Friday, 22 August 2025

இலங்கையில் கிறிஸ்தவ சபைகளின் மறைமுக ஆட்சி

இலங்கையில் கிறிஸ்தவர்கள் பொதுவாக RC, NonRC என்று பிரிக்கப்பட்டு அடையாளப்படுத்த படுகிறார்கள். 

அதாவது ரோமன் கத்தோலிக்கர்கள், ரோமன் கத்தோலிக்கர்கள் அல்லாதவர்கள் என்பதே அந்த பகுப்பாகும். 

வத்திக்கானை, போப்பை நேரடியாக ஏற்பவர்கள் கத்தோலிக்கர்கள் என்றும் அவ்வாறு இல்லாத பிரிவுகள் அனைத்தும் இந்த NonRC என்பதற்குள்ளும் அடங்கிவிடும். 

இந்த NonRC என்பதற்குள் ஆங்கிலிக்கன், மெதடிஸ்த், பாப்டிஸ்ட், பெப்டிஸ்ட், புரட்டஸ்தாந்து, இவாஞ்சலிஸ்ட், லூத்தரன், பெந்தகோஸ்து மற்றும் ஊர்கள் தோறும் உள்ள பல அல்லேலூயா மதமாற்ற சபைகளும் அடங்கிவிடும்.

இலங்கையில் நீண்ட காலமாக அரசியல் ரீதியாக செல்வாக்கு செலுத்தும் பிரிவுகள் ஆங்கிலிக்கன், மெதடிஸ்த், கத்தோலிக்க சபைகளே. இலங்கையின் பிரபலமான தமிழ் சிங்கள தரப்பு அரசியல் வாதிகள் பலரும் இந்த மூன்று சபைகளுக்குள் அடங்கி விடுவார்கள்.

இன்று சிங்கள பௌத்த அரசியல் தலைவர்கள் என்று திரும்ப திரும்ப கூறி நாம் அவ்வாறு நம்பும் நபர்களாக எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்க, ஜே ஆர் ஜயவர்தன, ரணில் விக்கிரமசிங்க, சிறீமாவோ பண்டாரநாயக்க, சந்திரிக்கா குமாரதுங்க இவர்கள் எல்லாம் இந்த ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையைச் சேர்ந்தவர்கள் தான்.

உதாரணமாக ரணில் விக்கிரமசிங்க ஆங்கிலிக்கன் திருச்சபை (Church of Ceylon, Anglican Communion) உறுப்பினராக இருக்கிறார்.

அவர் கொழும்பு கிறிஸ்து தேவாலயம் (St. Michael and All Angels Church, Polwatte, Anglican Church)-இன் உறுப்பினராகவும், உள்ளார். இவ்வாறு மேலே கூறப்பட்ட நபர்கள் அனைவரும் இந்த சபையின் நேரடி மற்றும் மறைமுக உறுப்பினர்களாகவே இன்றுவரை தொடர்கிறார்கள். 

இந்த ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப செல்வாக்கு என்பது, இலங்கை அரசியலில் ஆங்கிலிக்க கிறிஸ்தவ சபையின் செல்வாக்கு என்ன என்பதை உங்களுக்கு உணர்த்தும் என்று நினைக்கிறேன்.

தமிழ் பேசும் தரப்பில் எஸ் ஜே வி செல்வநாயகம் இந்த ஆங்கிலிக்க கிறிஸ்தவ சபையை சேர்ந்தவராவார். சிங்கள பௌத்த அரசியல் வாதிகள் என்று நீங்களும் நானும் நம்பிய அதே நபர்களும், இந்த தமிழர் தந்தை என்று நம்பவைக்கப்பட்ட செல்வநாயகமும் ஒரே சபையின் உறுப்பினர் மற்றும் பங்காளிகள். 

கொழும்பில் ஆங்கிலிக்க கிறிஸ்தவ சபையின் அரசியல் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது போலவே வட கிழக்கில் மெதடிஸ்த கிறிஸ்தவ சபையின் ஆதிக்கம் பின்னாளில் மேலோங்கி இருந்தது. ஏன் இன்றும் இருக்கிறது என்றும் கூறலாம். சுமந்திரன், சாணக்கியன், அரியநாயகம் சந்திரநேரு, சந்திரநேரு சந்திரகாந்தன், சாம் தம்பிமுத்து, கூ வன்னியசிங்கம் (செல்வநாயகத்துடன் சேர்ந்து ஃபெடரல் பார்டியை உருவாக்கியவர்), ஆனந்தசங்கரி இவர்கள் எல்லாம் இந்த மெதடிஸ்த கிறிஸ்தவ சபையைச் சேர்ந்தவர்கள் தான். வடகிழக்கு அரசியலில் கத்தோலிக்க ஆதிக்கம் என்பது ஓரளவு வெளிப்படையாக தெரிந்தாலும் இந்த மெதடிஸ்த கிறிஸ்தவ சபைகளின் ஆதிக்கம் வெளிப்படையாக தெரியாமல் ஆனால் மேலோங்கியே இருக்கிறது. மெதடிஸ்த கிறிஸ்தவர்கள் என்றால் சிலருக்கு யார் என்று தெரியாமல் இருக்கலாம். நீங்கள் காணும் தென்னிந்திய திருச்சபை, அமெரிக்க மிஷன், என்பவை எல்லாம் இந்த மெதடிஸ்த கிறிஸ்தவ சபையின் மரு வைத்த மாறு வேடங்கள் தான்.

வடக்கு கிழக்கு தெற்கு என்று எல்லா இடங்களிலும் கரையோர பகுதிகளில் கத்தோலிக்க கிறித்தவ சபையின் செல்வாக்கு மேலோங்கி இருக்கிறது என்று கூறலாம். போர்த்துக்கேயர் காலத்தில் அவர்களால் கொண்டுவரப்பட்ட மக்களாலும் மதமாற்றம் செய்யப்பட்ட மக்களாலும் பின்பற்றப்படுகிறது என்பதால் எண்ணிக்கை அளவில் கரையோரப் பகுதிகளில் இவர்களது செல்வாக்கு அதிகமாக உள்ளது. போர்த்துக்கேயர் காலத்தில் ஆபிரிக்காவில் இருந்தும் கிழக்காசிய நாடுகளில் இருந்தும் கொண்டுவரப்பட்ட கூலிப்படைகளும், அடிமைகளாக கொண்டு வரப்பட்டு கருவாட்டு உற்பத்தி, முத்து எடுத்தல், சங்கு எடுத்தல், புகையிலை தோட்டம், சுண்ணாம்பு சூளை, செங்கல் சூளை போன்றவற்றுக்கான பயன்படுத்தப்பட்ட அடிமைகளும் கத்தோலிக்க மதத்தை பின்பற்ற நிர்பந்திக்கப் பட்டதால் இங்கு வாழும் அவர்கள் பின்னாளில் அந்தந்த பகுதிகளில் உள்ள சிங்களம் தமிழ் போன்ற  மொழிகளைப் பேசும் மக்களாக மாறினாலும் கத்தோலிக்கத்தை பின்பற்றுபவர்களாக உள்ளார்கள். 

