களால் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் மிகவும் பின்தங்கிய நிலையில் வட கிழக்கின் கல்வி நிலை தாழ்ந்துள்ளது. போதைவஸ்து கலாச்சாரம், வாள்வெட்டு வன்முறைக் கலாச்சாரம், துப்பாக்கி கலாசாரம் என்று வடகிழக்கின் வாழ்வியல் சில பத்து ஆண்டுகளாக சீரழிந்து போயுள்ளது. 

புற்றுநோய் போல் மதமாற்ற சபைகளும், மதமாற்றமும் தமிழர் தேசத்தை, தமிழினத்தின் இருப்பை வெளித் தெரியாது உள்ளிருந்து அழித்து வருகிறது. இதை தமிழினம் இப்போது கண்டுகொள்ளவில்லை என்றால், பேசவில்லை என்றால் இனி எப்போதும் பேச முடியாது. ஏனென்றால் இன்னும் சில காலம் இது தொடர்ந்தால் அதைப் பற்றி பேச தமிழர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தமிழ் பேசும் ஒரு சிறிய கலப்பினம் மட்டுமே இம்மண்ணில் எஞ்சி இருக்கும்.

பொட்டழித்து, பூவழித்து, அறுதாலி கோலத்துடன், அரைகுறை ஆடையுடன், அசிங்கமான வாழ்க்கை வாழ்வதற்கு தான் நாம் தமிழ் தேசியம் என்ற பெயரில் ஏமாற்ற படுகிறோமா? வாழ்வியல் அழிந்த பின்னர் ஒரு இனத்திற்கு வாழ்க்கை ஏது?

நாம் அடிமைகளாக வாய் மூடி இருந்து எம் இனத்தின் அழிவைக் கண்டுகொண்டே சாகப் போகிறோமா? தமிழர்களே எம் நீண்டகால கும்பகர்ண தூக்கத்திற்கு எப்போது முடிவு?


புலிகள் இயக்கத்தின் அழிவுக்கு காரணம் என்ன?

இயக்கத்தில் கத்தோலிக்க ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது பிரபாகரனின் தாழ்வு மனப்பான்மையா? புலிகள் இயக்கத்தின் வெள்ளிக்கிழமைகளில் மாட்டிறைச்சி உணவு,...