இலங்கையின் பிரபலமான பௌத்த சிங்கள என்று நம்ப வைக்கப்பட்ட அரசியல் குடும்பங்களில் ஒன்றான ராஜபக்ஷ குடும்பம் இந்த கத்தோலிக்க கிறித்தவ சபையைச் சேர்ந்த சேர்ந்ததே. அதுபோலவே பிரபலமான  பெர்னாண்டோ, பெரேரா, பீரிஸ், குரூஸ், சில்வா, பொன்சேகா, மெல், அல்விஸ், டயஸ், மென்டிஸ், அல்மைடா, ரொட்ரிகோ என்று பெயர் தாங்கிய அரசியல் வாதிகள் குடும்பங்கள் எல்லாம் இந்த கத்தோலிக்க கிறித்தவ சபையைச் சேர்ந்தவர்கள் தான். இப்போது நீங்கள் கடும் பௌத்த சிங்கள பேரினவாதிகள் என்று நம்பியவர்களின் பெயர்களை எல்லாம் எடுத்து பாருங்கள் பாதிக்கும் மேல் இவர்கள் தான் வருகிறார்கள் இல்லையா?

வடக்கு கிழக்கில் சாள்ஸ், அடைக்கலநாதன், அல்பிரட் துரையப்பா, பொன்னம்பலம், நாகநாதன் (செல்வநாயகத்துடன் சேர்ந்து ஃபெடரல் கட்சியை உருவாக்கியவர்கள்) யோகேஸ்வரன் இவர்கள் எல்லாம் கத்தோலிக்க கிறித்தவ சபையைச் சேர்ந்தவர்கள் தான். 

இப்பவே கண்ணைக் கட்டுதா, நிற்க.

ஏதோ அரசியல் செய்வதற்காக, பெரும்பான்மையாக வாழும் இந்து பௌத்த மக்களை ஏமாற்றி வாக்கு பெறுவதற்காக அப்படி பண்ணுகிறார்கள். அவர்களுக்கு உள்ளேயே எவ்வளவு பிரிவு பிரச்சினை என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை... அவர்கள் திட்டம் வாக்கு பெறுவது கிடையாது அதற்கும் மேலே..

உலகளாவிய அளவில் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக செயற்படுபவர்கள் இவாஞ்சலிஸ்ட் என்று அழைக்கப்படுகிறார்கள். குறளி வித்தை, நவமான பாஷை(தூஷணம் உட்பட) , புனித பேயுடனான அனுபவம் இவற்றை எல்லாம் வைத்து மதம் மாற்றுவது இவாஞ்சலிஸ்ட் கொள்கை. இந்த இவாஞ்சலிஸ்ட்கள் உலகளாவிய பல்வேறு சபைகளை உள்ளடக்கி ஒரு கூட்டமைப்பை வைத்துள்ளார்கள். அதாவது சர்வதேச கிறிஸ்தவ இவாஞ்சலிக்கல் கூட்டமைப்பு(ICEA) என்று. நான் மேலே கூறிய பல்வேறு கத்தோலிக்கம் அல்லாத சபைகள் பலவும் இந்த ICEA கூட்டமைப்பில் உள்ளன. சுமந்திரன் சாணக்கியனின் மெதடிஸ்த திருச்சபை உட்பட பலவும் மதமாற்ற இவாஞ்சலிஸ்ட் கூட்டமைப்பில் உள்ளன. சுமந்திரன் இலங்கை மெதடிஸ்த சபையின் உப தலைவர் அவரது மனைவி கிறிஸ்தவ மதமாற்ற கூட்டமைப்பான ICEA இன் தென்கிழக்கு ஆசியாவின் பிரதிநிதி என்னும் அளவுக்கு இவர்களின் மதவெறி+ மதமாற்ற வெறி என்பவை நீள்கிறது. 

இலங்கையில் பௌத்த சிங்கள பேரினவாதம் என்ற பொய் திரும்ப திரும்ப சொல்லப்பட்டு மக்களால் நம்பவைக்கப்பட்டு, இந்த கிறிஸ்தவ சபைகளின் ஆதிக்கம் ஆட்சி என்பவையும் அவர்களின் மதவெறியும் மறைக்கப்பட்டுள்ளது.

அதுபோலவே தமிழ் தேசியம் என்ற பெயரில் கிறிஸ்தவ மத வெறியும் மதமாற்றமும் பேசுபொருளாக மாறாதவாறு மக்கள் முட்டாள்களாக மாற்றப்பட்டுள்ளார்கள். ஏமாளிகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள். தமிழர்களை மதமாற்றம் செய்வதற்கு தடையாக உள்ள கல்வியும் கலாச்சாரமும் இவர்களால் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் மிகவும் பின்தங்கிய நிலையில் வட கிழக்கின் கல்வி நிலை தாழ்ந்துள்ளது. போதைவஸ்து கலாச்சாரம், வாள்வெட்டு வன்முறைக் கலாச்சாரம், துப்பாக்கி கலாசாரம் என்று வடகிழக்கின் வாழ்வியல் சில பத்து ஆண்டுகளாக சீரழிந்து போயுள்ளது. 

புற்றுநோய் போல் மதமாற்ற சபைகளும், மதமாற்றமும் தமிழர் தேசத்தை, தமிழினத்தின் இருப்பை வெளித் தெரியாது உள்ளிருந்து அழித்து வருகிறது. இதை தமிழினம் இப்போது கண்டுகொள்ளவில்லை என்றால், பேசவில்லை என்றால் இனி எப்போதும் பேச முடியாது. ஏனென்றால் இன்னும் சில காலம் இது தொடர்ந்தால் அதைப் பற்றி பேச தமிழர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தமிழ் பேசும் ஒரு சிறிய கலப்பினம் மட்டுமே இம்மண்ணில் எஞ்சி இருக்கும்.

பொட்டழித்து, பூவழித்து, அறுதாலி கோலத்துடன், அரைகுறை ஆடையுடன், அசிங்கமான வாழ்க்கை வாழ்வதற்கு தான் நாம் தமிழ் தேசியம் என்ற பெயரில் ஏமாற்ற படுகிறோமா? வாழ்வியல் அழிந்த பின்னர் ஒரு இனத்திற்கு வாழ்க்கை ஏது?

நாம் அடிமைகளாக வாய் மூடி இருந்து எம் இனத்தின் அழிவைக் கண்டுகொண்டே சாகப் போகிறோமா? தமிழர்களே எம் நீண்டகால கும்பகர்ண தூக்கத்திற்கு எப்போது முடிவு?


Thursday, 26 December 2024

மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயில், பூதவராயர் கோவிலா?

யாழ்ப்பாணத்தில் பிரபலமான இந்து ஆலயங்களில் மானிப்பாய் மருதடி பிள்ளையார் ஆலயமும் ஒன்றாகும். இன்று பிள்ளையார் கோயிலாக சிறப்புப் பெற்றிருந்தாலும் அதன் பழைய ஆலயம் பற்றிய விபரமும், அது அழிக்கப்பட்ட வரலாறும் பலருக்கும் தெரியாத நிலையே காணப்படுகிறது.

இப்போது மருதடி பிள்ளையார் கோயில் உள்ள இடத்தில், அந்த ஆலயம் முன்பு இருக்கவில்லை. இன்று மானிப்பாய் கிரீன் ஹாஸ்பிடல் மற்றும் தென்னிந்திய திருச்சபையின் சர்ச் என்பவை அமைக்கப்பட்டுள்ள இடத்திலேயே முன்னர் கோயில் இருந்துள்ளது.

தென்னிந்திய திருச்சபை என்று இப்போது அறியப்படும், அமெரிக்கன் சிலோன் மிசன் என்னும் கிறித்தவ மதமாற்ற அமைப்பு, 1813 இல் இலங்கையில் கால்பதிக்க ஆரம்பித்தது. அவர்கள் தென்னிலங்கையில் செயற்படவே விரும்பிய போதும் அப்போதைய கிறிஸ்தவ மதப் பிரிவுகளுக்கு இடையேயான முரண்பாடுகளால் யாழ்ப்பாணத்தில் தமது மதமாற்ற செயற்பாடுகளை ஆரம்பித்தனர். பாரம்பரிய இந்து மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் வகையிலான பிரசுரங்களை, நூல்களை வெளியிடுவதை அவர்கள் பிரதான பணியாக கொண்டிருந்தனர். மக்கள் தமது பாரம்பரிய நம்பிக்கைகள் வழிபாட்டு முறைகள் மீது நம்பிக்கையை இழக்க வேண்டும், அவை தொடர்பில் சந்தேகம் கொள்ள வேண்டும், அதுவே மதமாற்றத்திற்கு முதல்படி என்பது கிறித்தவ மதமாற்ற குழுக்களின் மதமாற்ற உபாயம். அமெரிக்கன் சிலோன் மிசனும் அதையே இந்த மண்ணில் செய்தது. சமூக சேவை என்ற பெயரில் மக்களை அணுகுவது, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர்களின் பாரம்பரிய வாழ்வியலை சிதைப்பது, என்பது அவர்கள் கைக்கொண்ட உத்தி. அதற்காக வைத்திய சாலைகள் கல்விச் சாலைகள் என்பவற்றையும் நடத்த ஆரம்பித்தார்கள். 

அவ்வாறு அவர்கள் யாழ்பாணத்தில் ஆரம்பித்த வைத்தியசாலை தான் மானிப்பாய் கிறீன் ஹாஸ்பிட்டல். அந்த இடம் முன்பு பூதவராயர் கோயில் எனப்படும் மிகப்பெரிய சைவ ஆலயம் அமைந்திருந்த இடமாகும். பூதவராயர் என்பது பஞ்ச பூதங்களுக்கும் தலைவனாக இறைவனை வழிபடும் ஒரு இந்து வழிபாட்டு முறையாகும். லிங்க வடிவமாகவும், பூதவராயர் என்ற ஒரு கடவுள் வடிவமாகவும் வழிபடும் வழக்கம் இம்மண்ணில் இருந்துள்ளது. 

தமிழர்களிடம் இருந்து யாழ்பாணத்தை ஆக்கிரமிப்பு செய்த போர்த்துக்கல்லை தலைமையிடமாகக் கொண்ட செய்த கத்தோலிக்க கிறித்தவர்கள், இலங்கையில் இருந்த அனைத்து இந்து பௌத்த ஆலயங்களையும் இடித்து வன்முறை வெறியாட்டம் ஆடினார்கள். அவ்வாறு கத்தோலிக்க மதவெறியர்கள் இடித்த ஆலயங்களில் இந்த மானிப்பாய் மருதடி பூதவராயர் ஆலயமும் ஒன்று. இடித்த கற்கள் யாழ் கோட்டை அமைக்க எடுத்துச் செல்லப்பட, அந்த இடத்தில் வாழ்ந்த மக்கள் பலர் கொல்லப்பட்டார்கள், பெண்கள் பலர் பலாத்காரம் செய்யப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டார்கள். சிலர் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவிற்கு சென்றதும் நடந்துள்ளது.

அப்படி கத்தோலிக்கர்கள் இடித்து தரைமட்டமாக்கிய இடத்திலேயே இன்று தென்னிந்திய திருச்சபையின் சர்ச்சும், வைத்தியசாலையும் அமைக்கப்பட்டது. அதன் சுற்றுவட்டாரத்தில் ஏற்கனவே இருந்த கிறிஸ்தவ முலாட்டோக்களுக்கு மேலதிகமாக, கிறிஸ்தவ பறங்கியர்கள் சிலரும் குடியேற்றம் செய்யப்பட்டார்கள். இன்றும்கூட அப்பகுதியில் வாழும் கத்தோலிக்கர்கள் பலரும் முலாட்டோ என்று கூறத் தக்க தோற்றத்திலும், தென்னிந்திய திருச்சபையினர் பலரும் பறங்கியர் என்று கூறத் தக்க தோற்றத்திலும் உள்ளார்கள்.

பாராம்பரிய மக்களின் நம்பிக்கையை சிதைப்பதற்காக பூதவராயர் கோயில் இடிக்கப்பட்ட இடத்தில் கத்தோலிக்கர்களால் இடுகாடும் சர்ச்சும் கட்டப்பட்டிருந்தது. பின்னர் கத்தோலிக்கர்களை வென்று யாழ்பாணத்தை ஆக்கிரமிப்பு செய்த புரட்டஸ்தாந்து(ஒல்லாந்த) சபையினர் கத்தோலிக்க சர்ச்சினை இடித்து அகற்றினார்கள். அந்த இடத்திலேயே பின்னர் அமெரிக்கன் சிலோன் மிசன் தமது சர்ச்சையும் வைத்திய சாலையும் நிறுவியது. 

பிற்காலத்தில் பிரித்தானிய அரசு தமது நீண்டகால இருப்பை தக்க வைப்பதற்காக, பாரம்பரிய மக்களுக்கு அவர்களின் உரிமைகளை கொடுப்பது போல் கொடுத்து, தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்ற நடைமுறையை பின்பற்றினார்கள். அதனால் 1850 களின் பின்னர் பாரம்பரிய இந்து மக்களுக்கு கத்தோலிக்கர்கள் இடித்து தரைமட்டமாக்கி கைப்பற்றிய பூதவராயர் கோயில் நிலத்திற்கு மாற்றாக, ஆலயம் எதுவும் அமைக்க முடியாத வயல் நிலத்தை பதில் நிலம் என்பதாக கொடுத்தார்கள். அதற்கும் இந்துக்களிடம் இருந்து பெருந்தொகை பணம் பிரித்தானிய அரசால் அறவிடப்பட்டது. அந்த ஆலயத்தை நிர்வகிக்கும் கட்டுப்படுத்தும் உரிமையை கூட பிரித்தானிய அரசே வைத்துக் கொண்டது. அந்த காலத்திலேயே கிறிஸ்தவ ஆளுகைக்குட்பட்ட சைவ சமயமும் பரவ ஆரம்பித்தது.  

பூதவராயர் கோயிலை இடம் மாற்றி அமைப்பது தொடர்பில், பக்தர்களால் தெய்வ ஆணை பலமுறை கேட்கப்பட்ட போதும் அது கிடைக்காததால், பூதவராயர் கோயிலை மீண்டும் அமைப்பது என்றால் அது இருந்த இடத்தில் தான் மீண்டும் அமைக்க வேண்டும் என்றும், இடம் மாற்றி அமைப்பது இறைவன் ஆணையல்ல என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன் பிற்பாடு பூதவராயர் ஆலயத்தின் பரிவார மூர்த்தியான விநாயகர் சன்னதி இருந்த இடம் பிரித்தானியர் கொடுத்த காணியின் எல்லையை தொட்டு நிற்பதால் பிள்ளையார் கோயிலை அமைப்பது என்றும், பூதவராயர் ஆலயத்தின் இடத்தை மீட்டு அந்த இடத்திலேயே மீண்டும் பூதவராயருக்கு கோயில் அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. 

 பூதவராயர் ஆலயத்தின் பரிவார பூர்த்தியாக பிள்ளையார் இருந்த இடமே இன்றைய மருதடி பிள்ளையார் கோயில் முன்புறம் என்பதும், அதற்கு முன்னால் உள்ள கிறிஸ்தவ சர்ச்சே பூதவராயர் ஆலயத்தின் மூலவர் இருந்த இடம் என்பதும் மறைக்கப்பட முடியாத வரலாற்று உண்மை.

தன் ஆலயம் அமைக்கப்படும் நாளுக்காக பூதவராயர் காத்துக் கொண்டு இருக்கிறார். அன்னிய ஆக்கிரமிப்பின் அசிங்கத்தை நீக்கி, பாரம்பரிய மக்கள் தம் வாழ்வியல் இருப்பை மீண்டும் நிறுவும் நாள் எப்போது?



Monday, 25 November 2024

புலிகளின் கல்லறையில் சைவ தத்துவம்

தலைவர் பிரபாகரனின் மரபுவழி கல்லறை அமைப்பு முறையும், ஆன்ம சிவ தத்துவங்களும்.

இறந்தவர்களுக்கு கல்லறை அமைத்து அதனை வழிபடும், மரியாதை செய்யும் மரபு பன்னெடுங்காலமாகவே தமிழர்களிடம் இருந்து வருகிறது. அந்த கல்லறைகளை அமைக்கும் போது, அதற்கெனவும் சில மரபுகளை பின்பற்றினார்கள். 

உலகத்தில் உள்ள மத நம்பிக்கைகளில் இறைவன் என்பது வேறு, ஆன்மா என்பது வேறு என்று பேசும் ஒரேயொரு சமய தத்துவம் சைவ தத்துவம் மட்டுமே. மற்றையவை எல்லாம் ஏதோவொரு ஆன்மாவை  தெய்வம் என்றோ ஆண்டவர் என்றோ வழிபடும் ஆன்ம வழிபாட்டு மதங்களாகவே உள்ளன. அவர்கள் கூறும் தேர்வர்கள் தெய்வங்கள் என்பவை எல்லாம் எம்மைப் போன்ற ஒரு ஆன்மாவே, ஆனால் அந்த ஆன்மாவிற்கு சில விசேட தன்மைகள் இருப்பதாக கூறுகிறார்கள்.

சைவ தத்துவங்கள் ஆன்மாவும் இறைவனும் ஒன்று கிடையாது,  அனுபவம் என்னும் ஒற்றை நிலையில் முக்தியடைந்த ஆன்மாக்கள் இறைவனை ஒத்த தோற்றத்தை காட்டும் என்று விளங்குவார்கள். அதாவது இறைவன் ஆன்மா இரண்டும் ஒரே போன்றவை கிடையாது. முக்தி நிலையில் ஆன்மாக்கள் இறைவனை ஒத்த வரம்பிலா இன்பத்தை அனுபவிக்கும் என்பதால் அந்த ஒரு நிலையில் இறைவன் ஆன்மா இரண்டும் ஒன்றுபோல் இருக்கும் என்பதாகும்.

அதனால் முக்தி அடைந்த ஆன்மாக்கள் என்று கருதப்படும் ஆன்மாக்களுக்கு கல்லறை அமைக்கும் போது, சிவ லிங்கத்தின் தோற்றம் ஒரு பார்வையில் தோன்றும் வகையில் கல்லறைகளை அமைந்தார்கள். அதாவது முழுமையாக சிவலிங்கமாக தோற்றமளிக்காமல் ஒரு பக்க பார்வையில் சிவலிங்கம் போல தோன்றும் வகையில் இருபரிமாண சிவலிங்கம் என்பதாக அமைப்பார்கள். 

புலிகளின் காலத்தில் கரும்புலிகள் மாவீரர்களின் கல்லறை அமைப்பு இந்த இருபரிமாண சிவலிங்க வடிவிலேயே அமைக்கப்பட்டது. 

அதெப்படி வாழ்வை முழுவதும் வாழ்ந்து முடிக்காதவர்கள் முக்தி அடையலாம், அவல சாவை தழுவியவர்கள் முக்தி அடையலாம், என்ற கேள்வி சிலருக்கு எழலாம். ஆனால் இந்த கேள்விக்கும் புலிகள் காலத்திலேயே, சைவ நம்பிக்கைகளின் அடிப்படையில், அவர்கள் பதில் கூறினார்கள். தனக்கான வாழவை வாழாமல், தன் நாட்டிற்காக, சமூகத்திற்காக என்று வாழ்ந்து, தன் உயிரை ஆகுதி ஆக்குபவர்கள் முக்தியை அடைவார்கள் என்பது எம் பழம்பெரும் நம்பிக்கை. அவ்வாறு இறக்கும் மாவீரர்கள் வானத்தில் நட்சத்திரங்களாக தோன்றி மின்னுவார்கள் என்பதும் எம் மரபுவழி நம்பிக்கை. அதனால்தான்,

மாவீரர்களே, நீங்கள் எம்மை விட்டு சென்றாலும், இந்த மண்ணை விட்டு சென்றாலும் எமது மக்களின் மகிழ்ச்சியான எதிர்காலத்தையும், மலரும் தமிழீழத்தையும் வானத்தில் மின்னும் நட்சத்திரங்களாக இருந்து பார்ப்பீர்கள் என்று மேடைகள் தோறும் பேசுவார்கள். இவைகளை வன்னியில் புலிகளுடன் வாழ்ந்த மக்கள் அனைவரும் அறிவார்கள்.

தலைவர் பிரபாகரனின் தந்தையார் பெரும் சிவபக்தர் என்பதும், சிவாலயம் ஒன்றை பரிபாலனம் செய்து வந்தார் என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. தலைவர் கூட 2002 சமாதான காலம் வரையில் மிகப்பெரிய முருக பக்தராக, யாராலும் வெல்லப்பட முடியாத ஒருவராக இருந்தார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே.

இறந்த மாவீரர்களுக்கு கல்லறை அமைப்பது தொடர்பாகவும், அதன் வடிவம் தொடர்பாகவும் ஆலோசனை நடந்த காலத்தில், தலைவரின் தந்தையார் வேலுப்பிள்ளை தான் இந்த வடிவத்தையும், ஆன்மா சிவ வடிவின் ஒரு தோற்றத்தை காட்டும் என்பதையும் விளக்கினார் என்று கூறுகிறார்கள்.

வீர சைவ பிரிவுகள் இறந்தவர்களின் உடல் புதைக்கப்பட்ட இடத்தின் மேல், முழுமையான சிவலிங்கத்தை வைப்பார்கள். அவர்களின் நம்பிக்கை அடிப்படையில், உயிர் முக்தியின் பின்னர் சிவமாக மாறுகிறது என்பதால் அவ்வாறு செய்கிறார்கள். சித்தாந்த சைவம் உயிர் சிவமாகும் என்பதை ஏற்பதில்லை. சிவத்தோடு சேர்ந்து நின்றாலும் அது ஆன்மாவே என்பது அவர்களின் தர்க்க முடிவு. தலைவரின் பரம்பரை கவராக்கள் எனப்படும் சித்தாந்த தத்துவங்களை ஏற்றுக்கொண்ட சைவப் பிரிவினர் என்பதால் சித்தாந்த அடிப்படையில் கல்லறைகளை அமைந்தார்கள்.

எமது மாவீரர்களின் கல்லறை அமைப்பு முறையை பற்றியும், தலைவரின் ஆழமான சைவ ஞானத்தை பற்றியும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



கலப்பு இனங்களும் அவற்றின் பெயர்களும்..

ஐரோப்பியர்கள் ஆசியர்கள் கலப்படைந்து பிறந்தால் - பறங்கியர்கள்

ஐரோப்பியர்கள் ஆபிரிக்கர்கள் கலப்படைந்து பிறந்தால் - முலாட்டோக்கள்

ஆபிரிக்கர்கள் அமெரிக்கர்கள் கலப்படைந்து பிறந்தால் - சாம்போக்கள்

ஐரோப்பியர்கள் அமெரிக்கர்கள் கலப்படைந்து பிறந்தால் - மெசுடொசோக்கள்

ஆபிரிக்கர்கள் ஆசியர்கள் கலப்படைந்து பிறந்தால் -பலேசியன்கள்

இங்கு ஐரோப்பியர்கள் என்பது அங்கு வாழ்ந்த வெள்ளை இன மக்களையும், அமெரிக்கர்கள் என்பது அங்கு வாழ்ந்த செவ்விந்தியர்கள் மாயன் போன்ற அந்த மண்ணின் பூர்வீக மக்களையும், ஆசியர்கள் என்பது இந்த மண்ணில் வாழ்ந்த பூர்வீக மக்களையும், ஆபிரிக்கர்கள் என்பது அந்த மண்ணிற்கே உரிய கறுப்பின மக்களையும் குறிக்கும். யாரும் நாடுகளின் குடியுரிமை அடிப்படையில் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

அந்த மண்ணில் வாழ்வதால் அந்த மக்களின் மொழியை பேசுவதால் யாரும் அந்த இனமாக முடியாது. உலகம் முழுவதும் கலப்பினங்களை தனியாக அடையாளப்படுத்திக் கொள்ளும் வழக்கம் உள்ளது.

தமிழ் பேசுவோர் எல்லாம் தமிழர் என்று, இங்கே மட்டுமே இந்த கலப்பினத்தவர் அழிச்சாட்டியம் செய்கிறார்கள். நாம் இனங்கள் கலப்பினங்கள் பற்றிய உண்மையை அறியாதவரையே அவர்களின் ஏமாற்று வேலைகள் நடக்கும். வரலாற்றில் இருந்து உண்மைகளை அறிந்து கொள்வோம்.



ஓவியம் சொல்லும் கறுப்பு வரலாறு

 போர்த்துக்கேய ஆக்கிரமிப்பு பற்றி பிரசன்ன வீரக்கொடி என்ற சுதேச இலங்கையர் வரைந்த ஓவியம் இது. 

இந்த ஓவியத்தை கொஞ்சம் கவனமாக கவனித்து பாருங்கள். பல்வேறு உண்மைகளை இந்த ஓவியத்தில் மிக கவனமாக பதிவு செய்திருக்கிறார் அவர்.

வழக்கமாக போர்த்துக்கேய ஆக்கிரமிப்பு என்றால் எமது மனதில் தோன்றும் காட்சி என்ன? போர்த்துக்கேயர் என்றால் வெள்ளையர்கள் என்பதாக தானே எமது மனது கற்பனை செய்கிறது. கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு என்பதை மறைப்பதற்காக வெள்ளையர் ஆட்சி என்று திரும்ப திரும்ப சொல்லி எம்மை அவ்வாறு நம்பவைத்து விட்டார்கள். அப்படியானால் போர்த்துக்கேயர்கள் வெள்ளையர்கள் கிடையாதா? போர்த்துக்கேய எஜமானர்கள் வெள்ளையர்களாக இருந்தார்கள், ஆனால் அவர்களது சேவகர்கள், படைகள், அடிமைப் படைகள் என்பவை வெள்ளையர்களை மட்டும் கொண்டதல்ல. போர்த்துக்கேய எஜமானர்களும், முக்கிய தளபதிகள் என்று கூறப்படும் நபர்களும் மாத்திரம் வெள்ளையர்களாக இருந்தார்கள். படைகளில் வெள்ளை, பிரவுன், கறுப்பு என்று பலரும் இருந்தார்கள். அடிமைப் படைகளும், அப்படைகளின் கீழ்நிலை தளபதிகள் பலரும் கறுப்பர்களாக மட்டுமே இருந்தார்கள். 

அப்படியானால் இந்த ஓவியத்தில் சித்தரிக்கும் காட்சியின் சம்பவத்தை நினைவு கூருங்கள். சுதேச ஆண் ஒருவரின் தலையை கொய்து கையில் வைத்திருக்கும் போர்த்துக்கேயன் ஒருவன் இன்னொரு சுதேசி ஆணின் தலையை கொய்வதற்கு வாளுடன் நிற்கிறான். பின்னால் சுதேசி பெண்கள் போர்த்துக்கேய படைகளால் துஷ்பிரயோகம் செய்யபடும் காட்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த போர்த்துக்கேயர் படைகளில் கன்னங்கரேலென்ற தோற்றத்தில் கறுப்பர்கள் இருப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்திற்கு பின்னான காலத்தை நினைவு கூர்ந்து பாருங்கள்.அவர்களிடம் அகப்பட்ட ஆண்களை தலையை கொய்து கொன்றார்கள். பெண்களை துஷ்பிரயோகம் செய்தார்கள். அப்படியானால் அந்த கறுப்பர் படைகள் மட்டும் துஷ்பிரயோகம் செய்யாமல் ஒழுக்கமாக இருந்திருப்பார்களா? இல்லை, அந்த ஆபிரிக்க கறுப்பர்களும் சுதேச பெண்களை துஷ்பிரயோகம் செய்தார்கள். அந்த துஷ்பிரயோகத்தின் மூலம் சுதேச பெண்களுக்கு பிறந்த பிள்ளைகள் சுதேச பாரம்பரியத்தை பின்பற்றி வாழ அனுமதிக்கப்பட்டிருப்பார்களா? அல்லது போர்த்துக்கேய கிறிஸ்தவ பாரம்பரியத்தில் வாழ நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்குமா? நிச்சயமாக சுதேச அடையாளத்தை தாங்கி வாழும் சூழல் அன்று அவர்களுக்கு இருந்திருக்கவில்லை.

இந்த மண்ணில் அவ்வாறு உருவானவர்கள் இன்று யாராக இருக்கிறார்கள்? அந்த கறுப்பர்கள் வெள்ளையர்கள் துஷ்பிரயோகம் செய்து உருவாக்கிய வம்சாவளியினர் இந்த நாட்டைவிட்டு திரும்பிச் சென்ற வரலாறு ஏதாவது பதிவுசெய்யப்பட்டுள்ளதா? அவர்கள் இந்த நாட்டைவிட்டு திரும்பிச்சென்ற எந்த ஒரு வரலாறும் பதியப்படவில்லை. அப்படியானால் அந்த வம்சாவளியினர் இந்த மண்ணில் எம்முடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்று புரிந்து கொள்ளலாம். யார் அவர்கள்?

அவ்வாறு உருவாகி, அந்த போர்த்துக்கேய பாரம்பரியத்தை தாங்கி வாழும் மக்கள் தமிழர்களோ சிங்களவர்களோ கிடையாது என்பது உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?

வரலாறு என்பது வெறும் பாடப்புத்தகங்களில், யாரோ எழுதிய நூல்களில் இருந்து படித்து அறிவது கிடையாது. எம் அறிவைப் பயன்படுத்தி பல விடயங்களை தர்க்க பூர்வமாக அறிந்து கொள்ள வேண்டும்.



Sunday, 17 November 2024

யார் இந்த முலாட்டோக்கள்?

 #முலாட்டோக்கள் #Mulattos

இது என்ன புதிதாக இருக்கிறது என்று யாரும் யோசிக்க வேண்டாம். இது ஒரு இனக்குழுவை (கலப்பு) குறிக்கும் பெயர்.

நீங்கள் எல்லோரும் பறங்கியர் என்னும் இனத்தை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இலங்கையில் பெருமளவில் வாழும் இந்த பறங்கியர் என்னும் கலப்பினம் ஏனைய சில ஆசிய நாடுகளில் சிறிய அளவுகளில் உள்ளது. ஈரோசியா கலப்பினம் என்றும் இந்த பறங்கிய இனத்தை குறிப்பிடுகிறார்கள். ஐரோப்பியர்களுக்கும் ஆசியர்களுக்கும் பிறந்த பிள்ளைகளையும் அவர்களது சந்ததிகளையும் குறிக்கும் சொல்லே பறங்கியர்கள் என்பது. இவர்கள் தமது வாழ்வியல் பழக்க வழக்கங்கள், நடையுடை பாவனை, நம்பிக்கைகள் என்பவற்றை ஐரோப்பியர்களை பின்பற்றி வாழ்கிறார்கள். ஆனால் தொடர்பாடலை உள்ளூர் மொழிகளில் செய்கிறார்கள். அதுபோலவே,

முலாட்டோ என்பது ஐரோப்பிய ஆபிரிக்க கலப்பு இனத்தை குறிக்கும் பெயராகும். பறங்கியர்களும் முலாட்டோக்களும் பெருமளவில் ஒத்த ஒரே இயல்புகளுடன் இருந்தாலும், உடலமைப்பு நிறம் என்பவற்றில் மாத்திரம் வேறுபட்டு நிற்கிறார்கள். இன்று ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் இந்த முலாட்டோக்கள் அதிகமாக இருந்தாலும் முன்பு தென்னாபிரிக்கா மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் மாத்திரம் அதிகமாக இருந்தார்கள். 

இலங்கையிலும் இந்த முலாட்டோக்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள். இலங்கையில் உள்ள முலாட்டோக்களும் பறங்கியர்கள் போலவே உள்ளுர் மொழிகளையே தமது தொடர்பாடலுக்கு பயன்படுத்துகிறார்கள். ஐரோப்பிய வாழ்வியலை நம்பிக்கைகளை பின்பற்றி வாழ்கிறார்கள். இவர்கள் பொதுவாக தம்மை முலாட்டோக்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளாமல் உள்ளூர் இனங்களுக்குள் தம்மை மறைத்துக் கொண்டு வாழ முற்படுகிறார்கள். 

இலங்கை ஒரு ஆசிய நாடு, ஐரோப்பியர்கள் இந்த நாட்டை அபகரித்து ஆட்சி செய்தார்கள் அதனால் பறங்கியர்கள் உருவானார்கள் சரி, எப்படி முலாட்டோக்கள் வந்தார்கள் என்று கேள்வி எழுகிறது அல்லவா? ஐரோப்பியர்கள் இலங்கைக்கு படையெடுத்து வரும்போது மேற்காபிரிக்க நாடுகளில் இருந்து அடிமைப் படைகளைத் திரட்டி வந்தே தாக்கினார்கள். நாட்டை கைப்பற்றி ஆண்டார்கள். அதுதவிர ஐரோப்பிய காலனித்துவ காலத்தில் ஆபிரிக்காவில் இருந்து (அடிமை) மக்களை அழைத்து வந்து மாசிக் கருவாடு பதனிடுதல், செங்கல் சுடுதல், சுண்ணாம்பு சூளையிடுதல், போன்ற பல தொழில்களில் ஈடுபடுத்தினார்கள். அவ்வாறு வந்த ஆபிரிக்க அடிமைகளுக்கும் வெள்ளையர்களுக்கும் ஏற்ப்பட்ட கலப்பில் இலங்கையிலும் இந்த முலாட்டோக்கள் உருவானார்கள். இலங்கையின் வடக்கில் குறித்த மதப் பிரிவு ஒன்றில் இந்த முலாட்டோக்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்களே அந்த சபையின் தலைமைக்கு வரமுடியும் என்பதான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இலங்கையின் வடக்கில் உள்ள பிரபல தமிழ் தேசியம் பேசும் கட்சியின் தலைமையும் இந்த முலாட்டோக்கள் வசமே இருக்கிறது.

இந்த இனம் தவிர முலாட்டோ பறங்கிய கலப்பினம், முலாட்டோ ஆசிய கலப்பினம், ஆப்ரிக்க ஆசிய கலப்பினம் என்பவை எல்லாம் இந்த மண்ணில் இருக்கிறார்கள். 

ஆபிரிக்க ஆசிய கலப்பினம் "பலேசியன்" இனம் எனப்படுகிறது. அதாவது ஆபிரிக்க அடிமைகளும் உள்ளூர் மக்களும் கலப்படைந்து உருவான சந்ததிகள் பலேசியன்கள் எனப்படுகிறார்கள்.

தமிழ் பேசும் எல்லோரும் தமிழர்கள் இல்லை. சிங்களம் பேசும் எல்லோரும் சிங்களவர்கள் இல்லை. இந்த கலப்பினங்கள் இரண்டு பக்கமும் இருந்து செய்த சதிச் செயல்களே இலங்கையில் நடந்த பல விரும்பத்தகாத விடயங்களுக்கு காரணம். உள்நாட்டு முரண்பாடுகளுக்கு காரணம்.

உங்கள் நண்பர்களுக்கும் இந்த இனங்கள் பற்றிய தேடலை உண்டாக்குங்கள். இலங்கையின் சுபீட்சமான எதிர்காலத்திற்கு இந்த இனங்கள் பற்றிய புரிதல் அவசியமாகும்.




Saturday, 16 November 2024

வேளாளர் சைவ வேளாளர் என்ன வேறுபாடு?

வெள்ளாளர் என்று ஒரு ஜாதியே கிடையாது. வெள்ளை காரனுக்கு பிறந்தவர்கள் தங்களை மறைத்துக் கொள்ள கொண்டுவந்த அடையாளப் பெயரே வெள்ளாளர் என்பது.

அதுபோலவே பிள்ளை என்பதும் சாதிப் பெயரோ சாதிப் பட்டமோ கிடையாது. அது இன்னாருடைய பிள்ளை என்பதை குறிக்கும் ஒரு அடையாளச் சொல். பல்வேறு சாதிகளும் இனங்களும் இவ்வாறு பிள்ளை என்று குறிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தன.

சைவம் சிறப்புப் பெற்றிருந்த காலத்தில் சைவ வேளாளர் என்று ஒரு சமூகம் உருவாகி அது சிறப்புப் பெற்றும் இருந்தது. சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்த அடையாளம் அந்த சைவ வேளாளர் என்னும் சமுதாயமே அன்றி வேளாளர் என்பது கிடையாது.

வேளான் என்ற சொல் குறிக்கப்பட்ட ஒரு பணியை செய்பவர்கள் என்ற பொருளில் பயன்பட்டுள்ளது. குறித்தொதுக்கப்பட்ட வேலைகளைச் செய்யும் ஒரு சமூக கூட்டம் என்பதாக வேளான் வேளான்கள் என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டது. வர்ண நிலையில் சூத்திரர்கள் என்று கூறப்படும் வர்ணத்தை தமிழில் வேளான் என்பதாகவே தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அரசர் அந்தணர் ஏனோர் வேளாளர் என்பது தொல்காப்பியர் காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய வர்ணப் பகுப்பு பெயர்களாக உள்ளது. 

எல்லா மக்களும் இந்த நான்கு வர்ணங்களுக்குள் அடங்குவார்களா என்று கேட்டால் இல்லை என்பதே பதிலாகும். வர்ணம் வர்ணத்திற்குள் வாராத மக்கள் என்ற இரண்டு பெரும் பிரிவுகளாக இந்த சமூகம் பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வர்ண கட்டமைப்பிற்குள் வராத மக்களை வர்ணத்திற்குள் வாராத என்ற பொருளில் அவர்ணா என்று குறிப்பிட்டார்கள். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தேவையான கட்டமைப்பில் இருப்பவர்கள் வர்ணம் என்றும் மற்றவர்கள் அவர்ணா என்றும் குறிப்பிடப்பட்டார்கள். 

இந்த அவர்ணாக்கள் என்பவர்கள் ஒரு நாட்டிற்கு தீங்கான சமூகம், ஆபத்தை விளைவிக்கும் சமூகம் என்பதாகவே உலகம் முழுவதும் கருதப்படுகிறது. இவர்களுக்கு என்று குறித்தொதுக்கப்பட்ட எந்த வேலையும் கிடையாது. இலக்குகளும் கிடையாது. கிடைக்கும் வேலைகளை தேவைகளைப் பொறுத்து செய்வார்கள். இவர்கள் உழைக்கும் வர்க்கம் கிடையாது. அதனால் அடுத்தவன் பொருளை அபகரித்தல், திருடுதல், மோசடிகளுக்கு துணை போதல், காட்டிக் கொடுத்தல், சமூக விரோத செயல்களில் ஈடுபடுதல் என்று ஒரு நாட்டின் சீரழிவுக்கு காரணமான எல்லாவற்றையும் செய்வார்கள்.யுத்த கூலிப்படைகளாக இந்த அவர்ணா சமூகமே பயன்படுத்தப்படும். இவர்களை தான் கார்ல் மார்க்ஸ் லும்பர்கள் என்று குறிப்பிடுவார். மார்க்ஸ் கூறும் லும்பர்கள் என்பதும் இந்த மண்ணில் உள்ள அவர்ணா என்பதும் ஒரே மக்கள் கூட்டத்தையே குறிக்கும்.

உழைக்கும் வர்க்கம் தான் வேளான்கள் வேளாளர்கள் என்று அழைக்கப்படும். சைவத்திற்காக உழைத்த மக்கள் அதாவது, தான், தன்வீடு, தன் குடும்பம் என்று எண்ணாது இறைபணியை முதன்மையாக கருதி வாழ்ந்த சைவக் குடிகளே சைவ வேளாளர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இந்த சைவ வேளாளர்கள் என்பவர்கள் உழைக்காமல் வாழ்பவர்க்ளோ அடுத்தவன் உழைப்பில் வாழ்பவர்களோ கிடையாது. தன் உழைப்பில் வாழ்ந்து தான் சார்ந்த சமூகமும் வாழவேண்டும் என்று உழைத்தவர்கள். இவர்கள் அடுத்தவர்களுக்கு தீங்கினை விளைவிக்காத வகையிலான தொழில்களில் ஈடுபட்டார்கள். 

வேளாளர் குடிகள் சமூகத்திற்கு தேவையான அன்றைய அனைத்து தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர். மற்றவர்களுக்கு தீங்கு விளைவாக்காமல் அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் தொழில்களைச் செய்தனர். 

சைவ வேளாளர் குடிகள் தம் சமய சமூக பணிக்கு அதிக நேரத்தை செலவிடுவதால் அதற்கு தகுந்த தொழில்களில் ஈடுபட்டனர். பயிர்த் தொழிலிலும் தமது சைவ பணிக்கு அதிக நேரத்தை தரக்கூடிய பயிர் வகைகளையே பயிரிட்டனர். சைவ வேளாளர்கள் பயிர்தொழிலில் ஈடுபட்டார்களேயன்றி, பயிர்தொழிலில் ஈடுபடுபவர்களை சைவ வேளாளர் என்றோ வேளாளர் என்றோ கூற முடியாது.

வேளாளர் என்பது உழைக்கும் வர்க்கத்தின் பொதுவான பெயர், ஆனால் சைவப் பணியை தம் வாழ்வின் பெரும்பணியாக கொண்டு வாழ்ந்த மக்களே உயர் சைவ வேளாளர்கள். அதனால் வேளாளர் சாதி என்ற பெயரில் பல்வேறு சாதிகள் குடிகள் தம்மை அழைப்பது என்பதும், சைவத்தை அழிப்பதை தம் வாழ்வியலாக கொண்டவர்கள் அன்னிய அடிமைகள் தம்மை வேளாளர்கள் என்பதும், அன்னிய கிறிஸ்தவ ஆட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பதை புரிந்து கொள்வோம். வேளாளர் என்பது இன்று பெருமைக்குரிய அடையாளம் கிடையாது. அது இன்று அயோக்கியர்கள் ஒன்று கூடியிருக்கும் பொதுவான அடையாளம். வெள்ளையர்களுக்கு பிறந்தவர்கள், வெள்ளைத் தோல் உடையவர்கள், வெள்ளையனுக்கு சேவகம் செய்து பட்டம் பதவி பிள்ளை வாங்கியவர்கள் எல்லாம் இன்று தம்மை வேளாளர்கள் என்கிறார்கள். வெள்ளையனுக்கு பிறந்த பிள்ளைகள் எல்லாம் தம்மை வேளாளர், பிள்ளைகள், வெள்ளாளர் என்கிறார்கள். 

சைவ வேளாளர் என்பதே எமது சமூகத்தில் போற்றுதலுக்குரிய உயரிய அடையாளமாக இருந்தது. அதுவே உண்மையான உயரிய அடையாளமும் கூட. அதனால் நாம் அனைவரும் போலியான வேளாளர் அடையாளத்தை தாங்கி நிற்காமல், உயரிய சைவ வேளாளர் என்னும் அடையாளத்திற்கு உரியவர்களாக வாழ்வோம். 

சைவமும் தமிழும் போற்றி வாழ்ந்த அந்த உயரிய சைவ வேளாளர் அடையாளம் அன்னிய இனத்தவர் அடையாளமாகி அவமானம் அடைந்து நிற்பதை மாற்றுவோம்.

சிவ சிந்தனையை மனதில் விதைத்து சிவகதியை அறுவடை செய்பவய்களே உண்மையான சைவ வேளாளர்கள் என்கிறார் தேவார முதலிகளில் ஒருவர்.

மதம்மாறி கலப்படைந்து வாழ்பவர்கள், அன்னிய ஆட்சியில் தவறான முறையில் உண்டான சந்ததியினர், வேற்றிடத்தில் இருந்து வந்து சீர்கெட்ட தொழில் செய்து வாழ்பவர்கள் எல்லாம் இன்று வேளாளர் ஒட்டுடன் தம் சாதி அடையாளத்தை தாங்கி நிற்கின்றனர். 

வேளாளர் என்பது வேறு சைவ வேளாளர் என்பது வேறு என்ற அடிப்படையை புரிந்து கொள்வோம். வேளாளர் என்பதில் பெருமை இல்லை அவ்வாறு கூறுவது இழிவேயன்றி உயர்வல்ல என்று உணர்ந்து கொள்வோம். உயர்வான சைவ வேளாளர் அடையாளத்தை தாங்கி வாழ்வோம். அந்த அடையாளத்திற்கு உரியவர்களாக வாழ்வோம்.

(அந்தணர் அரசர் ஏனோர் வேளாளர் என்னும் நான்கும் வர்ணங்களேயன்றி சாதிகள் இல்லை. வேளாளர் என்பது வர்ணம். சைவ வேளாளர் என்பதே சாதி)

"மெய்ம்மையா முழவைச் செய்து விருப்பெனும் வித்தை வித்திப்

பொய்ம்மையாங் களையை வாங்கிப் பொறையெனு நீரைப் பாய்ச்சித்

தம்மையு நோக்கிக் கண்டு தகவெனும் வேலி யிட்டுச்

செம்மையு ணிற்ப ராகிற் சிவகதி விளையு மன்றே."



புலிகள் இயக்கத்தின் அழிவுக்கு காரணம் என்ன?

இயக்கத்தில் கத்தோலிக்க ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது பிரபாகரனின் தாழ்வு மனப்பான்மையா? புலிகள் இயக்கத்தின் வெள்ளிக்கிழமைகளில் மாட்டிறைச்சி உணவு,...